Thursday, March 28, 2024
Homeஆன்மிக தகவல்கருட புராணம்இறப்பின் நிலை-கருடபுராணம்

இறப்பின் நிலை-கருடபுராணம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இறப்பின் நிலை-கருடபுராணம்

சடலத்தின் தகனத்திற்கு பின் செய்யப்படும் சடங்குகள்!

தகனத்தின் மறுநாள் எரிந்த உடலிலிருந்து எலும்புகளையும் சாம்பலையும் சேகரிக்க வேண்டும்.

சிதைக்கு தீவைத்தவன் தான் உடுத்தியுள்ள ஆடைகளுடன் தலைமுழுகி , இறந்தவனை நினைத்து எள்ளும் தண்ணீ இறைக்க வேண்டும்.

தகனத்திற்கு வந்த உறவினர்கள் , மரித்தவனின் வீடுவரை மீண்டும் வந்து , அவனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவேண்டும்.

கருடா ! அதன் பிறகு தகனம் செய்த இடத்தில் சிறிது பாலைத் தெளிக்க வேண்டும். இவ்வேளையில் புத்திரன் அழக்கூடாது. அவ்வாறு அழுவானாயின் , இறந்தவனின் ஜீவனை அந்தப் பாலை உண்ணும்படி வற்புறுத்துவதாகும்.சிறிதளவு பாலையும் தண்ணீரையும் கலந்து , வீட்டின் புழக்கடை கூரையில் தெளிக்க வேண்டும்.

இவ்வேளையில் இறந்தவனின் ஜீவன் , தான் உலகத்தில் வாழும் காலத்தில் செய்தவற்றையெல்லாம் நினைத்து , மீண்டும் ஒரு உடல் தனக்குக் கிடைக்காதா என்று ஏங்கும். ஆனால் அப்போதே அப்பிரேத ஜீவனை , எமதூதர்கள் எடுத்துச் செல்ல வந்துவிடுவதால் , அந்த ஜீவன் தகனம் செய்யப்பட்ட இடத்தையும் , தான் கிடத்தப்பட்டிருந்த வீட்டின் புழக்கடையையும் பார்த்து ஏங்கும்.

அடுத்து , தகனத்திற்குப் பிறகு பத்து நாட்கள் எந்த இடையூறுமின்றி இறந்தவனைக் குறித்து அவனது புத்திரன் பிண்டம் இட்டு , கைநிறைய தண்ணீர் இறைக்க வேண்டும் . பிண்டத்தில் வேகவைத்த அரிசி , காய்கறிகள் , பழங்கள் அனைத்தும் இடம்பெற வேண்டும்.

இறந்தவனுக்குப் புத்திரன் இல்லையெனில் , அவனது மனைவி இப்பிண்டத்தைச் செய்யலாம். மனைவியும் இல்லாத நிலையில் அவனது சீடனோ , சகோதரனோ செய்யலாம். இப்பிண்டத்தைத் தகனம் செய்த இடத்திலோ அல்லது ஏதேனும் புண்ணிய க்ஷேத்திரத்திலோ செய்யலாம்.

பத்து நாட்கள் தொடர்ந்து செய்யப்படும் ஒவ்வொரு பிண்டத்தின் ஒரு பகுதி . மரித்தவனின் ஜீவன் பிண்ட சரீரம் எடுப்பதற்காக அளிக்கப்படும்.. ஒரு பகுதி எம தூதர்களுக்கு அளிக்கப்படும்.

இந்த பிண்டங்ளை அளிக்கும் போது இறந்தவனை நினைத்து அளித்தால் போதும்.வேறு எந்த மந்திரங்களோ சடங்குகளோ தேவையில்லை.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்51பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular