Friday, March 29, 2024
Home108 திவ்ய தேசம்பால்பாயசம் நைவேத்யம் செய்து வேண்டி கொண்டால் குழந்தை வரம் அருளும் அற்புத திவ்யதேசம்-திருக்கண்ணங்குடி

பால்பாயசம் நைவேத்யம் செய்து வேண்டி கொண்டால் குழந்தை வரம் அருளும் அற்புத திவ்யதேசம்-திருக்கண்ணங்குடி

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

திவ்யதேசம்-திருக்கண்ணங்குடி

திவ்யதேசம்-18

கண்ண பெருமானின் விளையாட்டுக்கள் தான் எத்தனை எத்தனை ? அவற்றில் ஒன்று நடந்த இடம்தான் திருக்கண்ணங்குடி.இது திருவாருருக்கு 14கிலோ மீட்டர் தொலைவில் சிக்கலுக்கும் கீவளுருக்குமிடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.

ஆறு , காடு , நகரம் , ஆலயம் , தீர்த்தம் என்று இந்த ஐந்தும் கொண்டு மிகவும் அற்புதமாக அமைந்த ஸ்தலம் என்பதால் பஞ்ச புத்ரா ஸ்தலம் அல்லது பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரம் என்று பெரிதும் போற்றப்படுகிறது.

ஐந்து நிலை கொண்ட இராஜகோபுரம் , இரண்டு பிராகாரங்களுடன் பக்த உலா மண்டபம்,சோபன மண்டபம் , மகா மண்டபம் அர்த்த மண்டபமும் கொண்டு

  • மூலவர் ஸ்ரீ லோகநாதப் பெருமாள் , சியாமளமேனிப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
  • தாயார் லோகநாயகி , உத்ஸவர் அரவிந்தவல்லி.
  • தீர்த்தம் ராவண புஷ்கரணி கோயிலுக்குள் எட்டு தீர்த்தக் கிணறுகள் உண்டு.
  • உத்ஸவர் தாமோதரப் பெருமாள்.இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தரிசனம் தருகிறார்.
  • விமானம் உற்பலாவதகம்
  • தல விருட்சம் மகிழமரம், காயா மகிழ் : உறங்காப்புளி ; தோலா வழக்கு ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி என்று பல்வேறு அதிசயங்களைக் கொண்டு இத்தலம் விளங்குகிறது.
திவ்யதேசம்-திருக்கண்ணங்குடி

வசிஷ்டர் , வெண்ணையக் கொண்டு கிருஷ்ணரை உருவமாகப் பிடித்து அது இளாகாதவண்ணம் வைத்து பகவானை வணங்கிக் கொண்டிருந்தார். பகவான் கிருஷ்ணன் , வசிஷ்டரை சோதிக்க ஒருநாள் தானே குழந்தையாக வந்து வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய்க் கிருஷ்ணனே உண்டு விட்டார் . இதைக் கண்டு பதறி , குழந்தையானக் கிருஷ்ணரைத் துரத்த அந்த குழந்தை இந்தக் கோயிலிலுள்ள மகிழமரத்தடியில் பதுங்கியது.அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனை யாரென்று அறியாமல் கட்டிப் போட்டதால் இதற்கு திருக்கண்ணங்குடி என்ற பெயர் வந்தது.

ஒருசமயம் திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்யும் பொருட்டு நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான ஒரு புத்த விக்ரஹத்தை எடுத்து வந்தார் . நள்ளிரவில் ஓய்வெடுக்க விரும்பிய பொழுது இத்தலத்திலுள்ள புளிய மரத்தின் அடியில் புதைத்து விட்டு நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்கி விடாமல் இந்த விக்ரகத்தை பார்த்துக் கொள் ‘ என்று புளிய மரத்தைப் பார்த்துச் சொன்னார். புளியமரமும், திருமங்கையாழ்வார் சொன்னபடி கேட்டு உறங்காமல் அந்த விக்ரகத்தைக் காத்தது. அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு ‘ உறங்காப் புளிய மரம் என்று பெயர் உண்டு.

2019 07 18 பால்பாயசம் நைவேத்யம் செய்து வேண்டி கொண்டால் குழந்தை வரம் அருளும் அற்புத திவ்யதேசம்-திருக்கண்ணங்குடி

இன்னொரு அதிசயம் இங்குள்ள கிணறுகளில் தண்ணீரே தென்படுவதில்லை இந்த ஊரில் என்ன வழக்கு நடந்தாலும் அது இன்றுவரை முடிவில்லாமலே சென்று கொண்டிருக்கிறது.

இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ‘ திருநீர் ‘ அணிந்து கொண்டு பெருமாள் காட்சியளிப்பது ஆச்சரியமான செய்தியாகும். கருடன் இரண்டு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இத்தலத்தில் தாயார் சன்னதியிலுள்ள மூலவரும் , உற்சவரும் ஒரே ஜாடையில் இருப்பது , வேறு எந்த கோயிலிலும் காண முடியாத அதிசயம்.திருமங்கையாழ்வார் . மங்களாசாஸனம் செய்திருக்கிறார்.

திவ்யதேசம்-திருக்கண்ணங்குடி

பரிகாரம்

பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்கள் கைவிட்டுப் போகாமல் இருப்பதற்கும் தம் குலமக்கள் வழிதவறி நடக்காமல் குடும்பப் பெருமையை நிலைநாட்டுவதற்கும் தெரியாத்தனமாக தவறுகள் செய்து வம்பில் மாட்டிக் கொண்டவர்களுக்கும் , கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் தத்தளிப்போர்க்கும் கடன் சுமையால் வாடுபவர்களுக்கும் இந்த ஸ்தலம் நன்மையைச் செய்யும்.இங்குள்ள பெருமாளை சேவித்து , அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் போதும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாகப் பறந்துவிடும்.

கோவில் இருக்கும் இடம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular