பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி 
மென்மையும், விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் பண்பும், யார் மனதையும் புண்படுத்தாத உள்ளமும், ஆன்மீகம், தத்துவம், அறிவியல் என அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் மிதுன ராசி அன்பர்களே!!!
 உங்களுக்கு இந்த தமிழ் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்
உங்களின் லாப ராசியில் இந்த வருடம் பிறப்பதால்
  • அதிரடி முன்னேற்றங்கள் உண்டு
  • சொல்ல முடியாத அளவுக்கு இழப்பு மற்றும் எதிர்ப்புகளை சந்தித்து வந்த உங்களுக்கு  இந்த வருடத்தின் துயரங்கள் யாவும் தொலையும்
  • புரட்டாசி மாதம் முதல் புரட்சிகரமான முடிவுகள் எடுப்பீர்கள்
  • உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும்
  • குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் இனி வீட்டில் அமைதி தங்கும் வாழ்க்கை துணைவருடன் சண்டை சச்சரவுகள் நீங்கும் அவர் வழி உறவினர்களுடன் இருந்த சங்கடங்கள் நீங்கி உறவு பலப்படும்
  • பிள்ளைகள் இனி உங்களின் ஆலோசனைகளை ஏற்பார்கள்
  • தடைபட்ட கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும்
  • இதுவரை தொழில் தொடங்கலாம் என முயன்றபோது தடைகளும் தாழ்வுமனப்பான்மையும் தானே வந்தன இனி நீங்கள் எதையும் தகுந்த முன் யோசனையுடன் செய்வீர்கள்
  • கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்கும், ஆரோக்கியம் அதிகரிக்கும் அழகு கூடும், முகமலர்ச்சி அடையும்
  •  உங்கள் மகனுக்கு வேலை கிடைக்கும்
  • கார்த்திகை மாதம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்
  • மகளுக்கு நல்ல வரன் அமையும் அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரணையாக நடந்து கொள்வீர்கள்
  • அஷ்டமத்துச் சனியால் ஏற்படும் தீமைகள் விலகி மனம் தெளிவுபெறும்
  •  உங்களின் கனிவான பேச்சால் சண்டை சச்சரவுகள் குறையும்
  • வீட்டில் தள்ளிப் போய்க்கொண்டிருந்த கல்யாணம் ஆனி ஆவணி மாதங்களில் சிறப்பாக முடியும்
  • சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும்
பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-மிதுன ராசி
செல்ல வேண்டிய ஆலயம் 

மிதுன ராசி அன்பர்களுக்கு ஸ்ரீ சொர்ண கால பைரவர் வழிபாடு நன்மை வழங்கும். சிவாலயங்களுக்குச் சென்று பைரவரை வழிபடுவது விசேஷமான பலன்களை பெற்றுத்தரும்.

 குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் அழிவிடைதாங்கியில்  அருளும் ஸ்ரீ சொர்ண கால பைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள் சகலமும் நலமாகும்.
 இயலாதவர்கள் வீட்டிலேயே தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கேற்றி வைத்து பைரவரை தியானித்து
ஒளிமயமாக விளங்குபவரும் 
உலகை காப்பவரும் 
பாவிகளுக்க பயங்கரரும் 
ஷேத்திர பாலகருமான 
பைரவரை வணங்குகிறேன் 
என்று வழிபட்டால் சகல சுபிட்சங்களும் கூடி வரும் இன்னல்கள் நீங்கும்.

அடிப்படை ஜோதிடம் -பகுதி-25-லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்

லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர் 

 
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்
ஜாதகர் நல்ல ஆரோக்கியத்துடனும், புத்திக்கூர்மை உள்ளவராகவும், மனம் அடிக்கடி மாறுபவராகவும், இரண்டு மனைவிகளை உடையவராகவும் அவர்கள் ஒற்றுமையாகவும் இருப்பார்கள்.
 
லக்னாதிபதி 2ஆம் பாவத்தில் இருந்தால்:  
லாபம், அறிவு ,மகிழ்ச்சி, நல்ல குணங்கள், மதத்தின் மீது பற்று, கௌரவம் மற்றும் நிறைய மனைவிமார்கள் மற்றும் 
சுற்றத்தாருடன் ஒற்றுமையாக இருப்பார்கள்.
 
லக்னாதிபதி 3-வது வீட்டில்: 
 ஜாதகர் சிங்கம் போன்று கர்ஜிப்பர் (சிம்மக்குரல்) எல்லாவிதமான சொத்துக்களும், கௌரவமும், இரண்டு மனைவிகளும், நுண்ணறிவும், மகிழ்ச்சியும் பெற்றிருப்பார்.
 
லக்னாதிபதி 4-வது வீட்டில்: 
 ஜாதகர் தந்தைவழி மற்றும் தாய்வழி வந்தவர்களுடன் மகிழ்ச்சியுடனும், அதிகமான சகோதரர்களுடனும், நல்ல குணம், சிற்றின்ப ஆசை, வசீகரமான தோற்றம் போன்றவற்றுடன் இருப்பார்.
 
 லக்னாதிபதி 5ஆம் வீட்டில்:
 ஜாதகர் செயற்கை மூலம் வம்ச விருத்தியும், மகிழ்ச்சியுடனும், கௌரவத்துடனும் இருப்பர். முதல் குழந்தையை இழந்து விடுவர், மேலும் அரசனுக்கு அருகில் இருப்பர்.
 
 லக்னாதிபதி 6ஆம் இடத்தில்: 
சுபகிரகங்களின் பார்வை இல்லாமல் அசுபக் கிரகங்களுடன் தொடர்பு இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சி இல்லாமலும், எதிரிகளின் தொல்லையை அனுபவிப்பான்.
 
லக்கினாதிபதி நின்ற பலன்கள்-மகரிஷி பராசரர்

 

 லக்னாதிபதி 7ஆம் வீட்டில்:
லக்னாதிபதி அசுப கிரகமாக இருந்து ஏழாம் வீட்டில் இருப்பின் ஜாதகரின் மனைவி நீண்ட நாள் வாழ மாட்டார். அங்கு சுபகிரகம் இருந்தால் ஒருவருகொருவர் குறிக்கோள் இல்லாமலும் அலைவார், மேலும் வறுமையும் கவலையும் கலந்து முகத்தில் தோன்றும். அவர்கள் மாறுபட்ட நிலையில் அரசனைப் போல் இருக்க வேண்டுமானால் அங்கு கூடிய கிரகம்,அந்த இடத்தின் அதிபதி வலிமை உள்ளதாக இருக்க வேண்டும்.
 
லக்னாதிபதி 8ஆம் வீட்டில்:
ஜாதகர் திறமை பெற்ற அறிவாளியாகவும், நோய் உள்ளவராகவும், திருட்டு குணம், முன் கோபக்காரனாகவும், சூதாட்டம் மற்றும் பிறருடைய மனைவிமார்களை நேசிப்பவர்களாகவும் இருப்பார்.
 
 லக்னாதிபதி 9ஆம் வீட்டில்:
 ஜாதகர் அதிர்ஷ்டசாலி, மக்களை நேசிப்பார், விஷ்ணு பக்தர், திறமையுள்ளவர், பேச்சாற்றல் உடையவர், மனைவி, மகன்களுடன், சொத்துக்களுடன் இருப்பவர்
 
 லக்னாதிபதி 10ஆம் வீட்டில் இருப்பின்: 
ஜாதகர் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாகவும், ராஜமரியாதையுடன், புகழ், சந்தேகம் இல்லாத சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் உடன் இருப்பார்.
 
லக்னாதிபதி 11 ஆம் வீட்டில்:
ஜாதகன் எப்போதும் லாபத்துடன், நல்ல குணநலன்கள், புகழ் மேலும் அதிகமான மனைவிகளுடன் இருப்பார்
 
 லக்னாதிபதி 12ஆம் வீட்டில்
 சுப கிரகங்கள் இல்லாமல் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியை பறி கொடுத்து விடுவார். பலனளிக்காத செயல்களுக்கு செலவு செய்வார். கோபத்தை அதிகம் காட்டுவார்.
 
மேலும்  லக்னாதிபதிபற்றிய தகவல்கள்.. அடுத்த பதிவில்…
 
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266
 

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

மலர்ந்த முகத்துடன் வந்தவரை உபசரித்து உதவும் குணமும், ராஜதந்திரமும் உடைய மேஷ ராசி அன்பர்களே!!!

 உங்களுக்கு இந்த பிலவ வருடம் எப்படியான பலன்களைத் தர உள்ளது என பார்ப்போம். உங்கள் ராசியிலேயே சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால்
  •  தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்
  •  குடும்பத்தில் அமைதி நிலவும்
  • கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்
  • குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள்
  • குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்
  •  உடல் நலத்தில் சற்று கவனம் தேவை
  • உறவினர் மற்றும் நண்பர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்
  •  வெளியூர் பயணங்கள் மனநிறைவு தரும்
  • முன் கோபத்தை தவிருங்கள்
  • சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும்
  •  வேலை வாய்ப்புகள் தேடி வரும்
  • சித்திரை ஆடி மாதங்களில் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்
  • பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்படுவீர்கள்
  • அம்மாவுடன் கருத்து மோதல்கள் வந்தாலும் நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வீர்கள்
  • கார்த்திகை மாதம் முதல் எதிலும் வெற்றி பெறுவீர்கள்
  • பணவரவு சரளமாக இருக்கும் செலவுகளை சமாளிப்பீர்கள்
  •  சொந்தபந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீர்கள்
  • ஆடை ஆபரணம் சேரும்
  • மன உளைச்சல் அகலும் , தன்னம்பிக்கை துளிர்விடும்
  • மார்கழி பங்குனி மாதங்களில் வீடு மனை வாங்குவீர்கள் சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கொள்வார்கள்
  •  சகோதர சகோதரிகளின் ஆதரவு பெருகும்
  • நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள்
  • புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்
  • வெளிநாட்டுக்குச் செல்லும் முயற்சி சாதகமாகும்
  • வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்
பிலவ வருட புத்தாண்டு பலன்கள்- மேஷ ராசி

 செல்ல வேண்டிய ஆலயம் 

மேஷ ராசி அன்பர்கள் சென்னை நங்கநல்லூரில் அருளும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வணங்கி வாருங்கள்.

 இயலாதவர்கள் சுவாதி தினத்தன்றும் , சனிக்கிழமைகளிலும் வீட்டுக்கு அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்கு சென்று பானகம் சமர்ப்பித்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரலாம்.
❝மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்காளைப்  புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத்
 தக்கானை கடிகைத்  தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே❞
 எனும் பாசுரம் படித்து தினமும் வழிபட தடைகள் நீங்கும். முன்னேற்றம் உண்டாகும்.
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கன்னி ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கன்னி ராசி

கலகலப்பாகப் பேசி மற்றவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் கன்னிராசி அன்பர்களே!!!

 இசை, வாசனை, தூய்மை ஆகியவற்றை விரும்பும் நீங்கள்  மற்றவர்களுக்கு ஆலோசனை அளிப்பதில் வல்லவரான  உங்களுக்கு இந்தப் பிளவு வருடம் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.
 உங்களுக்கு எட்டாவது ராசியில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. எட்டாவது ராசி நஷ்டம், விரயம், அலைச்சல் ஆகியவற்றை தரும் என அஞ்ச வேண்டாம். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.
  • வெள்ளை மனசு கொண்ட நீங்கள் பேச்சில் கவனமாக இருப்பது நல்லது
  •  அடுத்தவர்களின் குறைகளைக் தனியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டுங்கள்
  • மற்றவர்களின் நல்ல குணங்களையும் திறமைகளையும் பாராட்டுங்கள்
  •  கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்
  • சின்ன சின்னதாக உடல்நலக் குறைவுகள் வந்து போகும்
  • மனைவிக்கு சில வருடங்கள் முன்பே செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை உடனே செய்ய வேண்டி வரும் ஆனால் பெரிதாக ஆபத்து வராது கவலைப்படாதீர்கள்
  • குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது, விட்டுக் கொடுத்துப் போவது நல்லது
  • உணவு பழக்க வழக்கங்களை முறைப்படுத்துங்கள்
  • கனவுத் தொல்லை, அடி மனதில் பயம் ஆகியன வந்து நீங்கும்
  •  அவ்வப்போது யோகா, தியானம் செய்யுங்கள்
  • பிள்ளைகள் பொறுப்பாக நடப்பர் அவர்களுக்கு உயர்கல்வி அல்லது உத்தியோகம் தொடர்பாக வெளிநாட்டு வாய்ப்புகள் வரும்
  • தடைபட்ட திருமணம் நடக்கும் உங்களையும் மகளை பெண் பார்த்துவிட்டு நீண்ட நாள்களாக பதில் தராமல் தயங்கி அவர்கள் இப்போது வலிய வந்து பெண் கேட்டு திருமணம் உடனே முடியும்
  • மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும்
  •  சகோதரிகளிடம் நிதானமாகவும் அளவாகப் பழகுவது நல்லது
  •  உடன்பிறந்தவர்களால் அலைச்சலும் செலவும் வந்துபோகும்
பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கன்னி ராசி

செல்ல வேண்டிய ஆலயம் 

இந்த புத்தாண்டில் கன்னி ராசி அன்பர்களுக்கு அம்பாள் வழிபாடு அளவற்ற நன்மை அளிப்பதாக அமையும்.
 பவுர்ணமி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் படிப்பதும், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப்பொங்கல் சமர்ப்பித்து காமாட்சி அம்மனை தியானித்து வழிபடுவதும் சிறப்பு.
 குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசித்து வழிபட்டு வந்தால் இன்னல்கள் நீங்கும் புது முயற்சிகள் வெற்றி பெறும்.
 இயலாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று குங்குமம் வாங்கி அளிக்கலாம் விளக்கு பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டு வரலாம்.
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

ஆன்மிக தகவல்-சமயபுரம் அம்மன்

சமயபுரம் அம்மன்

 
அம்பாளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் செய்து வைத்தால் தீராத வியாதிகளும் தீரும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
 
தேவி கட்கமாலா எனும் அற்புத ஸ்தோத்திரம் உண்டு. என்றால் இந்த ஸ்தோத்திரத்தை சொன்னால் அம்பிகையின் பாதுகாப்பு எப்போதும் நம்மைச் சுற்றி இருக்கும்.
 
 இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி சமயபுரத்தாளை வழிபடலாம். நம்பிக்கையோடு இந்த அம்மனை வேண்டிக்கொண்டால் கேட்பது அனைத்தும் கிடைக்கும். திருமணம், குழந்தைப்பேறு, கடன் நிவர்த்தி, செல்வ செழிப்பு, ஆரோக்கியம் மேம்படும் என எதைக் கேட்டாலும் நம் எதிர்பார்ப்பை விட அதிகமாகவே கொடுத்து மகிழ்விப்பாள் சமயபுரத்தாள்.
 
ARTICAL 8 ஆன்மிக தகவல்-சமயபுரம் அம்மன்

 

சமயபுரத்து அம்மனைவீட்டிலேயே வழிபடுவது எப்படி?
 
விரத நாள்களில் சமயபுரம் வந்து தரிசனம் செய்ய முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து அம்மனை வழிபட்டு வரம் பெறலாம்.
 
வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து இளநீர், மோர், பானகம், வெள்ளரிப்பிஞ்சு, துள்ளு மாவு ஆகியவற்றை சமர்ப்பித்து வழிபட வேண்டும். பச்சரிசி மாவு நாட்டுச் சர்க்கரையும் கலந்து துள்ளுமாவு செய்வார்கள். 
 
பூஜைக்கு பின்னர் அந்த பிரசாதத்தை ஏழை குழந்தைகளுக்கு வினியோகித்து நாமும் உண்ணலாம். இதனால் சகல நன்மைகளும் உண்டாகும் சமயபுரத்தாள் எப்போதும் நம்முடன் இருந்து நம்மை காப்பாள்.
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

ஆன்மிக தகவல்-பெரியோர்களை வணங்குங்கள்

பெரியோர்களை வணங்குங்கள்!!!

 
 சிவனருளால் சிரஞ்சீவி வரம் பெற்ற மார்க்கண்டேயரின் சரிதத்தில் பலரும் அறியாத ஒரு ரகசியம் உண்டு என்பார்கள் ஆன்றோர்கள். மிருகண்ட மகரிஷி தன் மகனுக்கு உபநயனம் செய்து வைத்தார். பெரியவர்கள் யாரை கண்டாலும் காலில் விழுந்து ஆசி வாங்க வேண்டும் என்பதை மார்க்கண்டேயனுக்கு சொல்லிக் கொடுத்தார். 
 
ஒருமுறை அவர்கள் ஆஸ்ரமத்திற்கு சப்தரிஷிகள் வந்தனர் மார்க்கண்டேயன் அவர்களைப் பணிந்து வணங்கினான் சப்தரிஷிகளும் தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார்கள் அதன்பிறகு அவர்களுக்கு மார்க்கண்டேயனின் ஆயுள் குறித்த செய்தி தெரிந்தது. ரிஷிகள் திகைத்தனர் ஒருவேளை தங்களின் வாக்கு பொய்த்து விடுமோ என்று எண்ணியவர்கள் இதற்கு விடை தேடி அவனை அழைத்துக்கொண்டு பிரம்மலோகம் சென்றனர். அங்கு மார்க்கண்டேயன் பிரம்மனை வணங்க அவரும் மரபுப்படி தீர்க்காயுஷ்மான் பவ என்று வாழ்த்தினார். 
artical%2B 7 ஆன்மிக தகவல்-பெரியோர்களை வணங்குங்கள்
சப்தரிஷிகளும் பிரம்மாவும் வாழ்த்தி விட்டபின் மார்க்கண்டேயனின் உயிரைப் பிரிக்க முடியுமா? பெரியவர்களின் வாக்கு பொய்த்து போக அந்த பரமேஸ்வரன் விடுவானா? ஆகவே காலனை காலால் உதைத்து மார்க்கண்டேயரை காத்தருளினார் இறைவன் என்கிறது புராணம்.
 
 ஆகவே இளையோர்கள் எப்போதும் வயதில் பெரியவர்களை பார்த்தாலும் அவர்களை வணங்குங்கள் அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்..
 
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி 

தாராள மனசுடன் எல்லோருக்கும் உதவும் தனுசுராசி அன்பர்களே!!! இயல்பாகவும் உண்மையாகவும் இருக்கும் உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்.

 உங்கள் ராசிக்கு ஐந்தாம் ராசியில் புத்தாண்டு பிறப்பதால் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள்.
  •  இதுவரை ஏற்பட்ட மன உளைச்சல் காரியத்தடைகள் வாக்குவாதங்கள் எல்லாம் நீங்கும்
  • குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்
  • கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்
  • சுப செலவுகள் வந்துபோகும்
  • நல்லவர்களின் நட்பு கிடைக்கும்
  • முன்கோபம், வரட்டுப் பிடிவாதம் விலகும்
  • ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்
  • எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்
  • பிள்ளைகளிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள்
  •  வைகாசி ஆனி மாதங்களில் வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • ஆடி மாதத்தில் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்
  • மருத்துவச் செலவுகள் வந்துபோகும்
  • வாகனத்தை இயக்கும் போது கவனத்தை சிதற விடாதீர்கள்
  • சிறுசிறு விபத்துகள் நிகழலாம்
  • ஆவணி மாதத்தில் இருந்து பொருளாதார முன்னேற்றம் உண்டு
  •  பிரபலங்களின் நட்பு கிட்டும் வசதி வாய்ப்புகள் பெருகும்
  • சகோதர வகையில் வீண் வாக்குவாதங்கள் மன உளைச்சல் வந்துபோகும்
  •  பூர்வீக சொத்து விவகாரங்களில் நிதானம் தேவை
  • தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு
  • வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்
  • ஆடை ஆபரணங்கள் சேரும்
  • சண்டைக்கு வந்தவர்கள் சமாதானமாக செல்வார்கள்
  • புது நண்பர்கள் அறிமுகமாவார்கள்
artical 6 பிலவ வருட புத்தாண்டு பலன்கள் -தனுசு ராசி

செல்ல வேண்டிய ஆலயம் 

தனுசு ராசி அன்பர்களுக்கு அம்மன் வழிபாடு நன்மைகளைச் சேர்க்கும் ராகு ஐந்தில் நிற்கும்போது ஏற்படும் சங்கடங்களை விளக்க துர்க்கையை சரணடைய வேண்டும்.
 வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி தினங்களில் வீட்டில் விளக்கேற்றி வைத்து சர்க்கரை பொங்கல் படைத்து துர்கா தேவியை தியானித்து வழிபட வேண்டும். மகிஷா சூர மர்த்தினி பாடல், அபிராமி அந்தாதி ஆகியவற்றைப் பாடி வழிபடலாம்.
சிவாலயங்களில் கோஷ்ட  துர்க்கைக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வணங்கலாம்.  ஒரு செவ்வாய்க்கிழமையன்று பட்டீஸ்வரம் துர்க்கையை தரிசித்து வாருங்கள் அன்னையின் அருளால் அல்லல்  நீங்கும்…
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

அடிப்படை ஜோதிடம் -பகுதி-24-துவாதசாமிசம் சக்கரம்

 துவாதசாமிசம் சக்கரம்  அமைப்பது எப்படி?

ஒரு ராசிக்குறிய 30 பாகையை 12 ஆல்  பிரிக்க பாகம் ஒன்றுக்கு 2 1/2 பாகை வரும் .அந்தந்த ராசியிலிருந்தே எண்ணி இதை அமைக்க வேண்டும் .

உதாரண ஜாதகத்தில் சுக்கிரன் 16:34:26ல் உள்ள இதை 21/2 ஆல்  வகுக்க (6 பெருக்கல் 21/2÷15க்கு மேல் இருப்பதால் )6 பாகம் தள்ளி 7 வது பாகத்தில் வருகிறது எனவே சுக்கிரன் நின்ற சிம்ம ராசியில் இருந்து எண்ண 7 வது ராசி கும்பம் வரும் .அங்கு துவாதசாமிசகட்டத்தில் சுக்கிரனை போட வேண்டும் .இப்படி எல்லா கிரகங்களுக்கும் எண்ணி அமைக்க கீழ் கண்டவாறு சக்கரம் அமையும் .

உதாரண ஜாதகம் 

artical 2 அடிப்படை ஜோதிடம் -பகுதி-24-துவாதசாமிசம் சக்கரம்
artical%2B5 அடிப்படை ஜோதிடம் -பகுதி-24-துவாதசாமிசம் சக்கரம்

துவாதசாமிச சக்கரத்தின் பலன்கள் :

இது பெற்றோர்களை பற்றியது .இந்த சக்கரத்தில் தந்தைக்குரிய கிரகம் சூரியன் ஆட்சி .எனவே நல்ல ஆயுளுடன் இருப்பார்.சூரியனுடன் கேது இருப்பது தந்தைக்கு ஒரு இடர்பாடு போராட்டம் இருக்கும் .ராசிக்கட்டத்தின் 9மிட அதிபதியும்இங்கு சனி வீட்டில் நிற்பதால் கடின உழைப்பாளி வர்க்கத்தை சேர்ந்தவராக இருப்பார்.தாயாருக்குரிய வியாழனுடன் மாந்தி இருப்பதால் தாயருக்கு  பிரேத தோஷ சாபமுண்டு. 

நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

அடிப்படை ஜோதிடம் -பகுதி -23-ஹோரா

 அடிப்படை ஜோதிடம் -பகுதி -23-ஹோரா 

ஹோரா -ஆண்  ராசியில் (மேஷம் ,மிதுனம் ,சிம்மம் ,துலாம் ,தனுசு ,கும்பம்)முதல் 15 டிகிரி வரை சூரிய ஹோரா என்றும் பின் பாதி 15 சந்திர ஹோரா என்றும் பிரிக்கபட்டுள்ளது.

ஹோரா -பெண் ராசியில் (ரிஷபம் ,கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் ,மீனம் )1டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர ஹோரா.15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய ஹோரா  என்று பிரிக்கபட்டுள்ளது 

ஆண்  ராசி : 1 டிகிரி முதல் 15 டிகிரி வரை சூரிய ஓரை 

                         15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சந்திர ஹோரை 

பெண்  ராசி : 1 டிகிரி முதல் 15 டிகிரி வரை சந்திர  ஓரை 

                         15 டிகிரி முதல் 30 டிகிரி வரை சூரிய  ஹோரை

ஓராச் சக்கரம் 2 விதமாக அமைக்கலாம் 

ஓராச் சக்கரம் -1 இதன் படி எல்லா கிரகங்களையும் சூரிய சந்திர வீடுகளில் போடா வேண்டும் 

ஓராச் சக்கரம் -2 இதன் படி முதல் 15 டிகிரி வரை இருக்கும் கிரகத்தை அதே வீட்டிலும் அடுத்த 15 டிகிரிக்கு மேல் வரும் கிரகத்தை அந்த கிரகத்தின் மற்றொரு வீட்டிலும் போடவேண்டும் .

ஹோரா
ராசி 15° 30°
மேஷம் மேஷம் விருச்சிகம்
ரிஷபம் ரிஷபம் துலாம்
மிதுனம் மிதுனம் கன்னி
கடகம் கடகம் சிம்மம்
சிம்மம் சிம்மம் கடகம்
கன்னி கன்னி மிதுனம்
துலாம் துலாம் ரிஷபம்
விருச்சிகம் விருச்சிகம் மேஷம்
தனுசு தனுசு மீனம்
மகரம் மகரம் கும்பம்
கும்பம் கும்பம் மகரம்
மீனம் மீனம் தனுசு


இதில்  ஏதுனும் ஒரு முறையை பயன்படுத்தினால் போதுமானது ..

 
உதாரண ஜாதகம் :

artical 2 அடிப்படை ஜோதிடம் -பகுதி -23-ஹோரா
artical%2B 3 அடிப்படை ஜோதிடம் -பகுதி -23-ஹோரா
artica 4 அடிப்படை ஜோதிடம் -பகுதி -23-ஹோரா
 
ஹோரை -சம்பத்து 
 
சூரிய ஹோரை -சந்திர ஹோரை 
சந்திரன்                 -புதன் 
சூரியன்                 -சுக்கிரன் ,செவ்வாய் ,குரு ,சனி ,ராகு ,கேது 
 
இந்த ஹோராக்கள் என்ன பலன் தரும் 
ஆண்  கிரகங்கள் என்று சொல்ல படுகின்ற சூரியன் ,செவ்வாய் ,குரு ,சனி ஆகிய கிரகங்கள் சூரிய ஹோராவில்நிற்பதால் பலம் பெரும்.அதனால் நல்ல பலன்கள்  தரும் 
 
அதேபோல் பெண் கிரகங்கள் என்று சொல்லப்படுகின்ற சந்திரன் ,சுக்கிரன் ,புதன் 
ஆகியவை சந்திர ஹோராவில் இருந்தால் மிக்க வலுவடையும் .அப்படி வலுவடையும் போது வாழ்வில் வளத்தையும் வாடா நிலையையும் தந்துவிடும் 
 
நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கும்பராசி

பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கும்பராசி

கொடுத்துச் சிவந்த கைகளை உடைய கும்பராசி அன்பர்களே!! எவரிடமும் உதவி கேட்டு கை நீட்ட  மாட்டீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாக பழகுவீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு எத்தகைய பலன்களை தரப் போகிறது என்பதை பார்ப்போம்..

தமிழ் புத்தாண்டு உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானமான 3வது ராசியில் பிறப்பதால் 

  • இழுபறியான வேலைகள் முழுமை அடையும்
  •  உங்கள் வாழ்க்கை பிரகாசமடையும்
  • கணவன்-மனைவிக்குள் அன்பு செலுத்துவீர்கள்
  • பிரச்சனை ஏற்படுத்திய உறவினர்களை ஒதுக்குவீர்கள்
  • சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
  • செலவுகளை சமாளிப்பீர்கள்
  • பணப்பை நிரம்பும்
  • பிள்ளைகளின் மனதை அறிந்து செயல்படுவீர்கள்புதிய ஆடை அணிகலன்கள் சேரும்
  • வைகாசி ஆனி மாதங்களில் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும்
  • எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்
  • உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்
  • கோபம் குறையும்
  • பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள்
  • பொருளாதாரம் உயரும்
  • அரசு விஷயங்களில் எச்சரிக்கை தேவை
  • வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்
  • அவணி மாதம் வீட்டில் சுப காரியம் நடக்கும்.
  • பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்
  • பிரபலங்களின் விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்
  • புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவதால் மனநிறைவு கிட்டும்
  • நல்ல வேலை இல்லையே என்று வருந்தி அன்பர்களுக்கு புரட்டாசி மாதம் புது வேலை தேடி வரும்
  • நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு
  • வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்
  • அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்
  • அரைகுறையான கட்டட வேலைகள் முழுமை அடையும்
  • ஐப்பசி கார்த்திகை மாதங்களில் புதிய வீடு மனை வாங்குவீர்கள்
  • உங்களின் பேச்சைக் கேட்டு அனைவரும் வியப்பர்
  • எதிர் வீட்டுக்காரர்கள் உடனிருந்த சண்டை சச்சரவு விலகும்
  • வெளியூர் பயணம் ஆதாயம் தரும்
artical%2B1 பிலவ வருட புத்தாண்டு பலன்கள்-கும்பராசி

செல்ல வேண்டிய ஆலயம்
கும்ப ராசி அன்பர்களுக்கு சனி பகவான் விரயச் சனியாக பலன் தர உள்ளார் அதேபோல் 20.3 2022 வரையிலும் ராகு கேது சஞ்சாரம் சில சஞ்சலங்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

இது போன்ற குறைகளும் பாதிப்புகளும் நீங்க கும்ப ராசிக்காரர்கள் அம்மனை சரணடைய வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் அருகிலுள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று தீபமிட்டு வழிபடல்வேண்டும்.பவுர்ணமி தினங்களில் வீட்டில் சித்தாரன்னங்கள் படைத்து வழிபடுங்கள்.

முடிந்தால் வெள்ளிக்கிழமை திருவாரூர் மாவட்டம் புட்லூர் எனும் தலத்தில் அருளும் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டு வாருங்கள் வினைகள் யாவும் நீங்கும்.

நன்றியுடன்! 
சிவா.சி  
✆9362555266