பெரியபாளையம் பவானி அம்மன்
வரலாறு :
சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது பவானி அம்மன் ஆலயம். பவானி என்றால் நல்ல வாழ்க்கையை வழங்குபவள் என்று பொருள்.
சிறப்பு :
ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் இக் கோவிலுக்குச் சென்று அம்மனை வழிபடுவது நன்று. இவள் பகவான் கிருஷ்ணனின் சகோதரி ஆவாள். இவள் கம்சனிடம் , நீ கிருஷ்ணனால் கொல்லப்படபோகிறாய் என்று கூறி , அவனது மார்பில் எட்டி உதைத்துவிட்டு வானத்திற்குள் பறந்து , பின்பெரிய பாளையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
பரிகாரம் :
பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற பவானி அம்மனுக்கு அங்கப்பிரதக்ஷிணம் செய்வர். இக்கோவிலில் வேப்பஞ்சேலை அணிவது விசேஷமாகும். இக்கோவிலில் வழங்கப்படும் குங்குமமும். தீர்த்தமும் . பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவம் கொண்டவையாகும் .
வழித்தடம் :
சென்னை மாநகரம் கோயம்பேடு . பிராட்வே பேருந்து நிலையங்களிலிருந்தும் , புறநகர் பகுதியிலிருந்தும் கோவிலுக்கே நேரடியாக பேருந்துகள் வந்து செல்கின்றன.