Rasi Palan Today-03.11.2021
மேஷம்-Mesham
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்தே ஓரளவு லாபம் பார்ப்பீர்கள். நிலுவைப் பணம் சிலருக்கு வசூலாகும். நீண்ட நாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைக்கு வந்து சேரும்.
ரிஷபம்-Rishabam
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். எனினும் சமாளித்து விடுவீர்கள்.
மிதுனம்-Mithunam
இன்று குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், பாதிப்பு இருக்காது. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். தாய்வழியில் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு நீண்ட நாளாக முடியாமல் இருந்த தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம். பொறுமையுடன் அதனைக் கையாளவும். மொத்தத்தில், கோபத்தைக் குறைத்து நிதானமாக வெற்றி அடைய வேண்டிய நாள்.
கடகம்-Kadagam
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். மாலையில் திடீர் என நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படலாம். அலுவலகப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத் தான் இருக்கும்.
சிம்மம்-Simmam
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாள். மேற்கண்ட சோதனைகளை தவிர்க்க விநாயகரை வழிபடுங்கள்.
கன்னி -Kanni
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. எனினும், உடனுக்குடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். தாய்மாமன் வகையில் நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி இன்று சிலருக்கு கிடைக்கக் கூடும். வாழ்க்கைத் துணை வழியில் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். எனினும், தேவைகள் இறுதியில் நிறைவேறும்.
துலாம்-Thulam
இன்று மற்றவர்களுடன் இருந்த பகை நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். பணம் வரும் வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். நீண்ட நாள் கஷ்டங்கள் நீங்கும். பல விதத்திலும் நன்மை செய்யும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும்.
விருச்சிகம்-Viruchigam
கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் மறைந்து மகிழ்ச்சியான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
தனுசு-Thanusu
செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். உத்தியோ கத்தில் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
மகரம்-Magaram
நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
கும்பம்-Kumabm
அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களை உங்களுடன் ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் எதிலும் கவனம் தேவை. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்-Meenam
இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். மொத்தத்தில் இது ஒரு சுமாரான நாளே.