LATEST ARTICLES

குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்

குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் அவர் ஒன்பதாம் இடத்தில் உச்சத்தன்மையுடன் ஜொலிக்கிறார். கூடவே குருபகவானும் உள்ளார். இந்த வருட கிரக நிலைப்படி சிம்ம ராசியினரின் பணம் அத்தனையும் எங்காவது லாக் ஆகிவிடும். அல்லது பணத்தை வாங்கியவர்களால் திருப்பித் தர இயலாமல் போய்விடும். வெளிநாட்டில் ஒளித்து வைத்த பணம் திரும்ப உங்கள் கைக்கு வர தடுமாறும். பணத்தைக் கைக்கு கொண்டு வரும் முயற்சிகள் கடும் தோல்வியடையும். பணம் மிக பத்திரமாக, மறைவாக இருக்கும். ஆனால் அனுபவிக்க முடியாது.

குரோதி வருட கிரகநிலைகள்

குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்

உங்கள் இளைய சகோதரியின் காதல் விஷயம் வெளியே வந்து களேபரம் ஆகிவிடும்.அல்லது உங்கள் இளைய சகோதரி அரசியலில் நுழைய அது உங்களுக்கு மகா எரிச்சலை தரும். குத்தகை எடுத்தவர்கள் தொகை தராமல் ஏமாற்றுவர். உங்கள் பணியாளர்கள் நிறைய பொய் சொல்வதோடு வேலையில் சுணக்கம் காட்டுவர். உங்கள் கைபேசி தரும் தகவல் மூலம் உங்கள் வங்கி கணக்கு பணம் வழித்தெடுக்கப்படும் .

சிம்ம ராசியின் எட்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் சிம்ம ராசியினரை கும்மி எடுக்கும். வீடு, வாகன மாற்றம் உண்டு. உங்கள் சொந்த வீட்டை பழுது பார்க்கும் நிலை ஏற்பட்டு அதுவரை வாடகை வீட்டில் தங்கலாம் அல்லது இப்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வாழ்க்கைத் துணையின் வேலையின் பொருட்டு வீடு மாற்றம் ஏற்படும்.

இப்போது பிரசவம் ஆகும் பெண்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும். இந்த தமிழ் புது வருடத்தில் எட்டாம் இடத்தில் ராகுவும், ஏழாம் இடத்தில் சனியும் இருந்து பெரிய இக்கட்டுகளை கொடுக்க முற்படும்போது உங்கள் வாரிசுகள் அரணாக இருந்து காப்பாற்றுவார்.

குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்

சிறுநீர் பிரச்சனை, மூத்திரக்கல் தோன்றுவது என வலி வரும் இதனால் அடிவயிற்றில் வலி எடுக்கும். உங்களில் நிறைய சிம்ம ராசியினர் அரசு வேலைக்கு செல்ல இயலும். சிலர் ஆசிரியர் வேலைக்கு செல்வர். சிலர் கணக்கு எழுதும் அக்கவுண்ட்ஸ் துறையில் சேர்ந்து விடுவர். உங்கள் எதிரிகள் பம்மி இருட்டிலிருந்து கல் எறிவர், எதிரிகளை இனங்கான இயலாமல் தவிப்பீர்கள்.வழக்குகள் கிணற்றில் போட்ட கல் மாறி இருக்கும்.

உங்கள் பெற்றோர் சம்பந்தத்துடன் ஒன்று விருப்ப திருமணம் அல்லது கலப்பு மனம் என ஒன்று நடக்கும். இப்போது தொடங்கும் வியாபாரத்தில் உங்கள் பெற்றோரே பங்குதாரர் ஆகிவிடுவர். இந்த வருடம் உங்களுக்கு நிறைய செலவாகும் ஆனால் முக்காவாசி செலவுக்கு கணக்கே எழுத முடியாது எல்லாம் மறைமுக செலவாக இருக்கும்.

குரோதி வருட குரு பார்வை

குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்

பரிகாரம்

சூரியனார் கோவில் சென்று தரிசனம் செய்து வணங்கவும். சூரியன் எதிரில் குரு இருப்பார் அவரையும் நன்கு சேவித்து கொள்ளவும்.

சனி+செவ்வாய் சேர்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை பன்னீர் பூ மாலை மற்றும் அகல் விளக்கில் புங்கம் எண்ணெயில் 19 மிளகை மூட்டை கட்டி சிகப்பு நிறத்தில் கொண்டு தீபம் ஏற்றவும்.

இந்த வருடம் உங்களுக்கு நாட்களை தள்ளுவதே பெரும்பாடாக இருக்கும். இதில் பிறருக்கு என்ன உதவி செய்ய இயலும். வார்த்தைகளால் பிறரை நோகடிக்காதீர்கள் அதுவே பரிகாரம்.!!

இன்றைய ராசி பலன் – 19.3.2024

இன்றைய ராசி பலன் – 19.3.2024

மேஷம்

குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைகேற்ப வாய்ப்புகள் அமையும்.

ரிஷபம்

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சகோதர, சகோதரிகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

மிதுனம்

குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள்.

கடகம்

எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

சிம்மம்

பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். அசையா சொத்துகளில் உள்ள பிரச்சினைகள் தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.

இன்றைய ராசி பலன்

கன்னி

பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

துலாம்

பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்

மனதில் குழப்பம், தேவையற்ற கவலை உண்டாகும். வீண் பிரச்சினைகள் தேடி வரும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 01.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும் என்றாலும் மதியத்திற்கு பிறகு சாதகப் பலன் கிடைக்கும்.

தனுசு

எந்த ஒரு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பிற்பகல் 01.37 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழிலில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

மகரம்

தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்

உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

இன்றைய பஞ்சாங்கம்– 19.3.2024

தமிழ் தேதி பங்குனி 6,செவ்வாய்
ஆங்கில தேதி மார்ச்சு -19
திதி தசமி இரவு 12.22 மணி வரை பின் ஏகாதசி
யோகம் சித்த யோகம்
கரணம் தைதுளை
நட்சத்திரம் புனர்பூசம் இரவு 8.10 மணி வரை பின் பூசம்
வார சூலை வடக்கு
சந்திராஷ்டம ராசி விருச்சிகம்
ராகு காலம் 3.25PM -4.57PM
எமகண்டம் 9.20AM -10.51AM
நல்ல நேரம் -காலை 10.50AM -11.18AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.18PM -1.18PM ,4.48PM 6.48PM
நல்ல நேரம் -இரவு 7.18PM -8.18PM
இன்றைய சிறப்புகள் கரிநாள்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் – 18.3.2024

இன்றைய ராசி பலன் – 18.3.2024

மேஷம்

பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

ரிஷபம்

எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கடகம்

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.

சிம்மம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் அமையும்.

இன்றைய ராசி பலன்

கன்னி

எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்

விருச்சிகம்

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தனுசு

குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும்

மகரம்

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்

பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்

வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது.

இன்றைய பஞ்சாங்கம்– 18.3.2024

தமிழ் தேதி பங்குனி 5,திங்கள்
ஆங்கில தேதி மார்ச்சு -18
திதி நவமி இரவு 10.49 மணி வரை பின் தசமி
யோகம் சித்த/அமிர்த யோகம்
கரணம் பாலவம்
நட்சத்திரம் திருவாதிரை மாலை 6.10 மணி வரை பின் புனர்பூசம்
வார சூலை கிழக்கு
சந்திராஷ்டம ராசி விருச்சிகம்
ராகு காலம் 7.49AM -9.20AM
எமகண்டம் 10.51AM -12.23AM
நல்ல நேரம் -காலை 6.19AM -7.19AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.23PM -2.19PM
நல்ல நேரம் -இரவு 6.19PM -7.38PM
இன்றைய சிறப்புகள்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய பஞ்சாங்கம்

அகத்தியர் முனிவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ? எப்படி வழிபடவேண்டும் ?

அகத்தியர்

அகத்தியர் தமிழுக்கான முனிவர் என்றும், சித்த மருத்துவ முறைகளை வழங்கிய முனிவர் என்றும் அகத்திய முனிவர் குறிப்பிடப்படுகிறார். பதினென் சித்தர்களில்
மிக பிரபலமானவர் என்றால் அது அகத்தியர்தான். தெய்வங்களுடனும், மன்னர்களுடனும் தொடர்புபடுத்தி அறியப்படும் சித்தர் இவர்.

சித்த வைத்தியத்தின் பிதாமகர்களில் இவர் முதன்மையானவர். வடக்கே
இமயமலையும் தெற்கே நம் பொதிகை மலையும் இவருக்கு ஒன்றேதான். தமிழும் மருத்துவமும் ஜோதிடமும் இறைபக்தியும் இவரிடம் இருந்து மணம் பரப்பின. தமிழகத்தில் உலா வந்த மாபெரும் சித்தரின் சுவையான சரிதம் இது! பழந்தமிழ் பாடல்களிலும் சரி,தேவாரம் முதலான பக்தி இலக்கியங்களிலும், வேதங்களிலும் இவர் பற்றிய பல குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. வேதகாலத்து சப்த ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் போற்றப் படுகிறார்.

அகத்தியர்

இவை போதாதென அகத்தியர் குறித்த எண்ணற்ற செவிவழிகதைகளும் வழங்கப் படுகின்றன. இல்லறத்தில் துறவறத்தை கடைப்பிடித்தவர் அகத்தியர். மனைவியின் பெயர் லோப முத்திரை, மகன் பெயர் சங்கரன். இவர் எழுதிய சமரச ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கிய நரம்பு முடிச்சுக்கள் பற்றி மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்:

தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.

பதினாறு போற்றிகள்:

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி!
போற்றி!

அகத்தியர்

நிவேதனம் பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும்.

நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.

அகத்திய முனிவரின் பூசா பலன்கள்

இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும், கல்வித்தடை நீங்கும், புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும், முன்வினை பாவங்கள் அகலும், பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும், பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும், பூர்விக சொத்துக்கள் கிடைக்கும், சகலவிதமான நோய்களும் தீரும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி

ஓம் அகதீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்

குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன்!! வெகுவேக கிரகம். இந்த புத்தாண்டில் இவர் அமர்ந்திருப்பது விரைய வீட்டில். நல்ல நாளிலே இந்த கடக ராசிக்காரர்கள் ஓடிக்கொண்டிருப்பார்கள். சும்மா ஆடுறவனுக்கு சலங்கை கட்டின கதையாகிவிடும். எப்போதும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் இவர்களுக்கு கிடைக்கும் தலைமை பதவி சுகம். காணாததை கண்டது மாதிரி குதிப்பர். அவசரத்தில் அண்டாவுக்குள் கை போகாது என்பர் அதுபோல் இந்த வருடம் இந்த கடக ராசியர் எளிதில் முடிக்க வேண்டிய வேலைகளையும் சிக்கலாக்கி தவிப்பர்.

இந்த வருடம் பண வரவு மிகவும் சிறப்பாக இருக்கும். இதற்கு காரணம் இவர்களுடைய வேலையில் கிடைக்கும் பதவி உயர்வாக அமையும். சிலருக்கு அரசு பணி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. இந்த கடக ராசி குழந்தைகளின் தகப்பனார் மிக நல்ல வேலை கிடைக்க பெறுவார். அல்லது புது தொழில் ஆரம்பித்து விடுவார். ,

குடும்ப நிலையில் கவுரவம் கிடைக்கும். குடும்பம் சம்பந்தமான சேவை ஒன்று பாராட்டுக்குரியதாய் இவர்களது தந்தையின் செயல் ஒன்று அளப்பரிய பெருமை பெற்று தரும். அரசு சார்பில் வெகுமானம் கிடைக்கும். அரசு வேலை அந்த குடும்பத்தில் ஒருவருக்கு கிடைக்கும் இவர்கள். குடும்பத்தில் நிறைய தங்கம் இந்த வருடம் வாங்குவார்கள்.

உங்கள் சகோதரனுக்கு சிறு தடைகளுக்கு பின் திருமணம் நடக்கும். வெளிநாட்டுக்கு சகோதரன் சென்றால் செலவு உங்களுக்கு அதிகமாகும். வெளிநாடு சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்று சிறு தடைக்குப் பின் உறுதி செய்யப்படும். தொலைபேசியை மாற்றுவீர்கள். நிறைய சிறுதூரப் பயணம் உண்டு. பணியாளர்கள் அடிக்கடி மாறுவார்கள்.

குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

இந்த வருடம் கண்டிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவீர்கள். மனை விஷயம் இழுத்தடிக்கும். புது வாகன வசதி உண்டு.பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களின் பாடப்பிரிவில் தலைமை ஏற்பர். இந்த ராசி குழந்தைகளின் தாயார் ஒரு பதவி உயர்வு பெறுவர். உங்களில் சிலர் பசு மாடு வளர்க்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் குடியிருப்பின் மேற்பார்வையாளராக உயர்வு பெறுவீர்கள்.

குழந்தை வரம் வேண்டுவோர் பிரார்த்தனைகள் மட்டுமே செய்ய இயலும். உங்கள் வாரிசுகளினால் கொஞ்சம் அவமானப்பட நேரிடும். அது வாரிசுகளின் காதல் விஷயமாகவும் இருக்கலாம், வெகு துன்பத்தை தரும் பங்கு வர்த்தகம் பக்கம் கூட தலை வைத்து பார்க்கக் கூடாது. பங்கு வர்த்தகம் வெகு நஷ்டம் கொடுக்கும்.

உங்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய் மிகும். தலை ரொம்ப வலிக்கும். அதற்கு மருத்துவர் கண்ணாடி போட்டுக் கொள்ளச் சொல்வார். கடக ராசியினருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மீதுள்ள வழக்குகளில் வெற்றி மற்றும் பெருமையும் கிடைக்கும். உங்கள் தொழிலில் உங்களுக்கு சமமான எதிரிகள் தோன்றுவர். பண கணக்குகள் வில்லனாகும்.

image 11 குரோதி வருட பலன்கள் 2024-கடகம்

இந்த வருடம் திருமண விஷயம் என்பது நிறைய வில்லங்கத்தோடு நடக்கும். அநேகமாக காதல் திருமணமாக இருக்கும். அதுவும் ஊரை போல், நாட்டைப் போல் திருமண மண்டபம், கோவில்களில் நடக்காமல் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும். திருமணத்தில் சண்டையும் ரத்தம் சிந்துதலும் உண்டு. கலப்பு திருமணமாக இருக்கும். நாடு விட்டு நாடு வந்தும் கல்யாணம் ஆகும். சில ஏமாற்று நபர்கள் பெண்களை காதலித்து தவிக்க விட்டு பெண் குழந்தையோட பஞ்சாயத்து பேசி திருமணம் செய்வார். இந்த வருடம் வரும் வியாபார பங்குதாரர்கள் பொல்லாதவர்களாக இருப்பார்.

இந்த வருடம் உங்களுக்கு அளப்பரிய நன்மைகளை தந்தாலும் தொழில் மட்டும் சற்று நெருடலாக உள்ளது. உங்கள் தொழிலில் ஏதோ ஒரு நெருக்கடி ஏற்படும். அது உங்களின் உடல்நிலை பாதிப்பால் அல்லது உங்கள் வாரிசும் மனைவியும் சண்டையிடுவதாலும் தொழில் அல்லாடும். பூர்வீக இடத்தின் மீதுள்ளவ ழக்குகள் உங்களை தலை சுற்ற வைக்கும்.

பரிகாரம்

உங்கள் ராசிநாதன் 12-ல் இருப்பதால் இந்த வருடம் கண்டிப்பாக ஒரு தடவையாவது கடலோரம் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் இதற்கு ஏற்ற கோவில் ஆகும். கடக ராசிக்கு அஷ்டமசனி நடப்பதால் அறந்தாங்கி எட்டியதளி என்ற ஸ்தலம் சென்று வழிபடவும்.

சனி+செவ்வாய் சேர்க்கைக்கு திங்கள் கிழமைகளில் அல்லி பூ மாலை, ஜவ்வரிசி பாயாசம், சந்தன கலர் துணியில் 20 மிளகை மூட்டை கட்டி தீபம் ஏந்தவும்.

குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம்

குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம்

புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!! உங்கள் ராசியின் அதிபதியான புதன் நீசமாகி வக்கிரமாகி உள்ளார்.எனவே உச்சநிலையை அடைகிறார். இந்த வருடம் சற்று தேங்கி நின்று தடையாகி பின் வேகம் எடுத்துச் செல்லும். உங்கள் ராசிநாதன் இருக்கும் நிலையானது உங்கள் காரியத்தில் கண்ணாக இருக்க செய்யும். சுயநலமாக சிந்திக்க தூண்டும். பிறருக்கு உதவி செய்து நீங்கள் ஏமாற்றமடைந்ததால் ஏற்பட்ட பின் விளைவாகவும் இருக்கக்கூடும்.

உங்களின் விடாமுயற்சி வெற்றியாகி பணம் வந்து கொட்டும். சிலர் தங்கள் வாரிசுகளின் பெயரில் பெரிய தொழில் கூடங்களை திறந்து விடுவீர்கள். சிலர் வெளிநாட்டிற்கு சென்று முதலீடு செய்து விடுவீர்கள்.

குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம்

மிதுன ராசி பெண்களுக்கு கரு தங்குவதில் சற்று சிரமம் ஏற்படும். எனவே கர்ப்பமான பெண்கள் முழு மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தால் அழகான, ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம். நெடு நாட்களாக குழந்தைக்காக மருத்துவ உதவி பெற்றவர்கள் இந்த வருடம் செயற்கை கரு வளர்ச்சி மூலம் வாரிசு கிடைக்க வழிவகை உண்டாகும். உங்களில் சில பெண்கள் கல்வி விஷயமாக வெளிநாடு செல்வர்.

பங்கு வர்த்தகம் எத்தனை வருமானம் தருகிறதோ! அத்தனை இழப்பும் தரும். உங்களுக்கு இப்போது உண்டாகும் காதலி மிகப்பெரிய அந்தஸ்து உள்ள இடத்தை சேர்ந்தவராக இருப்பார்.

இந்த வருடம் உங்கள் தந்தைக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு காலில் அடிபடக்கூடும். வெளிநாட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு. அரசியலில் மந்திரிகளுக்கு உதவியாளராக இருக்க முடியும்.

இந்த வருடம் திருமணமாக வேண்டியவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். வரன் மிகவும் புகழ்பெற்றவராக இருப்பார். அல்லது அரசியல் பின்புலம் உடைய குடும்பமாக அமைவார். பத்திரிக்கை துறை அல்லது டிவி போன்றவற்றைச் சேர்ந்தவராக இருப்பார். எது எப்படி இருப்பினும் திருமணம் சம்பந்தம் மட்டுமின்றி இது தொழில் சம்பந்த நிகழ்வாகவும் இருக்கும்.

இந்த வருடம் மிதுன ராசியினரின் தொழில்வலம் மிகப் பெருகும். செழிப்பாக வளரும். உங்கள் யூகங்கள் தொழிலை மிக மேன்மையாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். சில வாரிசுகளின் பயணமும், உழைப்பும் தொழிலை முதன்மைக்கு நகர்த்தும். உங்கள் தொழில் வெளிநாட்டிலும் பரவி பரவசமாகும். இந்த வருடம் தொழில் தொடங்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று தொழில் தொடங்கி விடுங்கள், அதற்கான தரவுகளும், அரசு ஆதரவும் அவரின் அபரிமிதமாக கிடைக்கும்.

குரோதி வருட பலன்கள் 2024-மிதுனம்

உங்கள் விரையாதிபதி(சுக்ரன்) உச்சம் எனவே செலவுகள் அதிகமாக இருக்கும். அதனையும் முதலீடாக மாற்றி விடுவீர்கள். வெளிநாட்டு பயணம் மிக அதிகமாக அமையும். நிறைய சுப செலவுகள் ஆகும் என்பது தான் நிம்மதி.

பரிகாரம் :

திருவெண்காடு சென்று தீபம் ஏற்றி வணங்கவும். சனி+செவ்வாய் சேர்க்கைக்கு புதன்கிழமை மரிக்கொழுந்து மாலை, பாசிப்பருப்பு கலந்த பொங்கலுடன், அகலில் இலுப்பெண்ணை ஊற்றி, 23 மிளகாய்ப் பச்சை நிற துணியில் மூட்டை கட்டி, பச்சை நிற திரியிட்டு ஏற்றவும். அருகில் உள்ள பள்ளியின் தேவையை அறிந்து உதவுங்கள். இந்த புது வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டமும், அன்பும் நிறைந்த வருடமாக அமையும்

குரோதி வருட பலன்கள் 2024-ரிஷபம்

குரோதி வருட பலன்கள் 2024-ரிஷபம்

சுக்கிரனின் ஆசி பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!! வரும் குரோதி வருடம் உங்களுக்கு குதூகலமான வருடமாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெகு நன்மைகள் கிடைக்கும். மேலும் கூடவே இருக்கும் ராகு உங்கள் அடி மனதில் உள்ள ஆசைகளை அமர்க்களமாக நிறைவேற்றி வைப்பார். இந்த வருடம் உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும். அதற்கு தகுந்த பணம் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு வந்து சேரும்.

ரிஷப ராசி குழந்தைகளுக்கு இளைய சகோதரி பிறக்க வாய்ப்புண்டு. சில ரிஷப ராசி அன்பர்களின் சகோதரர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. இந்த வருடம் வீட்டுக்கு மிக அதிக முதலீடு செய்து உங்கள் கனவு இல்லத்தை கட்டுவீர்கள். வேறு சிலர் வீட்டை விட்டு அதனை வெளிநாடு அல்லது அரசியல் சார்ந்து செலவழிப்பீர்கள். உங்கள் தாயார் உங்களின் மூத்த உடன்பிறப்புடன் சென்று விடுவார், ஆரம்ப கல்வி மாணவர்கள் உயரிய பள்ளியில் இடம் பிடிப்பீர்கள். மீனவர்கள் அரசின் ஆபத்து உதவிகளைப் பெற்று நன்மையும் லாபமும் அடைவீர்கள்.

இந்த வருடம் உடல் நலத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். கால் பாதம் வீங்கி கொள்ளக்கூடும். பாதத்தில் நரம்பு பிடித்துக் கொள்ளும். சிலருக்கு காலில் விஷக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. முன்பு பார்த்த வேலையில் மீண்டும் இணையலாம். சிலர் புத்தி அடிப்படையாக கொண்டு செய்யும் வேலைகள் அல்லது வங்கி வேலை, சினிமா எடிட்டிங் வேலை, வெளிநாட்டில் ஆசிரியர் பணி அல்லது கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் வேலை என இந்த மாதிரியான வேலைகள் உங்களுக்கு வந்து சேரும்.

குரோதி வருட கிரக நிலைகள்

குரோதி வருட பலன்கள் 2024

12ல் சூரியன் குரு,2ல் சந்திரன் ,5ல் கேது ,10ல் செவ்வாய் சனி ,11ல் புதன் சுக்கிரன், ராகு

எதிரிகளின் பெருக்கம் அதிகரிக்கும். எதிரிகள் மிக பலமாகி உங்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டுவர். கடனும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. நிறைய ரிஷப ராசியினருக்கு இந்த வருடம் காதல் திருமணம் கைகூடும். வேலை பார்க்கும் இடத்தில் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் பெண்கள் வரனாக வருவதற்கு வாய்ப்பு உண்டு.

இப்போது வியாபாரம் ஆரம்பித்தால் உங்களின் தந்தையின் உதவி இருக்கும். தர்மகர்மாதிபதி எனும் யோகத்தில் உங்கள் அதிர்ஷ்டம் மிளிர்கிறது. இந்த யோகம் வெளிநாட்டு முதலீடுகளை தரும். சட்டத்துக்கு புறம்பான வருமானம் தரும்.உங்கள் எண்ணங்களை ஏதோ ஒரு மட்டமான வழியிலாவது ஈடேற்றி விடும்.

குரோதி வருட பலன்கள் 2024-ரிஷபம்

இந்த வருடம் இவர் பிறந்த இடத்துக்கு தான் அதிகமாக பயணம் மேற்கொள்வார் அல்லது பிறந்த ஊரில் ஒரு இடம் விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார் அது அரசியல் அல்லது அரசுப்பணி அல்லது தந்தை அல்லது மூத்த சகோதரன் என காரணம் ஏதோ ஒன்று இருக்கும் பிறந்த ஊர் அலைச்சலும் செலவும் அதிகம் இருக்கும்.

ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்க ரங்கநாத பெருமாளை வணங்கி வரவும். சனி+செவ்வாய் சேர்க்கைக்கு வெள்ளிக்கிழமை வெண் தாமரை பூ, சேமியா பாயசம் இவற்றோடு வெள்ளைத் துணியில் 24 மிளகு பொட்டலம் கட்டி, தாமரை நூல் திரியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.

இன்றைய ராசி பலன் – 11.3.2024

இன்றைய ராசி பலன் – 11.3.2024

மேஷம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.

ரிஷபம்

பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.

மிதுனம்

நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.

கடகம்

எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும்.

சிம்மம்

உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது.

இன்றைய ராசி பலன்

கன்னி

பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.

துலாம்

தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

விருச்சிகம்

பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு

குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வகையில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் பணிச்சுமை குறையும்.

மகரம்

பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.

கும்பம்

வேலைபளு சற்று கூடுதலாக இருக்கும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் இழுபறி நிலை உண்டாகும். தேவைகேற்ப செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும்.

மீனம்

திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

இன்றைய பஞ்சாங்கம்– 11.3.2024

தமிழ் தேதி மாசி-28,திங்கள்
ஆங்கில தேதி மார்ச்சு -11
திதி பிரதமை காலை 10.45மணி வரை பின் துவிதியை
யோகம் சித்த யோகம்
கரணம் பவ
நட்சத்திரம் உத்திரட்டாதி இரவு 11.02மணி வரை பின் ரேவதி
வார சூலை கிழக்கு
சந்திராஷ்டம ராசி சிம்மம்
ராகு காலம் 7.53AM -9.23AM
எமகண்டம் 10.54AM -12.25PM
நல்ல நேரம் -காலை 6.22AM -7.22AM
நல்ல நேரம் -பிற்பகல் 12.25PM -2.22PM
நல்ல நேரம் -இரவு 6.22PM -9.22PM
இன்றைய சிறப்புகள் சந்திர தரிசனம்

இன்றைய கிரக நிலைகள்

இன்றைய பஞ்சாங்கம்

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)

சுக்கிரன், சனிபகவான், செவ்வாய்,கேது ஆகிய நால்வரும் உங்களுக்கு மிகவும் அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர்.பணத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வார், சுக்கிரன். கேதுவின் நிலையினால், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது.முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.ராசிக்கு விரய ஸ்தானத்தில் சூரியனும், ராகுவும் உள்ளதால், உடல் நலனில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

ஜென்ம ராசியில் குரு அமர்ந்திருப்பதால், தேவையற்ற
அலைச்சல்களும், அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய
அவசியமும் ஏற்படும். மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை.
திருமண முயற்சிகளில் வரன் அமைவது கடினமான முயற்சியாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள், சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நீடிக்கும். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலைகள் மனதை வருத்தும்.

பரிகாரம்:

சுந்தரகாண்டத்திற்கு “சர்வதோஷநிவாரணி” -என்ற பெருமையுண்டு. தினமும் காலையில் நீராடிய பின்பு, ஒரு சர்க்கமாவது
படித்து வந்தால் போதும்.

நன்மை தரும் தினங்கள்:

பங்குனி: 1, 2, 5 -7, 11 – 14, 19 – 21, 25 – 28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 16 பிற்பகல் முதல், 18 இரவு வரை.

ரிஷபம்

(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)

பண வசதிதிருப்திகரமாக இருக்கும்.குரு பகவான், விரய ஸ்தானமாகிய மேஷத்தில் நிலை கொண்டிருப்பதால், குடும்பத்தில் சுபச்செலவுகளும், அநாவசியமான செலவினங்களும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆரோக்கியம் நல்லபடியே நீடிக்கிறது. திருமண முயற்சிகள் தாமதமாகும். அலுவலகப் பொறுப்புகள், குடும்பப் பிரச்னைகள் சம்பந்தமாக அலைச்சலும் பணவிரயமும் ஏற்படும்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

ராகு, லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், எதிர்பாராத பண வரவிற்கும்
சாத்தியக்கூறு உள்ளது. வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் பலருக்கு உருவாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், தீர்த்த -தலயாத்திரையும், துறவிகள், பெரியோர் தரிசனமும் ஆசிகளும் கிட்டும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அனுகூலமான தீர்ப்பை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்:

ஆலங்குடி குரு பகவான், சக்திவாய்ந்த பரிகாரமாகும்.

வியாழக் கிழமைதோறும், பிரதோஷ காலமாகிய மாலை 5.30 முதல் 7.30
மணிக்குள்ளாக, ஆலயங்களிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ ஐந்து மண் அகல்களில் நெய் தீபங்கள் ஏற்றிவந்தால்
போதும். அற்புதப் பலன்கள் கிட்டும்.

நன்மை தரும் தினங்கள்:

பங்குனி: 3 – 7, 11 – 15, 21- 23, 28 – 30.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 18 இரவு முதல், 20 பின்னிரவு வரை

மிதுனம்

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குரு, சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் மாதம் முழுவதும் உங்களுக்கு
அனுகூலமான நிலைகளில் சஞ்சரிக்கின்றனர். பங்குனி 18-ம் தேதி வரையில் சூரியன் உதவிகரமாக நிலைகொண்டுள்ளார். அதன் பிறகு, அவரால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. மாதம் முழுவதும் பண வசதி திருப்திகரமாகவே இருக்கும். கும்ப ராசியில் அமர்ந்துள்ள செவ்வாயினால், முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்வதால், எதிர்பாராத
பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில் ஏற்பட்டுவந்த வீண் செலவுகளும் குறையும்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

பங்குனி 19-ம் தேதி சுக்கிரனின் நிலை மாறுவதால், நெருங்கிய உறவினர்களுடன் கருத்து வேறுபாடும், பகையுணர்ச்சியும் மேலிடும். விவாக வயதிலுள்ள பெண் அல்லது பிள்ளை இருப்பின் நல்ல வரன் அமையும். மாதத்தின் மூன்றாம் வாரத்தில், உடல் நலனில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். வெளிநாட்டில் வேலைபார்த்துவரும் பிள்ளை அல்லது பெண் சிறிய விடுப்பில் வர வாய்ப்புள்ளது. இந்த வரவு, குடும்பச் சூழ்நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பரிகாரம்:

சனிக்கிழமைகளில் மட்டும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில், நெய் தீபம் ஒன்று ஏற்றிவந்தால், ராகுவினால் ஏற்படும் தோஷம் அடியோடு விலகும். 12 கிழமைகள் ஏற்றினால் போதும். வியக்கத்தக்க பலன் கிட்டும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 1,4-8, 12 – 14, 18, 19, 23 – 25, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 20 பின்னிரவு முதல், 22 பின்னிரவு வரை.

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

சுக்கிரன், கேது ஆகிய இரு கிரகங்கள் மட்டுமே உங்களுக்கு ஆதரவாக
நிலைகொண்டுள்ளனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களால் அதிக நன்மைகளை எதிர்பார்ப்பதில் பயனில்லை. குறிப்பாக, உங்கள் உடல் நலனில், இம்மாதத்தில் நீங்கள் அதிக கவனமாக இருத்தல் வேண்டும். சுக்கிரன், சனி பகவான், செவ்வாய் அஷ்டம ராசியில் ஒன்றிணைந்துள்ளனர். சிறு உடல் உபாதை, வலியானாலும் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

வாகனம் ஓட்டும்போது, நிதானமாகவும், அதிஜாக்கிரதையாகவும் இருத்தல் வேண்டும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. எதிரிகளின் தொல்லை அச்சத்தையும், ஏற்படுத்தும். நிரந்தர சிகிச்சை பெற்று வரும் வயோதிகர்கள், குளியல் அறையில் கால் பதிக்கும்போது நிதானமாகவும், கவனத்துடனும் அடிமேல் அடி வைத்து நடப்பதும் அவசியம். ஏனெனில், கிரக நிலைகளின்படி, கீழே விழுந்து அடிபடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.

“ஜோதிடம்” எனும் வானியல் வாழ்க்கைக் கலை எப்பொழுதெல்லாம், எந்தெந்த விஷயங்களில் நாம் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை
முன்கூட்டியே நமக்கு அறிவித்து, நம்மை விபத்துகளிலிருந்து காப்பாற்றுகிறது. திருமண முயற்சிகள் கைகூடுவது கடினம். வரவும், செலவும் சரிசமமாகவே இருக்கும்.

பரிகாரம்:

தினமும் ஒரு தசகம் “மந் நாராயணீயம்” படித்துவந்தால், போதும். குருவாயூரப்பன் துணையிருந்து, காத்தருள்வதை கண்கூடாக, அனுபவத்தில் காணலாம்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 3 – 7, 11 – 14, 18 – 21, 25 – 27, 31.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 22 பின்னிரவு முதல், 24 வரை.

சிம்மம்

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் வரை)

குரு பகவான், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இம்மாதத்தில், அவரது சுபப் பார்வையும் உங்கள் ராசிக்குக் கிடைப்பது பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவுள்ளது. பங்குனி 19-ம் தேதியிலிருந்து, சுக்கிரனும் அனுகூலமாக மாறுகிறார். வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், பணப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். செலவுகள் அதிகமாக இருப்பினும், சமாளிப்பதில் எவ்விதப் பிரச்னையும் இராது. களத்திர ஸ்தானத்தில் சனி – செவ்வாய் சேர்க்கை உள்ளதால், மனைவியின் உடல் நலன் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

அஷ்டம (8-ம் இடம்) ஸ்தானத்தில் சூரியன்- ராகு சேர்ந்திருப்பதால்,
உஷ்ண சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். சரும உபாதைகளும் (skin afflictions) கவலையளிக்கும். வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால், பேச்சில் நிதானம் அவசியம். குரு பகவான் சிறந்த சுப பலம் பெற்றுத் திகழ்வதால், திருமண முயற்சிகளுக்கு மிக, மிக அனுகூலமான மாதம் இந்தப் பங்குனி! விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், மிக நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைப் பேறு கிட்டும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின் வெற்றி கிட்டும்.

பரிகாரம்:

பூவரசன்குப்பம், பரிக்கல், அபிஷேகபாக்கம் லட்சுமி நரசிம்மர் கோயில்கள் தரிசித்துவிட்டுவந்தால் போதும். தோஷங்கள் அறவே நீங்கும் அல்லது, தினமும் காலையிலும், மாலையிலும் 108 அல்லது 48 தடவைகள் “லக்ஷ்மி நரசிம்மன் சரணம் பிரபத்தயே” என்ற அதியற்புத மந்திரத்தைச் சொல்லி வந்தால், ஒரு தீங்கும் உங்களை அணுகாது.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 3 – 7, 11 – 14, 18 – 21, 25 – 27, 31.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 25 முதல், 27 காலை வரை.

கன்னி

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

சனி பகவான் மற்றும் செவ்வாய் ஆகிய இருவர் மட்டுமே உங்களுக்கு
ஆதரவாக உள்ளனர், இம்மாதம் முழுவதும்! மற்ற கிரகங்களினால் எவ்வித நன்மையையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. வருமானமும், செலவும் சமமாகவே இருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அன்பும், பாசமும் குறையும். மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, சிகிச்சையினால் குணமாகும். குடும்பப் பிரச்னைகள் மனத்தை அரிக்கும்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

திருமண முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் நெருங்கிய உறவினர் ஒருவர் பணியை இழக்க நேரிடும். வரவிற்கு மேல் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் கல்வி முன்னேற்றம் தடைபடும். சிறு விஷயத்திற்கும் அதிக அலைச்சலும், உழைப்பும் தேவைப்படும். மாதத்தின் கடைசி வாரத்தில் உடல் ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.

பரிகாரம்:

காளஹஸ்தி, திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு திருத்தல தரிசனம்
சக்திவாய்ந்த பரிகாரத் திருத்தலங்களாகும். கோயிலுக்குச் செல்லும்போது, முடிந்தால், பசு நெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்துச் சென்று, கோயினுள் – கர்ப்பஸ்தானத்தில் எரியும் தூண்டா விளக்கில் சேர்க்கவும். அல்லது மண் அகல் விளக்கில் ஏற்றியும் வைக்கலாம்.

தினமும் காலையில் அபிராமி அந்தாதியும், மாலையில் கந்தர் சஷ்டியும் சொல்லி வந்தாலும் போதும்.

சனிக்கிழமைகளில் ஓர் ஏழைக்கு உணவளித்தால் மகத்தான பலன்களைப் பெறுவீர்கள்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 2 – 4, 9 – 11, 15 – 18, 22 – 25, 30, 31.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 1. மீண்டும் 27 காலை முதல், 29 பிற்பகல் வரை.

துலாம்

சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

உங்கள் ராசிக்கு, நாதனாகிய சுக்கிரன், பங்குனி 18-ம் தேதி வரை
உங்களுக்குச் சாதகமாக உள்ளார். சூரியன், ராகு ஆகிய இருவரும்கூட, மாதம் முடியும் வரை உங்களுக்கு மிகவும் ஆதரவாகவே சஞ்சரிக்கின்றனர். குருவினாலும், நன்மையே. சஞ்சார பலத்துடன் குருவின் பார்வை பலனும் உங்கள் பக்கம்தான்! அவரது 7-ம் சுபப் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பது, மேலும் பல நன்மைகளை உங்களுக்கு சற்று தாராளமாகவே அளிக்கவுள்ளனர், பிரதான கிரகங்கள்
அனைத்தும் !! குடும்பத்தில் ஒற்றுமையும் பரஸ்பர பாசமும், அன்பும் நிலவும். போதிய அளவிற்கு வருமானம் கிட்டும். வீண் செலவுகள் குறையும். அனைத்தையும் விட, உங்கள் ஆரோக்கியம் மீண்டும் “normal” எனக் கூறும் அளவிற்கு, முன்னேற்றமடையும்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

உங்களின் ராசிக்கு களத்திர, காம, சயன ஸ்தானமாகிய
மேஷத்தில் குரு அமைர்ந்திருப்பது, கணவர் – மனைவியரிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் நிலவுவதை எடுத்துக்காட்டுகிறது. திருமணமான பெண்கள், கருத்தரித்த இம்மாத கிரகநிலைகள், சுப பலம் பெற்றுள்ளன. இம்மாதம் கருத்தரிக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் இருக்கும் (ஆதாரம்: “ஸிம்மவலோக்கணம்” -எனும் மிகப் பழமையான மருத்துவ ஜோதிட நூல்.

அதாவது குரு பலமாக சஞ்சரிக்கும்போது, கருவில் உண்டாகும் குழந்தைகள் பெரும்பாலும் ஆண் குழந்தைகளாகவே இருப்பார்கள். சுக்கிரன் வலுப்பெற்றிருக்கும்போது, கருத்தரித்தால், பெண் குழந்தைகளாக இருக்கும் என்று அந்த நூல் தெரிவிக்கிறது.) இந்த அடிப்படையில்தான் வேத காலத்திலும் (Vedic age) கிருதயுகத்திலும், திரேதாயுகத்தின் முற்பகுதியிலும் நம் முன்னோர்கள் கணவர் – மனைவி உடல் சேர்க்கையின் நாளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். அந்த அளவிற்கு ஜோதிடம் சென்ற காலங்களில்நம் வாழ்க்கையுடன் பின்னி பிணைந்துள்ளது.திருமணத்திற்கு ஏற்ற மாதம் பங்குனி !

பரிகாரம்:

சனிக்கிழமைகள் தோறும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தீபத்தில் சிறிது எள் எண்ணெய் செலுத்திவிட்டு, தரிசனம் செய்துவிட்டு வரவும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 1, 5 – 8, 12 – 14, 18 – 21, 25 – 28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 2 முதல், 4 காலை வரை. மீண்டும் 29 பிற்பகல் முதல், 31 மாலை வரை.

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம்,கேட்டை வரை)

எப்போதுமே சுறு, சுறுப்பாகவே இருந்து பழக்கப்பட்ட விருச்சிக ராசியினருக்கு, இந்தப் பங்குனிமாதத்தில் சுக்கிரன், ஓரளவே அனுகூலமாக சஞ்சரிக்கின்றார். மற்ற கிரகங்களினால், நன்மை ஏதும் கிடைக்காது. போதிய அளவிற்கு வருமானம் இல்லாததால், குடும்ப நிர்வாகம் சற்று கஷ்டமாகவே இருக்கும். அர்த்தாஷ்டக ராசியில் சனியும் செவ்வாயும் சேர்ந்திருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக
இருப்பது அவசியம்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

திட்டமிட்டு செலவு செய்தால், பணப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கை, கால்களில் குடைச்சல், மூட்டுகளில் வலி, கர்ப்பப்பை சம்பந்தமான கோளாறுகள் ஏற்பட சத்தியக்கூறு உள்ளது. சிறு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமையும், அந்நியோன்யமும் நிலவும். திருமண சம்பந்தமான முயற்சிகளில், வரனை நிச்சயிப்பதில், குழப்பங்கள் உருவாகும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர், உத்தியோக சம்பந்தமாக வெளி மாநிலம் அல்லது வெளியூர் செல்ல நேரிடும்.

பரிகாரம்:

இத்தகைய கிரக நிலைகளுக்கு, திருப்பதி அல்லது குருவாயூர் திருத்தலங்கள் மிகச் சிறந்த பரிகாரங்களாகும். வாஞ்சியம் திருத்தல தரிசனமும் சக்திவாய்ந்த பரிகாரமாகும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 1-3,7-10,15-17,22-24,29-31.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 4 காலை முதல் 6 மாலை வரை.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குரு, சுக்கிரன், சனி மற்றும் புதன் ஆகியோரும் உங்களுக்கு ஆதரவாக
சஞ்சரிக்கின்றனர், இம்மாதம் முழுவதும் ! மற்ற கிரகங்களால் நன்மை ஏதும் இல்லை. பண வசதி போதிய அளவிற்கு உள்ளது, இம்மாதம்
முழுவதும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன நிறைவும் நிறைந்திருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்குக் குறைவிராது. கருத்தரித்துள்ள பெண்மணிகளுக்கு
சுகப் பிரசவம் உண்டாகும். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் இருப்பதையும் செவ்வாய், குரு, சுக்கிரன் ஆகியவற்றின் சஞ்சார நிலைகள்
குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு கிரகநிலைகள் சிறந்த சுப பலம் பெற்றுவிளங்குகின்றன. சுபச் செலவுகள் அதிகளவில் ஏற்பட்டாலும்,
அவற்றைச் சமாளிப்பதில் சிரமம் ஏதுமிராது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான போக்கு தென்படும். ஆரோக்கியம் திருப்திகரமாக
இருக்கும். விவாகத்திற்குக் காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியம் திருப்திகரமாகவே உள்ளது. வெளிநாட்டில் வேலை பார்க்கும், பெண் அல்லது பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை
அளிக்கும்.

பரிகாரம்:

சுந்தரகாண்டத்திற்கு, “சர்வதோஷ நிவாரணி” -என்ற பெருமை உண்டு. அதாவது சகல கிரக தோஷத்தையும் போக்குவது என்பதே அதன் பொருள். தினமும் ஒரு சர்க்கம் படித்து வரவும். எவ்வித கிரக தோஷமானாலும் பறந்தோடிவிடும். படிக்க முடியாதவர்கள், சுந்தகாண்டத்தைக் கேளுங்கள். சுந்தரகாண்டத்தை நினைத்தாலே புண்ணிய பலன் உங்களை வந்தடையும்.

லிகித ஜெபமாகப் போற்றிப் புகழப்படும், ராமஜெயம் எனும் திவ்ய நாமத்தை தினமும் புத்தகத்தில் 1008 முறைகள் எழுதி வந்தாலே போதும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 3-5, 9- 11, 15 – 18, 22 – 24, 29 – 31.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 6 மாலை முதல், 7, 8 வரை.

மகரம்

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

சுக்கிரன், சூரியன், ராகு ஆகியவீரியம் நிறைந்த மூன்று கிரகங்களும், அனுகூலமாக உள்ளனர். மற்ற கிரகங்களினால் நன்மை ஏதும் ஏற்படாது. வருமானம் நல்லபடி இருக்க சூரியன், சுக்கிரன், ராகுவின் நிலைகள் உதவிகரமாக உள்ளன. இருப்பினும், வருமானத்திற்குச் சமமான செலவினங்களும் இருக்கும். தந்தையின் உடல் நலனில் அபிவிருத்தியைக் காணலாம்.

பித்ரு காரரான சூரியன் ஆதரவாக சஞ்சரித்தாலும், சனி மற்றும் செவ்வாயின் நிலையினால், உடல்நிலை பாதிக்கப்படும். மருத்துவ செலவுகளைத் தவிர்க்க இயலாது. குருவின் நிலையினால், குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களும், ஒற்றுமைக் குறைவும் உண்டாகி, கவலையை உண்டாக்கும். விவாக முயற்சிகளில் ஏமாற்றமே மேலிடும். பாக்கிய ஸ்தானத்தில் நிலைகொண்டுள்ள கேதுவினால், பணம் விரயமாகும். முயற்சிகள் அனைத்திலும் தோல்வியையே சந்திக்க நேரிடும்.

பரிகாரம்:

தினமும் அபிராமி அந்தாதி, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மகாலட்சுமி
அஷடோத்திரம் சொல்லி வந்தால், மிக நல்ல பலன் கிடைக்கும்.

காலையில் நீராடிய பிறகு, தன்வந்திரி மற்றும் ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் சொல்லி வரவும்.

மாலையில் சனீஸ்வர பகவானின் ரக்ஷோபவன ஸ்தோத்திரம் முடிந்தால் படித்தும் அல்லது காதால் கேட்டு வரவும்.

மேல்வெண்பாக்கம் லட்சுமி நாராயணர் தரி சனம் சக்திவாய்ந்த பரிகாரமாகும்.

தினமும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வரவும்.

அனுகூல தினங்கள்

பங்குனி: 1, 2, 5 – 8, 12 – 15, 22 – 24, 29 – 31.

சந்திராஷ்டம தினங்கள்

பங்குனி: 9 முதல் 11 பிற்பகல் வரை.

கும்பம்

(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

சுக்கிரன், புதன் ஆகிய இருவராலும் நன்மைகள் ஏற்படும். ஜென்ம
ராசியில் சனி, செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் வேண்டும். ராகுவும், அனுகூலமாக இல்லை. ராகுவிற்கு இரவில்பலம் அதிகம் எனக் கூறுகின்றன, மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள். ஆதலால்தான், இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன!

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

வாக்கு, தனம் ஆகிய ஸ்தானங்களில் ராகு வீற்றிருக்கின்றார். நண்பர்கள், உறவினர்கள் எவருக்கும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளை அளிப்பது, பிறர் வாங்கும் கடனுக்குப் பொறுப்பேற்றுக் கையெழுத்திடுவது ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இல்லாவிடில், எதிர்காலத்தில் வருந்த நேரிடும். திரிதீய ராசியான மேஷத்தில், தனாதிபதியான குரு அமர்ந்திருப்பதும், பண விஷயங்களில் சற்று முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இம்மாதத்தில் திருமண முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பணம் மற்றும் ஆபரணங்களை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.

பரிகாரம்:

பழனி முருகன் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

கும்பகோணத்தையடுத்த உப்பிலியப்பன் தரிசனமும் நல்ல பலனையளிக்கும்.

அனுகூல தினங்கள்:

பங்குனி: 3 – 8, 14 – 16, 19 – 21, 25 – 28.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 11 பிற்பகல் முதல் 12, 13 பின்னிரவு வரை.

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)

குரு, சுக்கிரன் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர், இம்மாதம் முழுவதும். ஏழரைச் சனியின் முதல் பகுதியும் நடைபெறுகிறது, உங்களுக்கு! வருமானத்திற்குக் குறைவிராது. அலைச்சல் அதிகரிக்கும். களத்திர ஸ்தானமாகிய கன்னிராசியில் கேது இருப்பதால், மனைவிக்கு சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்படும். எளிய சிகிச்சையினால் குணம் கிடைக்கும்.

பங்குனி மாத ராசி பலன்கள் -2024

ராசி நாதனாகிய குரு பகவானின் சுபப் பார்வை – ருண, ரோக, சத்ரு, ஆயுள்
ஜீவன ஸதானங்களுக்குக் கிடைப்பதால், பிரச்னைகள் அனைத்தும் அளவோடு நிற்கும். திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

பரிகாரம்:

ஒன்பது சனிக்கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றிவந்தால் போதும்.

அனுகூல தினங்கள்

பங்குனி: 1, 2, 5-7, 11-12, 17-21, 25-27, 31.

சந்திராஷ்டம தினங்கள்:

பங்குனி: 13 பின்னிரவு முதல், 14, 15, 16 பிற்பகல் வரை.

குரோதி வருட பலன்கள் 2024

குரோதி வருட பலன்கள் 2024

ஏப்ரல் மாதம் (14.04.2024),ஞாயிற்றுக்கிழமை, சுக்லபட்ச திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சஷ்டி திதி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் பிறக்கிறது குரோதி வருடம்.எல்லாத் தமிழ் வருட பிறப்பு சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்ந்திருப்பார். இந்த வருடம் கூடவே தர்மத்துக்குரிய குருவும் அவருடன் அமர்ந்துள்ளார். இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு.

குரோதி வருட வெண்பா

காரக் குரோதிதனில் கொள்ளமிடும் கள்ளரினால் பாரினில் சனங்கள் பயமடைவர்.
கார்மிக்க அற்ப மழை பெய்யும்.அகம் குறையுமே சொற்ப விளைவு உண்டெனவே சொல்.

வியாழ வட்டம் என்னும் அமைப்பில் குரு இவ்வாறு உச்ச சூரியனுடன் 2012ல் அமர்ந்திருந்தார். ஆக இவ்விதம் குரு +உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வுதான். இது 12 ஆண்டுக்கு ஒரு முறையே அமையும். இந்த குரு சூரியன் இணைவு நிறைய சூரிய சம்பந்தமான குறைகளை நீக்கிவிடும். ஏனெனில் சூரியன் கோவிலில் சூரியன், சாயா, உஷா தேவி எதிரில் குருபகவான் அமர்ந்து அவரது அதீத தீட்சயனத்தை ஏற்றுக் கொள்கிறார். இதனால் பக்தர்கள் சூரிய பகவானின் சாந்தமான பலன்களை மட்டும் பெற முடிகிறது.

image 9 குரோதி வருட பலன்கள் 2024

சூரியன் காலபுருஷ வீட்டின் ஐந்தாம் அதிபதிகுரு ஒன்பதாம் அதிபதிஇந்த இரு பாவகர்களும் சேரும்போது அங்கு வியத்தகு யோக கிரக நிலை உண்டாகிறது.இந்த கிரக கோச்சாரப்படி 2024 குரோதி வருடம் தேர்தல் நடைபெற்றால், மிக நல்ல நேர்மையான அரசியல்வாதிகள் வெற்றி பெறுவர். இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சம பலத்துடன் இருப்பர்.

ஆளும் கட்சியை சேர்ந்த செவ்வாய் பதினோராம் எனும் லாபத்தின் அதன் அதிபதியுடன் பலம் பெறுகிறார்.எதிர்க்கட்சியை குறிக்கும் புதன் நீசம் ஆகி வக்கிரம் பெற்று ராஜயோகம் பெறுகிறார். அதுமட்டுமல்ல அவர் விபரீத ராஜயோகமும் பெறுகிறார். எனவே அரசியல் தேர்தல் களத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரண்டும் சமமாக இருக்கும்.

குரோதி வருட குரு பார்வை

Add a subheading 7 குரோதி வருட பலன்கள் 2024

செல்வ செழிப்பை குறிக்கும் சுக்கிரன் விரயத்தில் உச்சம் பெறுகிறார். எனவே நிறைய வெளிநாட்டு பண வரவும் அதற்கு ஈடான செலவுகளையும் மக்கள் செய்வர். மக்களுக்கு ஆடம்பர செலவு மேல் பெரும் மோகம் ஏற்பட்டு, கண்டதையும் வாங்கி பணத்தை விரயம்செய்வர். கம்ப்யூட்டர், கைபேசி, சவுண்ட் சிஸ்டம், கடிகாரம் என அடிக்கடி புதிதாக வாங்குவர்.

இளைஞர்கள் வேலையும் மாதத்திற்கு ஒன்று என மாற்றுவர். புதிய வேலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது போல் கடன் வாங்கவும் அஞ்ச மாட்டார்கள் ஏனெனில் கடனை திருப்பி கட்டும் தகுதியும் இருக்கும். திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த வருடம் வேலைக்கு பிற இடங்களுக்கு செல்லும் பெண்கள் தனியாக வாழ நேரிடும். இந்த வருட திருமண நிகழ்வுகளை தங்கள் செல்வாக்கை காட்டும் காட்சி பொருளாக ஆக்குவர். வீண் ஆடம்பரமாக கல்யாணம் நடக்கும். கடன் வாங்கியாவது நிறைய செலவழிப்பர். நிறைய வியத்தகு வினோத கல்யாண நிகழ்ச்சிகள் நடக்கும்.

குரோதி வருட சனி பார்வை

Add a subheading 8 குரோதி வருட பலன்கள் 2024

இந்த வருடம் எட்டாம் அதிபதி செவ்வாய் 11ஆம் என்னும் அரசியல் வீட்டில் உள்ளார். எனவே ஒரு பழைய அரசியல்வாதிக்கு அடிபடும் வாய்ப்பு உண்டு. தொழில்கள் நல்ல லாபத்துடனும், சிறு இடர்பாடுகளுடனும் நடக்கும். கால புருஷனின் விரைய வீட்டில் உச்ச சுக்கிரன், நீச பங்க புதன், ராகு இருப்பதால் இந்த வருடம் அவசரம் அவசரமாக பிடிவாதமாக பிற மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்வர். அதே வேகத்தில் அவதி அவதியாக விவாகரத்தும் செய்து விடுவர். எனவே காதலிப்பவர்கள் இந்த வருடத்தை விட்டு விடுங்கள். அடுத்த வருடமும் அதே காதல் அன்பும் நீடித்திருந்தால் திருமணம் என்ற கட்டுக்குள் வாருங்கள்.

குரோதி வருட கிரகங்களின் பலன்கள்

சூரியன்: சூரியன் உச்சமாகி குருபகவான் உடன் உள்ளதால் ஆரோக்கியம் மேம்படும். அறிவு கூர்மையாகும். குழந்தை பேரு சிறக்கும். நிர்வாகத்திறன் மேம்படும். பித்தளை பொருட்களின் பயன்பாடு அதிலும் பூஜைக்கு அதிகரிக்கும். நிறைய வரி வசூலாகும். எனில் மக்கள் செழுமையாக இருப்பதாக அர்த்தம். வாரிசினால் கவுரவம் கிடைக்கும். இவரின் உச்ச நிலை நன்மை தருகிறது.

சந்திரன்: சந்திரன் கேமத்துருவ யோகம் பெறுகிறார். இதனால் வயதான பெண்களுக்கு பீடை உண்டாகும். எனினும் சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகம் உள்ளதால் இந்த தோஷம் நீங்குகிறது. இதன் மூலம் இந்த வருடம் வயதான பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வேலை செய்யும் ஆட்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். கிருஷ்ணரை வணங்குவது பரிகாரமாகும்.

செவ்வாய் : இவர் எட்டாம் அதிபதியாகி 11 இல் அமர்ந்துள்ளதால் ஒரு நன்மை அரசியலில் உள்ளவர்கள் குறுக்கு வழியில் பதவியை பிடிப்பர். மற்றொன்று வயதில் மூத்த அரசியல்வாதி அடிபடுவர். இவர் சனியோடு இருப்பதால் பைரவ வழிபாடு பரிகாரமாகும்.

குரோதி வருட செவ்வாய் பார்வை

Add a subheading 9 குரோதி வருட பலன்கள் 2024

புதன் : புத்திசாலி மற்றும் வேலைக்குரிய இந்த கிரகம் நீசபங்கம் பெற்றுள்ளார். இதனால் இளைஞர்கள் ஒரு வேலையில் பொருந்தி இருக்க மாட்டார்கள். மாற்றிக் கொண்டே இருப்பர். நீங்கள் கூலி வேலை செய்தாலும், கம்ப்யூட்டரில் பெரிய பதவி வகித்தாலும் ஒரு இடமாக இருக்க மாட்டார்கள். அலைபாய்வீர்கள் இதற்கு திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி வணங்குங்கள்.

குரு : இவர் உச்ச சூரியனுடன் அமர்ந்துள்ளார். மற்றும் சனியின் பார்வை பெறுகிறார். ஆனால் இந்த வருடம் சனியின் பார்வையால் சூரியன் குரு ரொம்ப அவஸ்தைக்கு ஆளாக மாட்டார்கள். உச்ச சூரியன் மிக பலமாக வலுவாக இருப்பதால் சனி சற்று அடங்கி வாசிப்பார். எனவே குருவும் தன் பலம் இழக்காமல் இருப்பதால் தான தர்மம் பொருளாதார மேன்மை நிறைய கோவில் நிர்மாணம், கௌரவ பதவிகள் உண்டாதல் கல்வி, மேன்மை இவற்றை மக்கள் அனுபவிப்பார்.

சுக்கிரன் : சுக்கிரன் உச்சமாகி ராகுவுடன் உள்ளார். கலை உலகம் சிறக்கும். மக்கள் ஏனோ ஜாலியாக இருப்பர். மது விற்பனை அமோகமாக இருக்கும். அடுக்குமாடி விற்பனை அதிவேக வாகன விற்பனை செழிக்கும். சுக்கிர உச்சமாகி ராகுவுடன் சேர்ந்திருப்பதால் ஒழுக்கம் என்பது கேள்விகுறியாகிவிடும். இந்த ஒழுக்கக்கேடு நிறைய விவாகரத்தை கொண்டு வரும். திருமணம் என்பது ஒருவருக்கு லிமிட்டாக நடக்க வேண்டும். நாளுக்கு ஒரு திருமணம் நடந்தால் நன்றாகவா இருக்கும்! ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியாரை வணங்கி கருடனுக்கு விளக்கேற்றினால் வீடு அடக்க ஒடுக்கமாக அமையும்.

சனி:சனியின் இருப்பை இருவிதமாக கொள்ளலாம் ஒன்று அவர் கர்ம லாபாதிபதியாகி ஆட்சி. இன்னொன்று பாதகாதிபதியாகி வலுவாக உள்ளார். ஒரு வழியில் நன்மையும் மறுவழியில் சற்று மைனஸ் உண்டு. கூடவே இருக்கும் செவ்வாய் கெடுபலன்கள் செய்ய தூண்டுவார். தொழில் சம்பந்த தொல்லை இருக்கும். அனைவரும் ஏதோ ஒரு மறைமுக எதிரியால் தொல்லைக்கு ஆளாவார்கள். இந்த சனி செவ்வாய் இணைவு நிறைய காதல் உருவாக்கும். அந்த காதலில் உண்மை தன்மை குறையும். அனைவருமே இந்த ஆண்டு சனிக்கிழமைகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். திருட்டு அதிகரிக்கும்.

ராகு பகவான் : கால புருஷனின் 12ஆம் இடத்தில் உச்ச சுக்கிரன் நீசபங்க புதனுடன் உள்ளார். இதனால் நிறைய முறையற்ற கள்ள உறவுகள் அதிகரிக்கும். கள்ளக் கடத்தல் கடல் வழியாக நடக்கும். இந்த வருடம் வெள்ளியின் நகை கடத்தல் அதிகரிக்கும். கற்பழிப்புகள் நிறைய நடக்கும். சட்ட புறம்பான ரகசிய நடவடிக்கைகள் அதிகமாகும். மது உபயோகம் மிக அதிகமாகும். ராகு சுக்கிர இணைவு நல்லதல்ல. பெண்களை வஞ்சகமாக ஏமாற்றி சீரழிக்கும். எனவே உங்கள் வீட்டு இளம் பெண்களை மிக பத்திரமாக காப்பாற்ற வேண்டும். துர்க்கையை வணங்கவும்.

கேது : கால புருஷனின் ஆறாம் வீட்டில் உள்ளார். நோய் பரவலை கட்டுப்படுத்துவார். வேர் சம்பந்தமான மூலிகை பயன்பாட்டினை பரவலாக்குவார். மக்களை உழைக்க விடாமல் சற்று சோம்பேறி ஆக்குவார். ஆனால் உழைக்காமல் பணம் குறுக்கு வழியில் சம்பாதிப்பது எப்படி என நிறைய ஐடியா கொடுப்பார். கடன்களை ரொம்ப வளர விட மாட்டார். உங்கள் ஊரில் உள்ள பிரசித்தமான விநாயகரை வணங்குங்கள்.