லக்கினத்திற்கு 2ல் சந்திரன்
தன சேர்க்கையுண்டு,அடக்கம் அமைதி உள்ளவன்.நல்ல கல்வி , சமயமறிந்து பேசும் தன்மை உடையவன்.மனைவிக்கு ஜலகண்டம் , பிறர் பெண்ணை விரும்பும் குணம்.பெண் குழந்தைகளின் மேல் பிரியம்.நல்ல குடும்பத்தில் பிறந்தவன்.
வீட்டுச் சாமான்கள் நிறைய சேர்ப்பான். விவசாயத்தில் மேன்மையுண்டு.
நிறைய சொத்துக்கள் சேரும் வாய்ப்பு உண்டு.லட்சுமி கடாட்சம் பூரணமாக உண்டு.
பொது மேடைகளில் பேசும் தன்மை உண்டு.
மகாநிபுணன் என்ற பெயர் ஏற்படலாம். செலவுக்கு ஏற்ப எப்போதும் பணம் எப்படியும் கிடைத்துக் கொண்டே இருக்கும். அழகிய தோற்றமுள்ள இவர்களுக்கு கல்வியில் எங்கேயாவது சிறிய தடை ஏற்படும்.அடுத்தவரை வசீகரிக்கும் விதம் பேசுவார். இனிக்க இனிக்கப் பேசி தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்.
வளர்பிறை சந்திரனுடன் வேறு கிரக சேர்க்கை இல்லா விட்டால் என்றும் வறுமை வராது.தன் வயதிற்கும் அதிக வயதுடைய பெண்களிடம் தொடர்பு ஏற்படலாம். பெரிய குடும் பஸ்தன் ஆவான்.பாவ – கிரக பார்வை – சேர்க்கை அடைந்தாலும்.
தேய்பிறைச் சந்திரனால் பாவ ராசி அடைந்தாலும் நற் பலன்கள் நடைபெறாது.சதியால் பொருள் சேதம் , ஜலபயம் , கறவை மாடுகள் ஏற்படும் வசதிகளை அனுபவிக்கும் யோகம் , பெண் உறவினையும் ஆடம்பர வாழ்வினையும் தமது மனம்போல அனுபவிப்பார். இவர்களுக்கு அடிபட்டபின் தான் நல்ல புத்தி ஏற்படும்.
சந்திரன் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரத்தில் லக்னாதிபதி, தசா புத்தி அந்தரநாதன் இருப்பின் சுபபலன்கள் பலப்பட்டு சிறப்பு தரும் தீய பலன்கள் பலப்படும்.