Friday, September 29, 2023
Homeஜோதிட குறிப்புகள்தர்மகர்மாதிபதி யோகம்

தர்மகர்மாதிபதி யோகம்

ASTRO SIVA

google news astrosiva

தர்மகர்மாதிபதி யோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் பலவிதமான யோகங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒரு மனிதன் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுவாழ முதல்தரமான யோகமாகக் கூறப்பட்டிருப்பது தர்மகர்மாதிபதி யோகமாகும்.

காலபுருஷ தத்துவப்படி , காலபுருஷ லக்னம் மேஷமாகும். அதற்கு ஒன்பதாம் வீடான தனுசு தர்ம ராசியாகும். பத்தாம் வீடான மகரம் கர்ம ராசியாகும் காலபுருஷ ஒன்பதாமதிபதி , தர்மாதிபதியான குருவுக்கும் கர்மாதிபதியான சனிக்கும் எந்த வகையில் சம்பந்தம் இருந்தாலும் அது தர்மகர்மாதிபதி யோகமாகும்.

குரு , சனி சம்பந்தமென்பது முன்ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களின் அடிப்படையில் ஏற்படுவதாகும்.தர்மம் என்றால் , ஒருவர் தனது செய்கையால் தன் குடும்பத்தினருக்கும் , தன் சந்ததியினருக்கும் , தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ புண்ணியங்கள். கர்மம் என்றால் தான் செய்த , செய்யும் தொழில்மூலம் தன் வாரிசுகளுக்கும் , தன் தலைமுறையினருக்கும் சேர்த்துவைக்கும் பாவ புண்ணியங்கள்.

ஒருவருக்கு இந்த கிரக இணைவால் வாழ்நாள் முழுவதும் புண்ணியப் பலன்கள் கிடைக்க ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் சுப வலிமை பெறவேண்டும் நீசம் , வக்ரம் , அஸ்தமனமாகாமல் இருப்பதோடு அஷ்டம் பாதக ஸ்தானத்தோடு சம்பந்தம் பெறாமல் இருக்கவேண்டும். இவ்வாறு இருந்தால் நூறு சதவிகிதம் சுபத்தன்மையுடன் வரமாக செயல்படும் . இந்த கிரகச் சேர்க்கை இருப்பவர்களின் குடும்பமே கஷ்டப்பட்டாலும் , ஜாதகர் மட்டும் எப்படியும் நல்ல நிலைக்கு வந்து விடுவார்.

ஜனனகால ஜாதகத்தில் குருவும் சனியும் அஷ்டம பாதக ஸ்தானத் தோடு சம்பந்தம் பெற்றாலும் , நீசம் , அஸ்தமனம் , வக்ரம் பெற்றாலும் , இந்த கிரக இணைவு அசுபத் தன்மையோடு சாபமாக- பிரம்மஹத்தி தோஷமாக செயல்படும்.

இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த முடியாது.இதில் குரு , சனி சேர்க்கை மற்றும் சமசப்தமப் பார்வை நூறு சதவிகித நற்பலன் தரும்.

சனி மட்டும் குருவைப் பார்ப்பதும் , குரு மட்டும் சனியைப் பார்ப்பது ஐம்பது சதவிகிதப் பலன் தரும். குரு , சனி சேர்க்கையை செவ்வாய் பார்த்தாலும் அல்லது சேர்ந்தாலும் , அந்த நபர் எவ்வளவு சம்பாதித்தாலும் தங்காது. அல்லது உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது.வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும். மன உளைச்சல் அதிகமாகிக்கொண்டே இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் தர்மகர்மாதிபதி யோகம் சுபத் தன்மையோடு செயல்பட்டால் , சிறிய உழைப்பில் பெரும்பொருள் சேரும் . அசுபத் தன்மையோடு செயல்பட்டால் சிறிய பொருளுக்கு அதிகம் உழைக்கநேரும். தர்மகர்மாதிபதி யோகம் மிகுந்த சுபத்தன்மையுடன் இயங்கினால் , தனது உழைப்பிற்குக் கிடைக்கும் வெகுமதியைக்கூட கொரவம் கருதி வாங்க மறுப்பவர்கள் உண்டு.

பரிகாரம்

ஜனனகால ஜாதகரீதியாக குரு , சனி சம்பந்தமானது அஷ்டம பாதக ஸ்தானத்தோடு இணைந்து மிகுதியான பொருள் பற்றாக்குறையை அனுபவிப்பவர்கள் அல்லது குரு , சனி சம்பந்தம் இல்லாமையால் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாதவர்கள்

வியாழக்கிழமை இரவு 7:00-8:00 மணி வரையிலான சனி ஓரையில் காலபைரவ அஷ்டகம் படித்துவர , உழைப்பிற் கேற்ற ஊதியம் கிடைக்கும் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular