Friday, July 26, 2024
Homeதோஷங்களும்-பரிகாரமும்நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்!!!

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்!!!

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

அஸ்வினி(Ashwini) 

முதல் நட்சத்திரங்கள்  பாதத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு மூன்று மாதங்களுக்கு இன்னல்களும், பொருள் நஷ்டமும் உண்டாகும். அதற்கு சொர்ண தானமளிக்க வேண்டும். மற்ற மூன்று பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. இதற்கு வஸ்திர தானம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கூத்தனூரில் எழுந்தருளியுள்ள கலைவாணியை வழிபட்டு வந்தால் எல்லா சிறப்புகளையும் பெறலாம்.

 பரணி(Bharani) 

முதல் பாதம் தோஷம் இல்லை. இரண்டாவது பாதத்தில் பிறந்தால் தோஷம் உண்டு. மூன்றாவது பாதம் மிகுந்த துன்பத்தைத் தரும். 4ஆம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் தாயாரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும்.  இதற்கு சாந்தியாகத்  துர்க்கை அல்லது காளிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டும். பொன்  அல்லது எருமை தானம் அளிக்கலாம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர்  பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வழிபட்டால் வளம் பெருகும்.

 கிருத்திகை(Kiruthigai)

முதல் இரண்டு பாதங்கள் தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தால் பெற்றோர்களுக்கு இன்னல்களும், இடையூறுகளும் உண்டாகும். இதற்க்கு  ஆடு தானம் சிறந்தது . சூரிய ஆராதனையும், திருவண்ணாமலையில் உள்ள அக்னி லிங்கம் வழிபாடுகளும் மன அமைதியையும், பொருள் வளமையையும் தரும்.

 ரோகிணி(Rohini) 

முதற்பாகம்  அக்குழந்தைக்கும், தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம்  தந்தைக்கும் , மூன்றாம் பாதம் தாயாருக்கும் தோஷம் விளைவிக்கும். நான்காம் பாதம் சாதாரணமானது எனினும் நான்காம் பாதத்திற்கு தோஷம் உள்ளது. அத்துடன் தாய்மாமனுக்கு கண்டம் என நூல்கள் விலக்குகின்றன. எனவே அவரவர் சக்திக்கேற்ப சாந்தி ஹோமங்கள் செய்வதுடன், வெள்ளியை தானம் அளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் திருவருணை  கோவிலில் பிரம்ம தீர்த்தம் எதிரில் உள்ள பிரம்ம லிங்கத்தை வழிபட்டு வந்தால் திரண்ட செல்வமும்,நிறைந்த ஞானமும் பெறலாம்.

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

 மிருகசீரிடம்(Mirugaseeredam) 

நான்கு பாதங்களும் தோஷமில்லை. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து சந்திரனை  வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறலாம். திங்களூர்  சென்று வழிபட்டால் தீராத குறைகளெல்லாம் தீரும்.

 திருவாதிரை(Thiruvathirai)

முதல் 3 பாதங்களும் தோஷமற்றது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகை வரையில் தாயாருக்கு கண்டம். இதற்கு பசு நெய் தானம் அளித்திட வேண்டும். செவ்வாய் அல்லது வியாழக்கிழமைகளில் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் விஷ்ணு ஸகஸ்ர நாமம், ருத்ர ஜபம் செய்து வந்தால் நீண்ட ஆயுளைப் பெறலாம்.

 புனர்பூசம்(Punarpoosam)

4 பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூரிய ஆராதனை செய்வது சாலச்சிறந்தது.திருவண்ணாமலையில் உள்ள சூரிய லிங்க ஆராதனை மிகவும் புகழையும், பொருளையும் வழங்கும்.

 பூசம்(Poosam)

முதற்பாகம் தாய் மாமனுக்கும், இரண்டாம் பாதம் ,மற்றும் மூன்றாம் பாதம் பெற்றோர்களுக்கும் துன்பம், நான்காம் பாதம் தோஷமற்றது. இரண்டாம் பாதமும்  கடக லக்னமும் கூடிய ஆண் குழந்தை தந்தைக்கு கண்டத்தை உண்டாக்கும். இரவு நேரங்களில் பிறந்த பெண்குழந்தையால்  தாயாருக்கு கெடுதி. இதற்கு பரிகாரமாக பசுவை தானம் செய்தல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தட்சிணாமூர்த்தியையோ , ஹயக்ரீவரையோ வழிபட்டு வருவது சிறந்ததாகும்.

 ஆயில்யம்(Ayilyam)

முதற்பாகம் சாதாரணமானது. இரண்டாம் பாதம் அக்குழந்தைக்கும், தந்தைக்கும் தோஷம். மூன்றாவது பாதம் தாயாருக்கு கெடுதி. நான்காம் பாதம் அக் குழந்தைக்கும், தந்தைக்கும் துன்பத்தைத் தரும். இதற்கு கிரக சாந்திகள் ,ஜபம், தானங்கள் அவசியம் செய்திடல் வேண்டும்.

நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தைக்கு ஆயுஷ் ஹோமம் செய்வதும், ஏழை எளியவர்களுக்கு வஸ்திரம், அன்னதானம் செய்வதும் மிகவும் அவசியம்.இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் சர்பேஸ்வரனை வணங்குவது நல்ல பலன்களைத் தரும். ஸ்ரீகாளகஸ்தி மற்றும் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது சிறந்தது.

மகம்(Magam) 

முதல் பாகம், குழந்தையின் தந்தைக்கு தன நஷ்டத்தை, குழந்தை பிறந்து ஐந்து மாதம் வரை உண்டாக்கும். ஈஸ்வரனுக்கு அபிஷேக ஆராதனைகள், கிரக சாந்திகள், தானங்கள் செய்திடலாம். 2 மற்றும் நான்காம் பாதம் சிறிதளவு தோஷம் உள்ளது.

மூன்றாவது பாதத்தில் குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாயாருக்கும் தோஷத்தை உண்டாக்கும். இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் பித்ரு தேவதைகளை வழுவாது ஆராதனை செய்வது. திருக்கடையூர் ,ஸ்ரீவாஞ்சியம், திருமீச்சூர், திருப்பைஞ்சீலி ஆகிய திருத்தல வழிபாடுகளும் பெறும் நன்மை அளிக்கும்.

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

பூரம்(Pooram)

4 பாதங்களும் சிறிதளவு தோஷம் உள்ளது. இதற்கு பரிகாரமாக ருத்ராபிஷேகம் செய்வது மிகச் சிறந்தது. இந்த நட்சத்திரத்தைச் சார்ந்தவர்கள் ஆதித்ய ஹ்ருத்யம்  நாள்தோறும் படிப்பது, சூரியனை வழிபடுவது நன்மையாகும்.

 உத்திரம்(Uthiram)

முதற்பாகம்  முதல் இரண்டு நாழிகைக்குள் பிறந்த குழந்தை  ஆண் என்றால் தந்தைக்கும் ,பெண் என்றால் தாயாருக்கும் தோஷம் உண்டாகும். இது இரண்டு மாதத்திற்குண்டு. மற்றும் மூன்றாம் பாதம் சாதாரணமானது. நான்காம் பாதம் தந்தையின் சகோதரர்களுக்கு தோஷம் உண்டு பண்ணும். இதற்கு பரிகாரமாக தைல (எண்ணெய் )  தானம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தை சார்ந்தவர்களுக்கும்  12 ஆதித்யர்தனை சேர்ந்த ஆர்யமன் என்னும் சூரியனை வழிபடல்  வேண்டும் .

 அஸ்தம்(Hastham)

1,2 மற்றும் நான்காம் பாதம் தோஷமற்றது. மூன்றாம் பாதத்தில் முதல் நான்கு நாழிகைக்குள் ஆண்  என்றால்  தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமுண்டு. இது ஒன்பது மாதங்கள் நீடிக்கும்.

இந்த தோஷத்த்தை  ஸ்ரீ வர்ணம்  என்று கூறப்படும்.பொன்  தானத்தால் நீக்கிக்கொள்ள முடியும். ஆதித்ய ஹ்ருதயம் , தினமும் சூரிய வழிபாடு மேற்கொள்ள எல்லா நன்மைகளும் விளையும்.

 சித்திரை(Chithirai)

முதல் மூன்று பாதங்கள் தாயாருக்கும், தந்தை மற்றும் சகோதரர்களுக்கும் தோஷம் உண்டாகும். இரண்டாம் பாதத்தில் முதல் ஆறு நாழிகைக்குள் என்றால் குழந்தையின் தாய்க்கு மிகவும் தோஷம். முதலிரண்டு பாதங்களுக்கு உரிய  கன்னிராசியில் பகலில் பிறக்கும் ஆண் குழந்தையால் தந்தைக்கும் ,பெண் குழந்தைகள் தாயாருக்கும் தோஷம் உண்டாகும். இது பிறந்த ஆறு மாத காலத்திற்கு நீடிக்கும்.

நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தை தந்தைக்கு துயரத்தை உண்டாக்கும் . வஸ்திரதானம் ஏற்ற பரிகாரம் ஆகும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்திரன் வழிபட வேண்டும்.

திருவண்ணாமலையில் கிழக்கு திசையிலுள்ள  அஷ்ட லிங்கங்களில் முதல் லிங்கமான இந்திர லிங்கம் வழிபாடு செல்வாக்கும், செல்வம் ,பதவி உயர்வு தரும்.

சுவாதி(Swathi)

நான்கு பாதங்களும் தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாயு தேவனை வணங்குதல் நன்று.  அருணையிலுள்ள  வாயு லிங்கம் வழிபாடு சாலச்சிறந்தது. திருமகளையும் வணங்குவது ஏற்றது.

 விசாகம்(Visaham)

4ஆம் பாதம் தோஷம். மற்றும் பாதங்கள் தோஷமில்லை. 4ஆம் பாதம் முதல் எட்டு நாழிகைக்குள் முதல் குழந்தையாக இருப்பின் தாயாருக்கு கண்டம் என்று கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை, சஷ்டி, கிருத்திகை போன்ற சுப்பிரமணிய சாமிக்குரிய  நாட்களில் செந்நிற ஆடை ,சிவப்பு மலர்கொண்டு அபிஷேக ஆராதனைகள் செய்வதும், துவரை மற்றும் கோதுமை தானிய தானங்கள் செய்வது சிறப்பான பலன்களைத் தரும்

நட்சத்திர தோஷமும் அதற்க்கு செய்ய வேண்டிய பரிகாரங்களும்

 அனுஷம்(Anusam) 

தோஷமற்றது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மித்ரா எனும் துவாதச ஆதித்யர்களில் ஒருவரான சூரியனை வழிபடல் வேண்டும்.

வருணனையும், திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் வருண லிங்கத்தையும் வழிபடுவது மிகவும் சிறந்தது.

 கேட்டை(Kettai) 

4 பாதங்களும் தோஷத்தை தருவன. முதல் பாதத்தில் பிறந்தது  ஆண் குழந்தையாயின்   மூத்த சகோதரனுக்கும், பெண்ணென்றால் மூத்த சகோதரிக்கும், இரண்டாம் பாதம் மற்ற சகோதரர்களுக்கும் உறவினர்களுக்கும், மூன்றாம் பாதம் அக்குழந்தையின் தாய்க்கும், செல்வத்திற்கும், 4ஆம் பாதம் அக்குழந்தை மற்றும் அதன் தாயாருக்கும் கண்டமாகும்.

பசு  அல்லது தங்கத்தால் செய்த பசுவினை தானமளிக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவேந்திரனை வழிபடல் வேண்டும் .

இந்த நட்சத்திர பெண்கள் திருமண தடை நீங்க தூய வெண்மையான மலர்கொண்டு தேவேந்திரனை மனதில்  தியானித்து வழிபாடு செய்தல் நல்ல கணவர் அமைவார்.அருணையிலுள்ள இந்திராலிங்க பூஜையும் மிகவும் சிறந்த பலன்களை  தரும் .

  மூலம்(Moolam)

முதல் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு துன்பம். பெண் குழந்தையாயின்  கால்நடைகள் நஷ்டமாகும். இரண்டாம் பாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் அதன் தாய்க்கு துன்பம்.ஆண்  குழந்தையால் பொருள் நஷ்டம் அதன் சகோதர்களுக்கு துன்பம் ஏற்படும்.

3ஆம் பாதம் பெண் குழந்தையினால் தந்தையின் வம்சத்திற்கு நஷ்டம். மூன்றாம் பாதம் பகலில் பிறந்தால், அதன் தந்தைக்கும் மாலை  பொழுதில்  பிறந்தால் அக்குழந்தையின் தாய் மாமனுக்கும், இரவில் பிறந்தால் தாய்க்கும், உதய வேளை  அல்லது காலை எனில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தீங்காகும்

எப்பாதத்தில் பிறந்திருப்பினும்  ருத்ராபிஷேகம் செய்திடல் வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் பிரகஸ்பதியை வழிபட்டால் வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெறுவார்கள்.

 பூராடம்(Pooradam) 

1,2 மற்றும் 4-ஆம் பாதங்களில் பிறந்தால் சிறிதளவு தோஷமுண்டு. மூன்றாம் பாதத்தில் பிறந்த குழந்தை ஆண் என்றால் தந்தைக்கும், பெண் என்றால் தாய்க்கும் தோஷமாகும்.

இத்தோஷம் எட்டாம் மாதம் வரையில் இருக்கும், தனுசு ராசியில் உள்ள இந்த நட்சத்திரத்தில் சூரிய உதய வேளையிலும், அஸ்தமிக்கும் வேளையிலும் , நடு இரவிலும் புத்ர  ஜனனம் ஆனது அதன் தந்தைக்கும் மற்றும் சிசுவிற்கும் பெரும் தோஷமாகும்.

நவக்கிரகம் மற்றும் நட்சத்திர ஹோமம் செய்வதும், புனித கங்கை நீரினால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர்.

திருவானைக்காவல் இறைவனையும், திருவண்ணாமலையில் உள்ள வருண லிங்கத்தை வழிபட்டால் ,நல்ல செல்வமும், செல்வாக்கும் பெறலாம். பவுர்ணமி விரதம் ஏற்றது , தேங்காய், நெய் தீப வழிபாடு சாலச்சிறந்தது.

 உத்திராடம்(Uthiradam)

 4 பாதங்களும் தோஷமில்லை. எனினும் செவ்வாய்க்கிழமை உத்திராட நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் விஷ கன்னியா  யோகம் உண்டாகும். அப்பெண் திருமணமாகி, கணவன் வீடு செல்லும் வரையில் பிறந்த வீட்டில் இன்னல்கள், இடையூறுகள் உண்டாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விஸ்வ தேவதைகளையும், விநாயகரையும் வழிபட்டால் வாழ்க்கையில் வளம் பெறலாம். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் ,திருப்பாதிரிப்புலியூர் பாதிரி விநாயகர், திருவண்ணாமலை ஆநிறை  கணபதி ஆகியோரின் வழிபாடு சிறப்பைத்தரும்.

 திருவோணம்(Thiruvonam) 

தோஷமில்லை இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் பொன்னும், பொருளும் கிடைக்கும். சிரவண  விரதம் மேற்கொண்டு திருவேங்கடமுடையான் ஆராதித்து, லக்ஷ்மி குபேர திருவுருவப் படத்தை- குபேர யந்திரம்- மந்திரம் கொண்டு பூஜித்து, திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள குபேர லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் பெரும் பொருளும், புகழும் பெறுவார்கள். இவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்

 அவிட்டம்(Avittam) 

தோஷமற்றது  .இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அஸ்டஸீக்களை   ஆராதிக்க வேண்டும். பித்ரு முக்தி ஸ்தலங்களில்  இராமேஸ்வரம், காசி, கயை,  லால்குடி அருகிலுள்ள பூவலூர் ஆகிய ஊர்களில் உள்ள இறை மூர்த்திகளை ஆராதனை செய்வது மிகுந்த நன்மை தரும்.

சதயம்(Sathayam) 

தோஷம் இல்லாதது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் திருவானைக்காவல் இறைவனையோ, திருமீச்சூரில்  எழுந்தருளியுள்ள ஸ்ரீ மேகநாதரையோ திருவனையில் உள்ள வருண லிங்கத்தை வழிபட்டால் இன்னல்கள் எல்லாம் நீங்கி இன்பம் அடைவர்.

 பூரட்டாதி(Pooratathi) 

முதல் மூன்று பாதங்கள் சிறிதளவு தோஷம்  உள்ளது. நான்காவது பாதத்தில் முதல் எட்டு நாழிகைக்குள் பிறந்தால் தாய்க்கு கண்டம் அதுவும் முதல் குழந்தை எனில் தோஷம் அதிகம். பொன் தானம் கொடுக்க வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் செல்வத்தில் சிறக்க லட்சுமி குபேர பூஜையை மேற்கொள்ளவேண்டும்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கதையும் சீர்காழி அருகிலுள்ள ஸ்ரீலட்சுமி புரீஸ்வரரையும் வழிபடுவது சாலச் சிறந்தது.

 உத்திரட்டாதி(Uthiratathi)

தோஷமற்றது இந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் காமதேனுவை பூஜித்தாலும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் வழிபட்டாலும் நல்லவை எல்லாம் இடையூறின்றி வெற்றியுடன் நடைபெறும்.

 ரேவதி(Revathi)

முதல் மூன்று மாதத்தில் பிறந்தால் சிறிதளவு தோஷம் உண்டாகும். நான்காம் பாதத்தில் பிறந்த குழந்தையின் தந்தைக்கு தோஷம் உண்டு. மூன்று மாதம் இருக்கும் இந்த தோஷம் விலக  பொன்னாலான பசு உருவம் மற்றும் பசு நெய்  தானமளிக்க வேண்டும்.

 12 ஆதியர்களின்  ஒருவரான பூஷர் என்பவரையோ,சூரியனார் கோவிலில் எழுந்தருளியிருக்கும் சூரிய நாராயண மூர்த்தியையோ அல்லது திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சூரிய லிங்கத்தை வழிபட்டால் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்று சிறந்த முறையில் புகழுடன் வாழலாம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular