Friday, April 19, 2024
Homeபரிகாரங்கள்கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

சூரியன்+சனி

இந்த இணைவு ஜாதகருக்கும் தந்தைக்கும் எப்போதும் மன வேறுபாட்டை கொடுப்பதுடன், அரசு விஷயங்களில் தடை தாமதம் கொடுக்கும். இவர்கள் நெல்லிமரம், குல்மோஹார் ஆகியவற்றை வளர்க்கலாம். இடபற்றாகுறை உள்ளவர்கள் இந்த மரக்கன்றுகளை வாங்கி தானம் செய்யவும்.

சூரியன்+செவ்வாய்

இந்த கிரக சேர்க்கை தம்பதிகளின் பிரிவைக் குறிக்கும். தான் எனும் அகங்காரம் மிக்கவர்களாக மாற்றும். இவர்கள் வாதநாராயண மரம், வேப்ப மரம் ஆகியவற்றை வளர்க்கவோ மரக்கன்று தானமோ அல்லது இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதோ மிக நன்மை தரும்.

சூரியன்+ராகு

இந்த கிரக சம்பந்தமானது ஜாதகருக்கு எப்பொழுதும் ஒரு கிரகண மறைவு நிலையை தரும். ஜாதகரின் தந்தை அடிக்கடி நோய் அல்லது துன்பம் அல்லது ஏதோ வெளியில் செல்ல முடியாத துக்கத்தில் தவிப்பார். இந்த கிரக சேர்க்கை உடைய ஜாதகர்கள் தேக்கு மற்றும் மஞ்சள் கொன்றை மரம் வளர்ப்பது, அதன் மரக்கன்றுகளை தானம் தருவது அந்த மரங்களுக்கு நீர் ஊற்றுவது போன்றவை அருமையான பரிகாரங்கள் ஆகும்.

சூரியன்+கேது

இந்த இணைவு ஜாதகரை அல்லது அவரது தந்தையை ஒரு பிச்சைக்காரனாக்கும்.அல்லது சந்நியாசியாக்கி ஊரைவிட்டு வெளியேற செய்யும்.சிலரை நடத்தை கெட செய்யும் இந்த கிரக சேர்க்கைக்கு கடுக்காய் அல்லது வாதாங்கொட்டை மரம் வளர்ப்பது, இந்த மரக்கன்றுகளை தானம் செய்வதும் இந்த மரங்களுக்கு நீர் ஊற்றுவதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

சந்திரன்+சனி

இந்த கிரக சேர்க்கை புனர்பூ தோஷம் எனப்படும். முக்கியமாக மறுமணம் செய்யும் அமைப்பையும், நோயுள்ள தாயாரையும், மந்த புத்தியையும் கொடுக்கும்.இந்த கிரக சேர்க்கையுள்ளவர்கள் நாவல் மரம் மற்றும் மகிழ மரம் வளர்ப்பதும் இதன் கன்றுகளை தானம் செய்வதும் இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதும் சிறந்த பரிகாரம் ஆகும்.

சந்திரன்+செவ்வாய்

இந்த கிரக சேர்க்கை ஜாதகருக்கு கோபத்தையும், ஜாதகரின் சகோதரருக்கு கெடுதலையும், தீய புத்தியையும், அவ்வப்போது அடிபட்டு ரத்தம் வரும் சூழலையும் தரும். சிறுநாகப்பூ மரம், வில்வ மரம் வளர்ப்பதும் இதன் மரக்கன்றுகளை தானம் செய்வதும் இந்த மரங்கள் வளர நீர் ஊற்றுவதும் பயன் தரும் பரிகாரங்களாகும்.

சந்திரன்+ராகு

எப்போதும் மனத்துன்பம் உடைய தாயார் அமைவார். ஜாதகர் அவ்வப்போது மூளை குழம்பி ஒரு வித பைத்தியம் பிடிக்கும் மனநிலைக்கு செல்வார். அல்லது நீரினால் கண்டம், வயிற்றில் வலி என ஏதோ ஒன்று பாடாய்படுத்தும். இதற்கு நாகலிங்க மரம், கடம்ப மரம் வளர்ப்பதும் இந்த மரக்கன்றுகளை தானம் அளிப்பதும், இந்த மரங்களுக்கு நீர் ஊற்றுவதும் துன்பங்களிலிருந்து மீட்கும்.

சந்திரன்+கேது

இந்த சேர்க்கை ஜாதகரை அதிகமாக சிந்திக்க வைத்து ஒன்று சந்நியாசியாக்கிவிடும் அல்லது முட்டாளாக்கிவிடும். மிகச் சிலர் பில்லி, சூனியம், மாந்திரீக வழியில் திரும்பி விடுவர். ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் பாக்கு மரம் மற்றும் ஆலமரம் ஆகியவற்றை வளர்ப்பதும், தானம் அளிப்பதும் பாதுகாப்பதும் மிக நன்மை தரும்.

செவ்வாய்+சனி

இந்த கிரக சேர்க்கை உள்ள ஜாதகருக்கு எப்போதும் அவமானம், தோல்வி, வேலையில் நிலையின்மை அவ்வப்போது அடிபட்டு ரத்தம் சிந்துவது, கொடூர சிந்தனை, அதிஷ்டமின்மை, தாமத கலப்பு திருமணம், மிகுந்த சுயநலம் என பிறர் வெறுக்கும் குணங்கள் நிறைந்து காணப்படும். இவர்கள் வேப்ப மரம் மற்றும் அரச மரத்தை வளர்க்க வேண்டும்.இந்த மரங்களை பாதுகாப்பதும் வணங்குவதும், இந்த மரக்கன்றுகளை தானம் தருவதும் ஜாதகரின் துரதிஷ்டத்தை குறைக்க உதவும். கோவில்களில் இணைந்திருக்கும் இவ்விரு மரங்களை சுற்றி வந்து வழிபடுதல் நன்று.

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

செவ்வாய்+ராகு

கிரக இணைவு ஜாதகருக்கு எப்போதும் ஒரு மறைவு தனமான-மறைந்து வாழும்- சட்டப் புறம்பான செயல்கள் செய்யும் பயன்தராத வாழ்வையே கொடுக்கும். எதிர்மறையான செயல்களை மிகத் துணிச்சலாக செய்யத்தூண்டும். இவர்கள் தங்க அரளி மற்றும் மருத மரம் வளர்ப்பு, மரக்கன்று தானம், இந்த மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டு காப்பாற்றுவது போன்றவை நன்மை தரும்.

செவ்வாய்+கேது

இந்த கிரக சம்பந்தம் போலி சாமியார்களுக்கு ஏற்றது, புத்திசாலித்தனமான தவறான வேலைகளை செய்யத் தூண்டும். சிலரை போதை வஸ்துக்களை பயன்படுத்த செய்து நாசமாக்கும். பொதுவாக தீயவராக்கிவிடும் இதற்கு இலுப்பை மரம் கடம்ப மரம் ஆகியவற்றை வளர்ப்பதும்,இந்த கன்றுகளை தானமாளிப்பதும், இவை வளர்வதற்கு ஆவன செய்வதும் நல்லறிவை தரும் பரிகாரங்களாகும்.

செவ்வாய்+புதன்

இந்த கிரக சேர்க்கை ஜாதகருக்கு படிப்பில் தடைகள், அதிக குறும்புத்தனம், எதிர்த்துப் பேசுவது, நிலத்தகராறு, தோல்நோய் போன்றவற்றைத் தரும்.செஞசந்தன மரம் புரசை மரம் ஆகியவற்றை வளர்ப்பதும் தானம் அளிப்பதும் இந்த மரங்கள் அழிந்து போகாமல் காப்பாற்றுவதும் தூய்மையான குணத்தை கொடுக்கும்.

புதன்+ராகு

இந்த கிரக சேர்க்கை ஜாதகரை சட்டப் புறம்பான செயல்களை தைரியமாக புத்திசாலித்தனமாக எவரும் நம்பும்படி செய்ய தூண்டும். நயமாகப் பேசி ஏமாற்றுவர். எளிதாக கள்ள நோட்டு அச்சடித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கே விநியோகம் செய்யத் தூண்டும். அவ்வளவு தெளிவாக பிறரை ஏமாற்ற சொல்லித்தரும் கிரக சம்பந்தம் இது. இதற்கு இலந்தை மரம், புளிய மரம் ஆகியவற்றை வளர்க்கலாம். இந்த மரக்கன்றுகளை தானம் செய்யலாம். இந்த மரங்கள் வளர ஆவன செய்யலாம். இவற்றையெல்லாம் இவர்கள் தங்கள் சொந்த பணத்தில் செய்ய மாட்டார்கள் அடுத்தவர் பணத்தை அதிகரித்து அதில் அமர்க்களமாக பரிகாரம் செய்து விடுவார்கள்.

புதன்+கேது

இந்த கிரக சேர்க்கை பெரும்பாலும் காதல் விஷயங்களில் தான் வீரியம் காட்டும். இதனால் கல்வியில் தடை ஏற்படும். பலா மரம் இலுப்பை மரம் ஆகியவற்றை வளர்ப்பதும் இந்த மரக்கன்றுகளை தானம் அளிப்பதும் இவற்றை பாதுகாப்பதும் நன்று.

குரு +ராகு

இந்த கிரக கூட்டு ஜாதகரை நல்லவரா- கெட்டவரா என யோசிக்க செய்யும் வகையில் வாழ வைக்கும். மிக மிக மென்மையானவர்கள் போல் நடித்து மிக சுலபமாக பிறரை ஏமாற்றிவிடுவார். அல்லது ஆச்சாரமான மிக உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அனாச்சாரமாக சீரழிவார்கள். இவர்கள் ஓரளவு நல்லவர்கள் ஆவதற்கு நெல்லி மரமும் குன்றிமணி மரமும் வளர்க்கவும். அல்லது அதன் மரக்கன்றுகளை தானம் செய்யலாம்,அவை வளர உரமிட்டு ஆவன செய்யலாம்.

கிரகங்களின் இணைவும் அதற்கான விருட்ச பரிகாரங்களும்

சுக்கிரன்+ராகு

இந்த இணைவு ஒன்று காதல் கலப்பு வேறு மத திருமணம் செய்யத் தூண்டும் அல்லது மது போதை போன்ற தீய பழக்கவழக்கங்களை உருவாக்கிவிடும். சிலரை லஞ்சப்பணம், கடத்தல், போதை வஸ்துக்கள் விற்பனை மூலம் பெரும் பணக்காரராக்கிவிடும். இதற்கு எலுமிச்சை மரம் மற்றும் கருங்காலி மரம் வளர்க்கலாம். இதன் கன்றுகளை தானம் செய்யலாம். இவை வளர ஆவன செய்யலாம்.

சுக்கிரன்+கேது

இந்த கிரக சேர்க்கையும் திருமண வாழ்வை சற்று பாதிக்கும். சுக்கிரன் ராகு சேர்க்கையானது ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள வைத்து வெறுப்பேற்றும். சுக்கிரன் கேது சேர்க்கையானது பார்த்து வைத்து சேர்ந்த திருமண பந்தத்தில் முழுமையாக ஈடுபட விடாமல் வெறுப்பேற்றும். சுக்கிரன் கேது திருமண வாழ்வில் சற்று வெறுப்பை கொடுத்து சந்நியாசி ஆவதற்கு வழியமைக்கும். இதற்கு நந்தியாவட்டை மரம், மகிழ மரம் அல்லது செண்பக மரம் வளர்ப்பதும் அவற்றின் கன்றுகளை தானம் அளிப்பதும் நன்று. ஏதோ வீட்டை விட்டு ஓடாமல் வீட்டுக்குள்ளேயே கடவுளை வணங்கிக் கொண்டிருக்க இந்த விருட்சம் உதவி செய்யும்.

சனி+ராகு

கடுமையான பாவிகள் சேர்க்கை இது ஜாதகரை எப்போது சிறையில் கொண்டு அடைக்கலாம் என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருக்கும். வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு இருளான விஷயம், மறைவான செயல், திருட்டுத்தனமான செயல்களை இந்த ஜாதகர் எதிர்கொள்ளவேண்டி வரும். அரச மரம் அல்லது செம்மரம் அல்லது கடம்ப மரம் அல்லது புளிய மரம் ஆகியவற்றை வளர்த்து, தானமளித்து பராமரித்து வந்தால் சிறைக்குச் செல்லாமல் தப்பிக்கலாம்.

சனி+கேது

இந்த இரு கிரகங்களும் சேர்ந்து ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்க செய்யாது. வேலை கிடைத்தாலும் நீடித்து இருக்க விடாது. அவ்வப்போது ஆயுள் கண்டம் ஏற்பட்டு எப்போது இறைவனை சேர்வோம் என்ற விரக்தி மனப்பான்மை வந்துவிடும். வேறு சிலர் இதனை அப்படியே பயன்படுத்தி போலி சாமியாராகி பின் நல்லபடியாக செழிப்பாக அமோக அறுவடையுடன் இருப்பர் ஆலமரம் அரச மரத்தை வளர்த்து அதன் அடியில் அமர்ந்து விபூதி தர ஆரம்பித்து விடுவார்.

  • ஜாதகத்தில் சூரியன் சம்பந்தமான விருட்ச பரிகாரத்திற்கு நல்ல உயரமான பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் மரக்கன்றுகளை தானம் செய்ய வேண்டும்.
  • சந்திரன் சுக்கிரனுக்கு உணவு சம்பந்தம் மற்றும் நல்ல இனிப்பான பழங்கள் தரும் மரக்கன்றுகளை தானம் அளிக்கவும்.
  • செவ்வாய்க்கு சற்று கசப்பு தரும் காய் கனி மரக்கன்று தானம் ஏற்புடையது.
  • புதன் சம்பந்த பரிகாரத்திற்கு பழமில்லாத மரக்கன்று தானம் சிறப்பு
  • குருவுக்கு பழமையான பெரிதாக வளரக்கூடிய மரக்கன்றுகள் தானம் நன்று
  • ராகுவுக்கு பெரிய காடுகளில் வளரும் மரக்கன்று தானம் சிறந்தது
  • கேதுவுக்கு புதர் போல வளரும் மரக்கன்று ஏற்புடையது.
  • சந்திரன், கேது இருவரின் பரிகாரத்திற்கு மருந்து சம்பந்தமான மரக்கன்று தானம் நல்ல பலன் தரும்.

அவரவர் பிறந்த நாள் திருமண நாள் போன்ற முக்கிய விழாக்களில் மரக்கன்று தானம் தருவது நல்லது. ஜோதிடப்படி எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும் அது அந்த ஜாதகருக்கு மட்டுமே நன்மை தரும். இந்த விருட்ச பரிகாரம் மட்டுமே அவர்களுக்கு மட்டுமின்றி பறவைகள், மிருகங்கள், ஐந்தறிவு உயிரினங்களுக்கும் பயன்தரும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …



ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular