Wednesday, March 22, 2023
Homeஆன்மிக தகவல்துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?

துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்?

ASTRO SIVA

google news astrosiva

துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்

ராகு கேது பெயர்ச்சியால் ஜாதகரீதியாக சில சிரமங்கள் வருமானால் துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது

ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னதியில் மாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள்

திங்கள் கிழமைகளில் காலை 7:30 மணிக்கு மேல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணைக்காப்பு செய்து,வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

செவ்வாய்

ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் 4:30 மணிக்குள் வடக்கு முகமாக தீபம் ஏற்றி தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்

புதன்

மதியம் 12 மணி முதல் 1:30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பதும், மன நோய் தீரும் என்பதும் நம்பிக்கை.

வியாழன்

வியாழக் கிழமைகளில் மதியம் 1:30மணிக்கு மேல் 3:00 மணிக்குள் விளக்கேற்றி எலுமிச்சைப் பழ சாதம் நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும், இதய சம்மந்தமான நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளி

வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10:30 மணி முதல் 12:00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அதை குழிவாக செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும், மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

சனி

காலை 9:00 மணிக்கு மேல் முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular