Free Astrology Consultation| இலவச ஜாதக பலன்

Free Astrology Consultation| இலவச ஜாதக பலன்

வாசகர்கள் ஜாதக சம்மந்தமான கேள்விகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.கேள்விக்கான பதில்கள் இதே பக்கத்தில் பிரசுரிக்கபடும்.

Free Astrology Consultation

கேள்வி : விவாகரத்து கிடைக்குமா? மறுமணம் எப்போது நடக்கும்? ,Ramanathan,Tirunelveli

பதில் : மகர லக்கினம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 31.08.2023 வரை சனி தசை உள்ளது,தற்போது சனி தசையில் குரு புத்தி நடந்து வ்ருகிறது 7ம் அதிபதி சந்திரன் உடன் சூரியன் கேது சம்மந்த பட்டு இருப்பதுடன் ,8ல் சுக்ரன் செவ்வாய் இருப்பதும் ஒரு மோசமான கிரக அமைப்பு ,31.08.2023 க்கு பிறகு ஒரு நல்ல வழி பிறக்கும்,ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதன் கிழமையில் புதன் ஓரையில் சென்று வாருங்கள். மாற்றம் நிகழும்.

கேள்வி : திருமணம் எப்போது நடக்கும்..திருமணம் பின் வாழ்க்கை எப்படி இருக்கும்.கடக லக்னம்… 6ல் சந்திரன் செவ்வாய் கேது சேர்க்கை….ராகு 12ல் …..now ராகு திசை நடக்குது.விஜி ,பட்டுக்கோட்டை

பதில் : கடக லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு தசா ராகு புத்தி நடந்து வருகிறது. லக்கினாதிபதி சந்திரனுடன் செவ்வாய் கேது சம்மந்தபட்டு 6இல் இருப்பது ஒரு மோசமான அமைப்பு. தசாநாதன் 12-ல் வலுவாக இருப்பதால் 18.09.2025 க்குள் திருமணம் நிகழும்.வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிளை வ்ருவதற்கு வாய்ப்பு உண்டு அல்லது திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லலாம்.பொதுவாக கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை மிக யோக பலன்களையே வழங்கும்.ஒருமுறை ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.

கேள்வி : எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லலாம்?,மோகன் ராஜ் ,தூத்துக்குடி

பதில் : 28.01.2024 க்கு பிறகு சொந்த நாட்டுக்கு விடுப்பில் சென்று வரலாம்.

கேள்வி : வெளிநாடு வந்து விட்டேன் 5 மாதமாக வேலை இல்லை குடும்பமும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர் இந்த நிலை எப்போது மாறும்,விஜயகுமார்,கோயம்புத்தூர்

பதில் : கன்னி லக்னம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது கோச்சார கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்,12 ராகு சனி இருப்பது வெளிநாட்டு வேலையில் ஒரு தொல்லை தரும் அமைப்பு.மேலும்  உங்களுக்கு நடப்பு தசா கேது தசாவாக இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. வாழ்க்கையில் வெறுமை, சோகம், கவலை, ஏமாற்றம் இது போன்று பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிந்த வரையில் எந்த ஒரு  காரியத்திலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுங்கள். சங்கடகர சதுர்த்தி தோறும் விநாயகரை வழிபட்டு வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்.

கேள்வி : கடந்த மூன்று மாத காலமாக காவல்துறையில் பணியிடை நீக்கத்தில் உள்ளேன் தற்பொழுது உள்ள இந்த பிரச்சனை எப்பொழுது எனக்கு முடிவுக்கு வரும்அவ்வாறு முடிவுக்கு வந்த பின்பு எத்திசையில் பணியிட மாற்றம் நிகழும்.Shanmugavel.r,Anuppapatty

பதில் : விருச்சிக லக்கனம் துலாம் ராசியில் பிறந்துள்ள நீங்கள் பிறக்கும் பொழுதே உங்கள் லக்னம் புதாத்திய யோகத்தில்  அமைந்துள்ளது. மேலும் உங்கள் லக்னத்திற்கு 2-ல் சனிபகவானும் சுக்கிரனும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். தற்போது நடப்பு தசாவான புதன் தசா உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தராது. ஏனென்றால் புதன் விருச்சிக லக்னத்திற்கு பாபர் என்ற முறையில் சில தொல்லைகளை தருவார். மேலும் இந்த காலகட்டத்தில் அளவுக்கதிகமான கோபங்கள் தலை தூக்கும். முடிந்த அளவு கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் பொறுமையுடன் செயல்பட்டால் உங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தற்போது நடைபெற்று இருக்கின்ற குரு பெயர்ச்சியும், வருகின்ற ராகு கேது பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்கும். உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கும், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் நெய் விளக்கு வைத்து வர சகல துறைகளிலும் தடைகள் விலகி மேலும் நன்மை நடக்கும்.

கேள்வி : திருமணம் எப்போது கை கூடும். மணிகண்டன் ,பெரம்பலூர்

பதில் : 03.11.2023 க்கு பிறகு திருமண முயற்சிகள் கைகொடுக்கும்.கடினமான தேடலுக்கு பின் தான் மண வாழ்க்கை அமையும்.மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

கேள்வி : 1தொழில் தொடங்கலாமா 2.வயது ஆகிவிட்டது திருமணம் எப்போது 3.பணம் பிரச்சனை இருக்கின்றது எப்போது சரி ஆகும்.4.நல்ல காலம் வருமா,கணேசன் ,புதுக்கோட்டை

பதில் : விருச்சிக லக்னம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மாரகாதிபதியான சுக்கிரனின் திசை முடிந்து தற்போது சூரிய திசை ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் அதிகப்படியான மன உளைச்சல், வேதனை, ஏன் வாழ்கிறோம் என்கின்ற குழப்பம் என அதிகப்படியான இன்னல்களை சந்தித்து வந்திருப்பீர்கள். தற்போது கூட அந்த இன்னல்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது நடைபெறும் சூரிய தசா ராகு புத்தி 29.07.2023  வரை உள்ளது. நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவது இப்போது வேண்டாம். மேலும் உங்களது கோச்சார கிரக நிலைகளும் சரி இல்லாமல் இருப்பதால் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. 29. 7. 2023 க்கு பிறகு திருமணம் முயற்சிகள் கைகூடிவரும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருப்பதாலும் கேதுவின் சாரம் பெற்று சூரியன் தசையை நடத்துவதாலும் திருமண முயற்சிகள் சற்று தடைக்குப் பின் தான் நடைபெறும். ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வேளையில் கும்பகோணம் அருகில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று நவகிரகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் மாற்றம் கிட்டும்

கேள்வி : அரசு வேலை எப்போது கிடைக்கும் ,சிவநந்தினி ,கடலூர்

பதில் : மேஷ லக்னம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது மாரகாதிபதியான சுக்கிரனின் தசை நடைபெற்ற வருகிறது. சுக்கிரன் 12ல் உச்சம் பெற்ற தசையை நடத்துவதால் உங்களுக்கு பாதிப்புகள் சற்று குறைவாக தான் இருக்கும். ஏனென்றால் உங்கள் ஜாதகத்துக்கு சுக்கிரன் மறைவது நல்லது. மேலும் 26.5.2023 வரை சுக்கிர திசை இருப்பில் உள்ளது. அதுவரை மிக கவனமுடன் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு வருகின்ற சூரிய தசையில் அரசு சார்ந்த முயற்சிகள் கைகொடுக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயம் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

கேள்வி : என் ஜாதகம் இந்த பையன் ஜாதகம் பொருத்தம் இருக்கா வீட்டில் ஜாதகம் பார்த்து எங்களை சேர்க்க வாய்ப்பு உண்டா…..நாங்க திருமணம் பன்னலாமா….சேர்ந்தால் after mrg பிரிவினை வருமா

பதில் : உங்கள் இருவர் ஜாதகதத்திலும் நட்சத்திர பொருத்தம் நன்றாக உள்ளது.திருமணம் செய்யலாம்.

கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? திருமண தடை பரிகாரம் ,ஜெயலட்சுமி,விருதுநகர்.

பதில் : மேஷ லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 28.02.2024க்கு பிறகு திருமண வாய்ப்புகள் கூடிவரும்.செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் மலைமேல் இருக்கும் முருகனை வழிபட்டுவாருங்கள்.நல்லது நடக்கும்.

கேள்வி : நல்லா வேலை எப்போ கிடைக்கும்? அரசு வேலை வாய்ப்பு உள்ளதா?,செல்லபாண்டியன்,விருதுநகர்.

பதில் : 13.01.2025 க்குள் ஒரு நல்ல வேலை அமையும்.அரசு வேலை மிக கடின முயற்சிக்கு பின் தான் கிடைக்கும்.தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புடன் கூடிய வேலை கிடைக்கும்.

கேள்வி : நல்லா வேலை எப்போ கிடைக்கும்? அரசு வேலை வாய்ப்பு உள்ளதா?,செல்லபாண்டியன்,விருதுநகர்.