Friday, July 26, 2024
Homeசக்தி தரும் மந்திரங்கள்மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்-தொடர்ச்சி

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்-தொடர்ச்சி

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

  • ஜபம் செய்யும் மாலையை இறைவனின் அல்லது உபாசனா மூர்த்தியின் பாதத்தில் வைத்து விடுவது சிறப்பு.
  • கட்டை விரலினால் உருட்டினால் மோட்சம் .
  • ஆள்காட்டி விரலினால் உருட்டினால் சத்துரு நாசத்தை தரும்.
  • பாம்பு விரலால் உருட்டினால் செல்வம் சேரும்.
  • மோதிர விரலால் உருட்டினால் மனசாந்தி ஏற்படும்.
  • சுண்டு விரலால் உருட்டினால் தற்காப்பு கிடைக்கும்.
  • மேற்கே அமர்ந்து கிழக்கு பார்த்து ஜபம் செய்தால் ஜனவசியம் ஆகும்.
  • தென்கிழக்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி ஆகும் ..
  • தெற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் ஏவல் வைக்க எடுக்கலாம்.
  • தென்மேற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் பகை வெல்லும்.
  • மேற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் தன லாயம் தரும்.
  • வடமேற்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் ஆகர்சனத்தை தரும்.
  • வடக்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் மன சாந்தி ஏற்படும்.
  • வடகிழக்கு பார்த்து அமர்ந்து ஜபம் செய்தால் மோட்சத்தை தரும்.

என பழைய சுவடிகள் சித்தர்கள் முறையை சொல்லி உள்ளனர் .

“ ஒரு மந்திரத்தை ஒருவன் ஒரு லட்சம் முறை ஜபித்தால் அந்த மந்திரம் சேதனமாக ( உயிருள்ளதாக)ஆகிவிடுகிறது.

நல்ல ஊக்கத்தோடு ஒருவன் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தாலும் அவனது மனம் தூய்மையடைந்து விடுகிறது . அதனால் மனமும் மகிழ்ச்சியடைந்து பேரானந்தமும் ஏற்படுகிறது.

‘ உனது சக்திக்கு ஏற்ற வகையில் உன்னுடைய மந்திரத்தை ஒரு லட்சம் தடவையோ அல்லது பத்தாயிரம் தடவையோ ( ஆவர்த்தி ) ஜபம் செய் . மந்திரம் நீண்டதாக இருந்தால் முறையோ , ஐந்தாயிரம் அல்லது இரண்டாயிரம் முறையோ ஜபம் செய்தால் போதுமானது ‘ என்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவராகிய சுவாமி சாரதானந்தார் கூறியுள்ளார் .

சாதாரணமாக ஜபமாலை ஜபிப்பவனின் வலது நடுவிரல்மீது வைத்து உருட்டப்படுகிறது.

” ஜபமாலையை மார்புக்கு நேராக வைத்துக் கொண்டு ஜபம் செய்வதே மேலானது . தொப்பூழ்க்கு நேராகவும் அது தாழ்த்தப்படக் கூடாதென்றும் சொல்லப்படுகிறது . அவ்விதம் செய்வது கடினமாக இருந்தால் ஒரு சால்வையின் , அல்லது துணியின் ஒரு பகுதியில் சாதகன் தனது கைகளை மூடிக்கொண்டு ஜபம் செய்யலாம் ‘ ‘ என்று சுவாமி சாரதானந்தர் மேலும் அறிவுரை வழங்குகிறார்.

” மனம் ஒருமுகப்படுகிறதோ இல்லையோ , பகவானின் திருநாமத்தை இடைவிடாமல் ஜபம் செய்து வாருங்கள் . தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை இறைவனின் நாமத்தை ஜபிப்பது என்பது நமக்கு நன்மையைச் செய்யும் ” என்று அன்னை ஸ்ரீசாரதாதேவியார் கூறியுள்ளார்.

மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்
மந்திரங்கள் ஜபமும் அதன் சக்தியும்

இருக்கை :

பொதுவாக ஜபம் தர்ப்பாசனம் துணியாலான ஆசனம், கம்பளி ஆசனம் போன்றவற்றில் ஏதேனும் ஓர் ஆசனத்தில் ( இருக்கையில் ) அமர்ந்த நிலையிலேயே பழகப்படுகிறது.

சுத்தமான ஓர் இடத்தில் அதில் உயரமில்லாமலும் , அதிகத் தாழ்வாக இல்லாமலும் ஆசனத்தை அமைத்து , அதன்மீது தனது தர்ப்பைகளையும் அவற்றின் மீது மான்தோலையும் , துணியையும் பரப்பி “ஆத்ம சுத்திக்காக , புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தி , எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி ஒரு சாதகன் யோகம் பழக வேண்டும் ” என்று பகவத்கீதை கூறுகிறது.

கம்பளி அல்லது துணியாலான ஆசனங்களே சிறந்தவை என்று அருள் நூல்கள் கருதுகின்றன .

இரும்பு,பித்தளை அல்லதுஈயம் ஆகியவற்றாலான ஆசனங்களை ஒரு சாதகன் உபயோகப்படுத்தக் கூடாது ‘என்று புராணம் ‘ கூறுகிறது.

” ஓர் ஆசனமானது மிகவும் உயரமாகவோ அல்லது மிகவும் தாழ்வாகவோ அல்லது உடைந்தோ இருக்கக் கூடாது ‘ என்று ‘ கந்தர்வ தந்திரம் குறிப்பிடுகிறது.

ஒருமந்திரத்தை உரக்க உச்சாடனம் செய்தால் அது தனது வலிமையை இழந்துவிடுகிறது. தீவிர மந்திர ஜபத்தால் அந்த மந்திரத்தின் மூர்த்தி நமக்கு காட்சி தருகிறார்.

எந்த மந்திரமும் முதலில் ‘ ஓம் ‘ பிரணவமும் இறுதியில் ” நமஹ , சுவாஹா , வௌஷட் , வஷட் , பட் , ஹும் , சுவதா ” என்ற ஏழினுள் ஒன்று பெற்று நிற்கும் . இந்த ஏழும் சப்தகோடி மகாமந்திரம் | ( கோடி – இறுதி ) எனப்படும் .

1.நமஹ-இது அழைத்தால் , ஐஸ்வர்யங்களை அளித்தல்

2. சுவாஹா– தேவதைகளைத் திருப்தி செய்தல்

3.சுவதா – இது தைரியத்தையும் , வசீகரத்தையும் தருதல்

4. வௌஷட் – இது தேவதைகளை இழுத்தல்

5.வஷட் – இது தேவதைகளை வசம் செய்தல்

6.பட் – இது விக்கினங்களை நீக்குதல்

7.ஹும் – இது சீவராசிகளை ஒடுக்குதல்

8.ஹும்பட் – இது விரைந்து செயலை முடித்தல்

குறிலாக உள்ள : ஹம் , ஹும் என்னும் பீஜ மந்திரங்கள் பாவங்களைப் போக்கும்

நெடிலாக உள்ள : ஹாம் , ஹைம் , ஹௌம் என்னும் பீஜ மந்திரங்கள் வீடு பேற்றை அளிக்கும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular