வாசகர்கள் ஜாதக சம்மந்தமான கேள்விகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
கேள்விக்கான காணிக்கை தொகை ரூ.51/- ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அல்லது GPAY-PHONEPE மூலமாக செலுத்தலாம்.
கேள்விக்கான பதில்கள் உங்கள் வாட்ஸ் அப் எண் அல்லது ஈமெயில் மூலம் கிடைக்கும்.
தொகையை செலுத்திய அன்பர்கள் அதற்கான ஆவணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிய படுத்தவும்
வாட்ஸ்ஆப் எண் /Whatsapp Number : 09362555266
பணம் செலுத்தும் விவரம்
Google Pay -9789364952
Phone Pe -9789364952
UPI ID : singurajasiva@oksbi
வங்கி கணக்கு விவரம்
Account Number: 31592965214
Name : S.SIVA
BANK:STATE BANK OF INDIA
IFSC CODE : SBIN0007583
கேள்வி : விவாகரத்து கிடைக்குமா? மறுமணம் எப்போது நடக்கும்? ,Ramanathan,Tirunelveli
பதில் : மகர லக்கினம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 31.08.2023 வரை சனி தசை உள்ளது,தற்போது சனி தசையில் குரு புத்தி நடந்து வ்ருகிறது 7ம் அதிபதி சந்திரன் உடன் சூரியன் கேது சம்மந்த பட்டு இருப்பதுடன் ,8ல் சுக்ரன் செவ்வாய் இருப்பதும் ஒரு மோசமான கிரக அமைப்பு ,31.08.2023 க்கு பிறகு ஒரு நல்ல வழி பிறக்கும்,ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதன் கிழமையில் புதன் ஓரையில் சென்று வாருங்கள். மாற்றம் நிகழும்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும்..திருமணம் பின் வாழ்க்கை எப்படி இருக்கும்.கடக லக்னம்… 6ல் சந்திரன் செவ்வாய் கேது சேர்க்கை….ராகு 12ல் …..now ராகு திசை நடக்குது.விஜி ,பட்டுக்கோட்டை
பதில் : கடக லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு தசா ராகு புத்தி நடந்து வருகிறது. லக்கினாதிபதி சந்திரனுடன் செவ்வாய் கேது சம்மந்தபட்டு 6இல் இருப்பது ஒரு மோசமான அமைப்பு. தசாநாதன் 12-ல் வலுவாக இருப்பதால் 18.09.2025 க்குள் திருமணம் நிகழும்.வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிளை வ்ருவதற்கு வாய்ப்பு உண்டு அல்லது திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லலாம்.பொதுவாக கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை மிக யோக பலன்களையே வழங்கும்.ஒருமுறை ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.
கேள்வி : எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லலாம்?,மோகன் ராஜ் ,தூத்துக்குடி
பதில் : 28.01.2024 க்கு பிறகு சொந்த நாட்டுக்கு விடுப்பில் சென்று வரலாம்.
கேள்வி : வெளிநாடு வந்து விட்டேன் 5 மாதமாக வேலை இல்லை குடும்பமும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர் இந்த நிலை எப்போது மாறும்,விஜயகுமார்,கோயம்புத்தூர்
பதில் : கன்னி லக்னம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது கோச்சார கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்,12 ராகு சனி இருப்பது வெளிநாட்டு வேலையில் ஒரு தொல்லை தரும் அமைப்பு.மேலும் உங்களுக்கு நடப்பு தசா கேது தசாவாக இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. வாழ்க்கையில் வெறுமை, சோகம், கவலை, ஏமாற்றம் இது போன்று பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிந்த வரையில் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுங்கள். சங்கடகர சதுர்த்தி தோறும் விநாயகரை வழிபட்டு வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்.
கேள்வி : கடந்த மூன்று மாத காலமாக காவல்துறையில் பணியிடை நீக்கத்தில் உள்ளேன் தற்பொழுது உள்ள இந்த பிரச்சனை எப்பொழுது எனக்கு முடிவுக்கு வரும்அவ்வாறு முடிவுக்கு வந்த பின்பு எத்திசையில் பணியிட மாற்றம் நிகழும்.Shanmugavel.r,Anuppapatty
பதில் : விருச்சிக லக்கனம் துலாம் ராசியில் பிறந்துள்ள நீங்கள் பிறக்கும் பொழுதே உங்கள் லக்னம் புதாத்திய யோகத்தில் அமைந்துள்ளது. மேலும் உங்கள் லக்னத்திற்கு 2-ல் சனிபகவானும் சுக்கிரனும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். தற்போது நடப்பு தசாவான புதன் தசா உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தராது. ஏனென்றால் புதன் விருச்சிக லக்னத்திற்கு பாபர் என்ற முறையில் சில தொல்லைகளை தருவார். மேலும் இந்த காலகட்டத்தில் அளவுக்கதிகமான கோபங்கள் தலை தூக்கும். முடிந்த அளவு கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் பொறுமையுடன் செயல்பட்டால் உங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தற்போது நடைபெற்று இருக்கின்ற குரு பெயர்ச்சியும், வருகின்ற ராகு கேது பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்கும். உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கும், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் நெய் விளக்கு வைத்து வர சகல துறைகளிலும் தடைகள் விலகி மேலும் நன்மை நடக்கும்.
கேள்வி : திருமணம் எப்போது கை கூடும். மணிகண்டன் ,பெரம்பலூர்
பதில் : 03.11.2023 க்கு பிறகு திருமண முயற்சிகள் கைகொடுக்கும்.கடினமான தேடலுக்கு பின் தான் மண வாழ்க்கை அமையும்.மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
கேள்வி : 1தொழில் தொடங்கலாமா 2.வயது ஆகிவிட்டது திருமணம் எப்போது 3.பணம் பிரச்சனை இருக்கின்றது எப்போது சரி ஆகும்.4.நல்ல காலம் வருமா,கணேசன் ,புதுக்கோட்டை
பதில் :விருச்சிக லக்னம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மாரகாதிபதியான சுக்கிரனின் திசை முடிந்து தற்போது சூரிய திசை ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் அதிகப்படியான மன உளைச்சல், வேதனை, ஏன் வாழ்கிறோம் என்கின்ற குழப்பம் என அதிகப்படியான இன்னல்களை சந்தித்து வந்திருப்பீர்கள். தற்போது கூட அந்த இன்னல்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது நடைபெறும் சூரிய தசா ராகு புத்தி 29.07.2023 வரை உள்ளது. நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவது இப்போது வேண்டாம். மேலும் உங்களது கோச்சார கிரக நிலைகளும் சரி இல்லாமல் இருப்பதால் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. 29. 7. 2023 க்கு பிறகு திருமணம் முயற்சிகள் கைகூடிவரும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருப்பதாலும் கேதுவின் சாரம் பெற்று சூரியன் தசையை நடத்துவதாலும் திருமண முயற்சிகள் சற்று தடைக்குப் பின் தான் நடைபெறும். ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வேளையில் கும்பகோணம் அருகில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று நவகிரகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் மாற்றம் கிட்டும்
கேள்வி : அரசு வேலை எப்போது கிடைக்கும் ,சிவநந்தினி ,கடலூர்
பதில் : மேஷ லக்னம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது மாரகாதிபதியான சுக்கிரனின் தசை நடைபெற்ற வருகிறது. சுக்கிரன் 12ல் உச்சம் பெற்ற தசையை நடத்துவதால் உங்களுக்கு பாதிப்புகள் சற்று குறைவாக தான் இருக்கும். ஏனென்றால் உங்கள் ஜாதகத்துக்கு சுக்கிரன் மறைவது நல்லது. மேலும் 26.5.2023 வரை சுக்கிர திசை இருப்பில் உள்ளது. அதுவரை மிக கவனமுடன் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு வருகின்ற சூரிய தசையில் அரசு சார்ந்த முயற்சிகள் கைகொடுக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயம் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கேள்வி : என் ஜாதகம் இந்த பையன் ஜாதகம் பொருத்தம் இருக்கா வீட்டில் ஜாதகம் பார்த்து எங்களை சேர்க்க வாய்ப்பு உண்டா…..நாங்க திருமணம் பன்னலாமா….சேர்ந்தால் after mrg பிரிவினை வருமா
பதில் : உங்கள் இருவர் ஜாதகதத்திலும் நட்சத்திர பொருத்தம் நன்றாக உள்ளது.திருமணம் செய்யலாம்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? திருமண தடை பரிகாரம் ,ஜெயலட்சுமி,விருதுநகர்.
பதில் : மேஷ லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 28.02.2024க்கு பிறகு திருமண வாய்ப்புகள் கூடிவரும்.செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் மலைமேல் இருக்கும் முருகனை வழிபட்டுவாருங்கள்.நல்லது நடக்கும்.
கேள்வி : நல்லா வேலை எப்போ கிடைக்கும்? அரசு வேலை வாய்ப்புஉள்ளதா?,செல்லபாண்டியன்,விருதுநகர்.
பதில் : 13.01.2025 க்குள் ஒரு நல்ல வேலை அமையும்.அரசு வேலை மிக கடின முயற்சிக்கு பின் தான் கிடைக்கும்.தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புடன் கூடிய வேலை கிடைக்கும்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? தர்மலிங்கம் ,திருப்பூர்
பதில் : கடக லக்கினம் ,மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசாவில் குரு புத்தி நடைபெற்று வருகிறது.29.09.2023 க்குள் ஒரு நல்ல வரன் வருவதற்காண வாய்ப்புகள் அதிகம்.மேலும் 7ம் அதிபதி சனி பகவான் அவரின் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால்.29.09.2023 க்கு பிறகு வரும் சனி புத்தியில் நிச்சயம் திருமணம் நடைபெறும்.ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.நல்ல வரன் நீங்கள் நினைத்தபடி அமையும்.மேலும் நவாம்ச லக்கினத்தில் ராகு இருப்பதால் நிச்சயம் திருநாகேஸ்வரம் சென்று வரவேண்டும்.மிக பெரிய வாய்ப்பு வரும் காலகட்டம் பயன் படுத்தி கொள்ளவும்.
கேள்வி : காதல் திருமணம் அமையுமா? கலப்பு திருமணமா?,குருமூர்த்தி ,திருப்பூர்
பதில் : மேஷ லக்கினம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சூரிய தசாவில் செவ்வாய் புத்தி நடைபெற்று வருகிறது.லக்கினாதிபதி செவ்வாய் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமர்ந்து புத்தியை நடத்துகிறார்.31.08.2024 க்கு பிறகு காதல் திருமணம் அமைய வாய்ப்புகள் அதிகம்.திருமணத்தை செயல் படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை.மிக அற்புதமான ஜாதக அமைப்பு உங்களுக்கு..தவறான செயல்பாடுகள் மூலமாக உங்கள் வாழக்கையை கெடுத்து கொள்ள வேண்டாம்.சிந்தித்து செயல்படுங்கள்.
கேள்வி : நான் ஒருவரை விரும்புகின்றேன் திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன். திருமணம் செய்து கொள்ள ஏதாச்சும் வழி உள்ளதா ? அதற்க்கு பரிகாரம் எதாவது இருந்தால் சொல்லுங்கள்
பதில் : துலாம் லக்கினம் மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபரை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.அதற்க்கு ஜாதக ரீதியாக எவ்வித தடையும் கிடையாது.ஆனால் உங்கள் ஜாதகத்தில் 4ல் இருக்கும் சந்திரன் கேது இணைவு/7இல் இருக்கும் செவ்வாய் குரு சனி இணைவு காதலுக்கு இடையூறாக இருக்கலாம்.மனக்குழப்பம் ,சந்தேகம்,பயம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து தொல்லை தரும்.காதல் விஷயத்தில் மிக கவனமுடன் செயல் பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்து.இதற்க்கு எவ்வித பரிகாரமும் இல்லை.
கேள்வி : நான் விவாகரத்து பெற்றவள். எனக்கு இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா, அந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
பதில் : கடவுளே துணை ! மகர லக்கினம் சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் கேது புத்தி நடைபெற்று வருகிறது.உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு நன்மை செய்யும் அத்துணை கிரகங்களும் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது.நீங்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் அனைத்து நவக்கிர தலங்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வரவும்.பின்பு அந்த இறைவன் உங்களுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தி தருவார்.
கேள்வி : வேலை எப்படி இருக்கும் ? நாகர்ஜுன் ,பரமகுடி
பதில் : கும்ப லக்கினம் விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசா குரு புத்தி நடை பெற்று வருகிறது (31.10.2025) வரை.உங்களுக்கு இந்த சுக்கிர தசா ராஜ யோக பலன்களை அளிக்கும் .அரசு வேலை தவிர்த்து,தனியார் துறை ,வெளிநாடு வேலை போன்றவைகளுக்கு முயற்சி செய்யுங்கள் 30.12.2032 வரை மிக யோக மான காலக்கட்டம் .இந்த நேரத்தை பயன்படுத்தி வாழக்கையில் முன்னேறிவிடுங்கள்.ஒரு முறை திருக்கஞ்சனூர் சென்று அங்குள்ள சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வரவும் .பிறகு என்ன யோகம்தான்.பரிகாரத்தை தவறாமல் செய்யவும்.வாழ்க வளமுடன் !
கேள்வி : எனக்கு கணவர் எப்படிப்பட்டவராக அமைவார் .திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,பெயர் வெளியிட விரும்பாத வாசகி ,மதுரை
பதில் : விருச்சிக லக்கினம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசாவில் புதன் புத்தி(25.05.2025)வரை நடைபெற்று வருகிறது.இந்த புதன் புத்தி முடிவதற்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நன்று.மேலும் உங்கள் ஜாதகத்தில் 2ம் பாவத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருப்பதாலும் 7ம் இடத்தில் சூரியன் ,சனி ,குரு ,புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதாலும் உங்கள் வருங்கால கணவரின் ஜாதகத்தை ஆராய்ந்து அதன் பின்னரே முடிவு எடுக்க வேண்டும்.25.07.2026 வரை சற்று கடினமான காலகட்டம்.எடுக்கும் முடிவுகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை.சற்று சறுக்கினாலும் பாதாளம்தான் …மிக கவனம்.வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை வழிபாட்டு வாருங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்.
பதில் : கும்ப லக்கினம் ,மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசா வில் ராகு புத்தி நடைபெற்று வ்ருகிறது.இந்த காலகட்டத்தில் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம்.மேலும் கோச்சார ரீதியில் உங்களுக்கு 71/2 சனி தொடங்கி உள்ளதால் அதுவும் விரய சனி என்பதால் அதிக பணம் செலுத்தி வெளி நாடு செல்ல வேண்டாம்.மேலும் ஆடம்பர தேவைக்கு பணம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.மேலும் வரும் ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் ராசியிலேயே ராகு பகவான் ஜென்ம ராகுவாக சஞ்சரிக்க இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செயல் படுவது நல்லது.தற்போது கடன் தொல்லைகள் குறையாது.சிந்தித்து செயல்படுங்கள்.
கேள்வி : வருங்கால மனைவி பற்றி ?
பதில் :
வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்.சுறுசுறுப்பானவர்,சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்.சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்.உஷ்ண தேகம் உடையவளாகவும் இருப்பாள் மனைவி பிறந்த ஊர் நீங்கள் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர். தன் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார்.மனைவி ஒருபோதும் உங்களை விட்டு பிரிய மாட்டாள். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.
கேள்வி : நான் 12 படிப்பு முடித்துள்ளேன் எனக்கு படிப்பை தொடர வாய்ப்பு உள்ளதா இந்த வருடம் . அப்படி படித்தால் நான் என்ன படிக்கலாம் எனக்கு வருங்காலத்தில் பிசினஸா இல்லை வேலையா?V. Arunjunai,மதுரை
பதில்: கும்ப லக்கினம் தனுசு ராசியில் பிறந்துள்ளீர்கள்.மறைந்த புதன் நிறைந்த கல்வியை தரும் என்பது ஜோதிட விதி.மேலும் லக்கினாதிபதியுடன் சேர்ந்து மறைத்திருப்பதுதான் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.சூரியன் மற்றும் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் அரசு வலு சேர்க்கும் கல்வியை பயிலலாம்.காவல் துறை ,பாதுகாப்பு துறை,அஞ்சல் துறை,மேலும் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வர்கோத்தமம் அடைந்துள்ளதால் நிச்சயம் அரசு உயர் பதவி கிடைக்கும்.கடின முயற்சி தேவை .சொந்த தொழில் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
திருமாலுக்கு குறும்பு செய்வது என்றால் படு ஆனந்தம். சிறு வயதில் கண்ணனாக தவழ்ந்த காலத்தில் ஏகப்பட்ட குறும்புகள் செய்து எல்லோரையும் கிறங்க அடித்திருக்கிறான். பின்னரும் கூட இந்த குறும்புத்தனம் நிற்கவே இல்லை. இப்படிப்பட்ட குறும்புத்தனமான ஒரு விளையாட்டை காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கள்வனூர் ஸ்தலத்தில் செய்து பார்வதி தேவி மூலம் ‘கள்வன்’ பட்டத்தையும் பெற்றிருக்கிறார் என்றால் திருமாலின் விளையாட்டை நாம் என்னவென்று சொல்வது?
இந்த வரலாறு திருக்கார்வன வரலாறு தான் ஆனால் வித்தியாசம் நிறைய உண்டு.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்குள் கருவறையின் வலது பக்கத்தில் பெருமாள் சன்னதி ஒன்று உண்டு. மூலவரின் திருப்பெயர்
ஆதிவாராகப்பெருமாள் நின்ற திருக்கோலம்.
விமானம் வாமன விமானம்
தாயார் அஞ்சலை நாச்சியார்
தீர்த்தம் நித்திய புஷ்கரணி
அச்வத்த நாராயணன் என்பவருக்கு திருமால் தரிசனம் கொடுத்த ஸ்தலம். ஒரு சமயம் பார்வதி தேவியும் லட்சுமியும் தனியே அமர்ந்து காஞ்சிபுரம் ஸ்ரீமன் நாராயணன் காமகோஷ்டத்தில் உள்ள பஞ்ச தீர்த்தக் கரையில் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். திருமகளைக் காணாமல் அவளை தேடி வந்தான் நாராயணன். அவர்கள் இருவரும் (லட்சுமி பார்வதியும்) பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று ஒட்டு கேட்டார். ஆனால் இதை பார்வதி தேவி கண்டுபிடித்து ‘கள்வன்’ என்று பட்டம் கொடுத்துவிட்டாள். அன்றிலிருந்து இந்த ஸ்தலம் திருக்கள்வனூர் என்று வழங்கலாயிற்று.
இன்னொரு தகவலும் உண்டு
முன்னொரு சமயம் சிவபெருமானுக்கு பார்வதிக்கும் வாக்குவாதம் ஏற்பட சிவபெருமான் கோவம் அடைந்து பார்வதிக்கு சாபம் கொடுத்தான். உடனே பார்வதி சிவனடி பணிந்து இதற்கு பிராயச்சித்தம் கேட்டாள் இந்த காஞ்சிபுரத்திற்கு வந்து ஒற்றை காலால் நின்று வாமனரை நோக்கி தவம் செய்தால் தான் கொடுத்த சாபம் நீங்கும் என்றார் சிவபெருமான். அப்படியே காமாட்சி இங்கு வந்து வாமனரை நோக்கி தவம் செய்து ‘காமாட்சி’ என்று பெயர் பெற்றுசிவபெருமானுடன் இணைந்ததாக சொல்லப்படுகிறது.
பரிகாரம்
தாம்பத்திய பிரச்சனையால் பிரிவு ஏற்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு மீண்டும் தம்பதிகளாக இணையவும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் நல்லபடியாக விரைவில் நடக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்பட்டால் அதை சீர் செய்து நல்லபடியாக கொண்டு வரவும், மற்றவர்கள் அந்தரங்க விஷயத்தில் தலையிட்டு கெட்ட பெயர் வாங்கிய மன உளைச்சல் அடைந்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நல்ல பெயர் எடுக்கவும், முன்னோர்கள் தோஷம், ராகு கேது தோஷம்விலக்கவும் திருக்கள்வனூர் ஸ்தலத்திற்கு வந்து மனதார பிரார்த்தனை செய்து பெருமாளை வழிபட்டு சென்றால் கெடுதல் அத்தனையும் விலகும். மனதிற்கு சாந்தியும், நிம்மதியும் கிடைக்கும் அப்படிப்பட்ட புண்ணிய ஸ்தலம் இது..
இவர்களுக்கு சஷ்டி திதி அனுகூலம் தரும். இவர்கள் அமாவாசை மற்றும் பிரதமை திதிகளை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே இந்த இரண்டு திதிகளையும் எவரும் சுப காரியங்களுக்கு பயன்படுத்துவது இல்லை.
ரிஷபம்
வளர்பிறை சதுர்த்தசி அதிர்ஷ்டம் தரும். இந்த திதியில் இவர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தசமி திதியை தவிர்க்கலாம்.
மிதுனம்
பஞ்சமியும் சப்தமியும் அனுகூலம் செய்யும். தொழில் தொடங்குவது, புது சொத்துக்கள் வாங்குவது, சுபகாரியங்களுக்கு ஆரம்பப் பணிகளை செய்வது என இந்த நாளில் செயல்பட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அஷ்டமி ,நவமியை தவிர்க்கலாம்.
கடகம்
முன்னேற்றத்திற்கு அச்சாரமான முயற்சிகளை கடக ராசியினர் சதுர்த்தி திதிநாளில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். இவர்கள் துவாதசி திதியை தவிர்க்கலாம்.
சிம்மம்
ராஜா ஆளுமை மிக்க இந்த ராசியினர் குடும்பம், தொழில், உத்தியோகம் சார்ந்து எவ்வித புது முயற்சிகளாக இருந்தாலும் சப்தமி திதி நாளில் தொடங்கினால் பன்மடங்காக பலன் கிடைக்கும். இவர்கள் திரியோதசி, சதுர்த்தசி திதி நாட்களை தவிர்க்கலாம்.
கன்னி
இவர்களுக்கு திருதியை அனுகூல பலன்களையும், அதிர்ஷ்ட யோகங்களையும் தரும். சஷ்டி மற்றும் சதுர்த்தசி திதி நாட்களில் புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
துலாம்
பயணம் முதல் பிசினஸ் வரையிலும் இவர்கள் பஞ்சமியை தேர்ந்தெடுத்து காரியம் ஆற்றினால் நன்மைகள் வந்து சேரும். அஷ்டமி, நவமியை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
தசமியும் , ஏகாதசியும் அதிர்ஷ்டம் தரும். செய்தொழிலில் புதிய நடவடிக்கைகள், குடும்ப காரியங்கள் முதலானவற்றுக்கு இந்த இரண்டு திதிகளும் சிறப்பு சேர்க்கும். சதுர்த்தி, சஷ்டியை இவர்கள் தவிர்ப்பது நலம்.
தனுசு
இவர்களுக்கு அனுகூலமான திதிகள் திருதியை மற்றும் சதுர்த்தி. துவாதசி மற்றும் திரயோதசி திதி நாள்களை தவிர்க்கவும்.
மகரம்
இந்த ராசிக்காரர்களுக்கு சப்தமியும், பஞ்சமியும் நன்மை அளிக்கும். இந்த நாட்களில் சுபகாரியங்களுக்கு அச்சாரம் இடலாம். நவமி மற்றும் தசமியை தவிர்க்கலாம்.
கும்பம்
திருதியையும், சதுர்த்தியும் சிறப்பான பலன்களை தரும். அஷ்டமி நவமியை வழக்கம் போன்று தவிர்த்து விடலாம்.
மீனம்
இந்த ராசி அன்பர்கள் பஞ்சமி மற்றும் சஷ்டி திதி நாட்களில் தொடங்கும் காரியங்கள் அனுகூல பலன்களை அள்ளி வழங்கும். பிரதமை மற்றும் ஏகாதசி திதி நாட்களை இவர்கள் தவிர்த்து விடலாம்.
எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல் கொண்ட மீன ராசி நேயர்களே, குருவின் ராசியில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கும், 10க்கும் அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். நீங்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். பண வரவுகள் சாதகமாக இருக்காது என்பதால் எந்த ஒரு காரியத்திலும் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால் ஏழரைச்சனியில் விரையச்சனி நடப்பதாலும் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்க வேண்டும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதற்கான ஆதாயங்களை அடைய இடையூறுகள் ஏற்படும்.
குரு பகவான் 3ல் சஞ்சரிப்பது மூலம் தனது சிறப்பு பார்வையாக 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூட கூடிய அமைப்புகள், உடன் இருப்பவர்கள் ஆதரவு சற்று சாதகமாக இருக்கக்கூடிய நிலை உண்டாகும்.
தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது மிக மிக உத்தமம். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது வேலையாட்கள் மூலமாக வீண் இழப்புகளை எதிர்கொள்வீர்கள் சந்தை சூழ்நிலை சாதகமற்று இருப்பதால் உங்கள் பொருட்களுக்கான விலை கிடைப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் ஒரு சிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு இருப்பது, உங்களுடைய பணியில் மட்டும் சற்று எச்சரிக்கையோடு இருப்பது மிகவும் நல்லது அதிகாரியிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் முடிந்தவரை வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது உத்தமம்.
தற்போதைக்கு இருப்பதை காப்பாற்றிக் கொள்வது மிகவும் நல்லது. ஒருசிலர் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை தவற விட்டு விட வேண்டாம் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவதும் மிகவும் நல்லது. குறிப்பாக எதிர்பாராத வகையில் வீண் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம் என்பதால் நீங்கள் மருத்துவ காப்பீட்டுகள் எடுத்துக்கொள்வது கூட வரும் நாட்களில் வீண் செலவுகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள்வழியில் மனக்கவலை, உறவினர்கள்மூலமாக நிம்மதி குறைவுகள் ஏற்படலாம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு பக்குவத்தோடு நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்று நேரம் என்பதால் விட்டுகொடுத்து செல்வது நல்லது.
உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம் அசையும்- அசையா சொத்துகளால் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும் திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 7ம் இடம் (களத்திரம்),9ம் இடம் (வெளிநாடு ,தந்தை) ,11ம் இடம் (லாபம்)
பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்லது நடக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்ற லைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும் உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டி வரும்.
பரிகாரம்
மீலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3-ல் குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது கொண்டை கடலை மாலை சாற்றுவது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது, மஞ்சள் நிற பூக்களை சூடி கொள்வது ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்குவது நல்லது. ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது. செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது. சதுர்த்தி விரதங்கள் இருப்பது, முடிந்த உதவிகளை ஏழை எளியவர்களுக்கு செய்வது நல்லது.
உங்களுக்கு சனி 12-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது. கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள். குடை அடுப்பு போன்றவற்றை வானமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு தன லாப ஸ்தானாதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இருந்து வந்த பொருளாதாரரீதியான நெருக்கடிகள் இனி படிப்படியாக குறையும்.
பணவரவுகள் சற்று சாதகமாக இருந்து உங்களின் அன்றாடத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்யமுடியும். கடந்தகால நெருக்கடிகள் சற்றுக் குறைய கூடிய நிலையானது வரும் நாட்களில் உண்டு. ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
ராசியாதிபதி சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச் சனியில் ஜென்மச் சனி நடக்கிறது. சர்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 2-லும், கேது 8-லும் சஞ்சாரம் செய்வதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எந்த ஒரு செயலில் ஈடுபடுகின்ற பொழுதும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் உத்தமம்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டால் தான் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அதிக முதலீடுகள் கொண்ட செயல்களை தற்காலிகமாக தவிர்ப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது
தொழில், வியாபாரத்தில் கடந்த ஆண்டு ஒப்பிடுகின்றபொழுது வரும் நாட்களில் படிப்படியான முன்னேற்றங்கள் இருக்கும் என்றாலும் வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் ஒரு சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் சில முக்கிய செயல்களை குறித்த நேரத்தில் செய்துமுடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் தவறவிடாமல் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
தொழில் ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த சட்ட தொடர்பான பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் சற்று குறைந்து மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தில் அசையும் அசையா சொத்து வகையில் சுபச் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வண்டி வாகனங்கள் மூலமாக தேவையில்லாத விரயங்கள் உண்டாகும். ஒரு சிலர் வீடுகளை பழுது பார்ப்பதற்காக செலவு செய்ய நேரிடும்.
உத்தியோக ரீதியாக உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து தற்போது மன நிம்மதியுடன் பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான சன்மானம் கிடைக்கவில்லையே என்று ஏங்காமல் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதும், மற்றவரிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பதும் நல்லது குறிப்பாக வயது மூத்தவர்களிடம் அதிலும் குறிப்பாக அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டு உங்களுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்துவது மிக மிக நல்லது. ஒரு சிலருக்கு பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும்.
குரு பகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களைச் சிறப்புடன் செய்து முடிக்கமுடியும் கணவன்- மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது பணவரவுகள் சுமாராக இருக்கும். கடன்கள் படிப்படியாகக்குறையும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு திருப்தியளிக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 12ம் இடம் (விரயம்),10ம் இடம் (தொழில்) ,8ம் இடம் (ஆயுள்)
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெற்றாலும் வேலையாட்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும் கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. எதிர்நீச்சல் போட்டாவது இலக்கினை அடைந்துவிடமுடியும் உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் பணியில் திருப்தியான நிலையினை அடைய முடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வேலை வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது பொதுவாக பேச்சுகளில் சற்று நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம் மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.
பரிகாரம்
கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் விரதமிருந்து நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது எழை எளிய மாணவர்களுக்கு ஆடைகள் புத்தகங்கள் போன்றவற்றை தாளம் செய்வது உத்தமம் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது நல்லது.
ஜென்ம ராசியில் சனி சஞ்சரித்து ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து சனிபகவானின் ஆலயத்திற்கு சென்று சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி சங்கு மலர்களால் அர்ச்சனை செய்துவழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வதும் நல்லது.
நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, சனியின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் இது நாள் வரை உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் விலகி சகல சௌபாக்கியங்களையும் வரும் நாட்களில் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு.
5-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் ஜென்ம ராசி 9, 11 ஆகிய ஸ்தானங்களை தனது சிறப்பு பார்வையாக பார்வை செய்ய இருப்பதால் கடந்தகால சோதனைகள் விலகுவது மட்டுமில்லாமல் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் பெறுவீர்கள். நீண்டநாட்களாக தடைபட்டு வந்த மங்களகரமான சுப காரியங்கள் வருகின்ற நாட்களில் ஒன்றொன்றாக கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும்.
திருமணமான புதுமண தம்பதிகளுக்கு அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒருநல்ல தீர்வு கிடைக்கும். ஒருசிலர் நீண்ட நாட்களாக சொத்து வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்திருப்பார்கள், தற்போது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் அதில் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும் உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும் சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம்கூட குறைந்து நல்ல முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. நீங்கள் வாங்கிய கடன்களை வரும் நாட்களில் குறைத்துக் கொள்ள முடியும்.
உத்தியோகரீதியாக பதவி உயர்வுகளை அடையக்கூடிய அதிர்ஷ்டங்களும் உங்கள் உழைப்புக்கான கான ஊதியத்தை அடையக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. சகஊழியருடைய ஒத்துழைப்பு மிகவும் சிறப்பாக இருப்பதால் மனநிம்மதியுடன் பணியில் செயல்பட முடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள்.
நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய ராகு உங்கள் ராசிக்கு 3-லும். கேது 9-லும் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு, பிறந்த ஊரைவிட வெளியூர் மூலமாக அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு கடல் கடந்து அந்நிய நாடு சென்று பணிபுரியக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 1ம் இடம் (ஜென்மம்),11ம் இடம் (லாபம்) ,9ம் இடம் (வெளிநாடு ,தந்தை)
ராசியாதிபதி சனிபகவாள் ஜென்ம ராசிக்கு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதச்சனி நடைபெற்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்ற காரணத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால் மற்றவரிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. சனி 2-ல் இருப்பதால் கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வதும் உங்களது ஆரோக்கியத்திற்கும் குடும்பத்தில் இருக்கக்கூடிய வயது மூத்தவர்களுடைய ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது சாலச் சிறந்தது.
குரு பகவான் வக்ர கதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி 2-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது உத்தமம் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும் ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகுந்த பலனைப் பெறுவீர்கள் குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.
நெருங்கியவர்களைச் சற்று அனுசரித்துச் சென்றால் அனுகூலமான பலனை அடைவீர்கள் கொடுக்கல்- வாங்கலில் மட்டும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைச் சிறிது காலத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.
உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வுகள் கிடைத்தாலும் பொறுப்புகளும் சற்று அதிகரிக்க செய்யும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும் சுபகாரிய முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சாதகமான நற்பலனைப் பெறுவார்கள் எதிர்பார்க்கும் கடனுதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும் புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பணவரவில் சில தடைகளும் நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும்.
பரிகாரம்
மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு கருப்புநிற வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மிகவும் நல்லது சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் வானமுற்ற எழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்
சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே, குருவின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ராசி அதிபதி குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-S-2025 வரை) முதல் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் ஒரு ஏற்ற – இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.
குரு 6-ல் மறைந்தாலும் ராசியாதிபதி என்ற காரணத்தால் அனுகூலமான பலன்களே உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சனி ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுக்கல்& வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் அடைய வேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும் என்பதால் எதிலும் சுறுசுறுப்போடும், தெம்போடும் செயல்படுவீர்கள்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
6-ல் சஞ்சரிக்க கூடிய குரு பகவான் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பார் என்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, நெருங்கியவரின் ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்புகள், நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய யோகம் அசையும் அசையா சொத்து வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நிலை உண்டாகும். பூர்வீக சொத்து வகையில் நீண்ட நாட்களாக தீர்க்க முடியாமல் இருந்து வந்த பிரச்சினைக் கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் நல்ல லாபத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு சில இடையூறுகள் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு, ஒருசில நேரங்களில் நீங்களே நேரடியாக சில வேலைகளை செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருந்தாலும் உழைப்புக்கான பலனை கண்டிப்பாக அடைவீர்கள். கூட்டாளிகளை நம்பாமல் எதிலும் நிதானத் தோடு செயல்பட்டால் அடைய வேண்டிய அனுகூலங்களை அடையமுடியும்.அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க சில இடையூறுகள் இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 3-ல் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்கள் குறிக்கோளை எட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபளிக்க இடையூறுகள், தாய்வழி உறவினர்கள் மூலமாக தேவையில்லாத மனக்கவலைகள், அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் நெருங்கியவர்களே தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள்.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குரு பகவான் 6-ல் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஓரளவிற்கு முன்னேற்றத்தை அடைவீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே அனுசரித்து செல்வது உத்தமம்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 2ம் இடம் (குடும்பம் ,வாக்கு),10ம் இடம் (தொழில்) ,12ம் இடம் (விரயம் )
சனி 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சற்று சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள். சிலருக்கு அசையாச் சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் அனுகூலங்கள் ஏற்படும் கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளநிலையில் நடைபெறும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாடம் அடைவீர்கள்.
தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்று சிறப்பான லாபத்தைப்பெற இயலும் என்றாலும் போட்டி பொறாமைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகளிடம் சற்று அனுசரித்து சென்றால் தொழில் சிறப்பாக இருக்கும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்பட்டு கௌரவமான பதவிகளை அடையமுடியும் மாணவர்களின் கல்வித்திறன் ஓரளவுக்கு உயரும் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் இக்காலத்தில் உயர்வுகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்
தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குருபகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது, வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது உத்தமம் மஞ்சள்நிற ஆடைகள் அணிவது. கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.
உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும் பைரவரையும் வணங்கவும். கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவதும் நல்லது.
அதிக புத்திக்கூர்மையும், சமூகப்பற்றும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2, 5 அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய ஒரு முன்னேற்றம் ஏற்படும்.
கடந்த காலங்களில் இருந்த பொருளாதார நெருக்கடிகள், மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.
7-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 11 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்படக்கூடிய பலம், உங்களுடைய அனைத்து முயற்சிகளும் பரிபூரண வெற்றியை தரக்கூடிய அனுகூலமான நிலை, எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உங்களது உடல் ஆரோக்கியமானது மிகச்சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையற்ற வீண்செலவுகள் குறைந்து சேமிக்க கூடிய அளவிற்கு ஒரு அனுகூலமான நிலை உண்டாகும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகி தற்போது ஒரு நல்ல மாற்றம் ஏற்பட்டு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. போட்ட முதலீடுகளை சுலபமாக எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்கள்மீது இருந்த வீண் அவப்பெயர்கள் எல்லாம் தற்போது விலகுவதால் இருக்கக்கூடிய இடத்தில் நல்ல பெயர் எடுத்து ஒரு கௌரவ நிலையினை அடைய முடியும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் முழு ஈடுபாடுடன் செயல்படமுடியும். நீண்டநாட்களாக புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தற்போது ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களால் முடிக்க முடியாத பணியை கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது.
இந்த தருணத்தில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் அமைய பெற்று ‘அர்த்தாஷ்டமச்சனி’ நடப்பதால் ஒரு சில அலைச்சல் இருந்தாலும் குருவின் சாதக சஞ்சாரத்தால் எதையும் சமாளித்து அடைய வேண்டிய அனுகூலத்தை அடைவீர்கள்.
உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 11-ல் கேது சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. குறிப்பாக ஒருசிலருக்கு பிள்ளைகள் வழியில் சின்ன சின்ன கவலைகள் ஏற்பட்டாலும் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்பட்டால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது.
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிலும் ஓரளவுக்கு நற்பலன்களை அடைவீர்கள் பண விஷயத்தில் மட்டும் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு முன்னேற்றமாக இருக்கும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 1ம் இடம் (ஜென்மம்),3ம் இடம் (தைரியம்) ,11ம் இடம் (லாபம்)
சனி 4-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகள் எல்லாவற்றிலும் வெற்றிகளைப் பெற முடியும் என்றாலும் சுப காரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகளையும் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் பெறமுடியும் எதிலும் நீங்கள் சற்றுமுனைப்புடன் செயல்பட்டால் பொருட் தேக்கங்கள் ஏற்படாமல் வளர்ச்சி அடைவதற்கான யோகம் உண்டு உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் எதையும் சமாளித்து நற்பெயர் எடுக்க முடியும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள்.
சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது, முடிந்தால் திருப்பதிசென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்வது நல்லது.
ராகு 5-ல் சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும் சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது. கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலாம் ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) அஷ்டம் ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.
உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் 8-ல் இருப்பது விபரீத ராஜ யோகம் என்ற காரணத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் ஒருசில அனுகூல பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் 2, 4, 12-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் இக்கட்டான நேரத்தில் நெருங்கியவர்களின் உதவியானது உங்களுக்கு கிடைக்கும் வீடுகளை புதுப்பிப்பதற்காக சுபச் செலவுகளை செய்வீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள்மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
இந்த தருணத்தில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் குறிப்பாக உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியும், யோககாரகனுமான சனிபகவான் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். அதுமட்டுமில்லாமல் சர்ப கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். அசையும்-அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகளும் அதற்காக கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும்.
பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் நெருங்கியவர்களாலேயே ஏற்படும் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுகின்ற பொழுது சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது. சில முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பதன் மூலம் அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். போட்டிகள் இருந்தாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்கும் பலம் உண்டாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு எந்திரங்கள் பழுதாவதால் வீண்செலவுகள் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படலாம். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உங்கள் பணியில் தற்போதைக்கு நீங்கள் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குறிப்பாக குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 2ம் இடம் (குடும்பம் ,வாக்கு),4ம் இடம் (தாய் ,வீடு,வாகனம்) ,12ம் இடம் (தூக்கம் ,விரயம்)
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். சனி பகவான் 5-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான நிலை உண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.
கணவன் – மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.
உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையமுடியும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும் செய்யும் தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை பெறமுடியும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளை அடையமுடியும்.
பரிகாரம்
துலாம் ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது நல்லது.
கேது 12-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது. சதூர்த்தி விரதங்கள் இருப்பது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
கூர்மையான அறிவும், எதையும் முன்கூட்டியே செய்யும் திறனும் கொண்ட கன்னி ராசி நேயர்களே, புதனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4, 7-க்கு அதிபதியான குருபகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) பாக்கிய ஸ்தனமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களை பெறுவீர்கள்.
குருபகவான் தனது சிறப்பு பார்வையாக ஜென்ம ராசி, 3, 5 ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் எல்லாம் குறையும்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனிபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எல்லா செயலிலும் முழுமையான வெற்றியினை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் மூலமாக சின்ன சின்ன பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அரசு வழியில் நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உத்தரவுகளை பெறமுடியும். தொழில் தொடர்பாக இருந்து வந்த வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது இருந்த இடம் தெரியாமல் மறையும்.
உத்தியோகத்தில்இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த வேலை பளு குறைந்து மன மகிழ்ச்சியுடன் பணிபுரிய முடியும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிக்க முடியும். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுடைய தனித்திறனை சிறப்பாக வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். ஒரு சிலருக்கு கௌரவ பதவிகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு.
வெளியூர், வெளிநாடு மூலமாக கூட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும் அசையும் அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. உங்களின் நீண்ட நாளைய கனவுகள் எல்லாம் கூட வரும் நாட்களில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துவகையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.
குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகள்வழியிலிருந்து வந்த மனக் கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து நிம்மதி ஏற்படும். இந்த நேரத்தில் சர்ப கிரகமான ராகு 7-லும், கேது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒருசில நேரங்களில் ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்த்துவிட்டு வளமான பலன்களை அடைய முடியும்.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 1ம் இடம் (ஜென்மம்),3ம் இடம் (தைரியம் ),5ம் இடம் (பூர்வ புண்ணியம் )
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் நன்மை, தீமை கலந்த பலன்களை அடைய முடியும் என்றாலும் சனி 6-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றிபெறுவீர்கள். ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது, கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.
பொருளாதாரநிலை சற்று சாதகமாக அமைவதால் எதிலும் முன்னேற்றமான நிலையினை அடைவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரியங்களுக்கான பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளலாம். புத்திரவழியில் இருந்த கவலைகள் மறையும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் பிரச்சினைகளின்றி வசூலாகும்.
‘தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டி பொறாமைகளின்றி செயல்படமுடியும். வேலையாட்களை சற்று கவனத்துடன் கையாண்டால் தொழிலில் முன்னேற்றமான பலனை அடைய முடியும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேச்சுக்களில் கவனமுடன் செயல் பட்டால் நற்பலனை அடையமுடியும். வெளியூர் பயணங்களால் பொருளாதாரரீதியாக வளர்ச்சி அடைவீர்கள்.
பரிகாரம்
கன்னி ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்யவும். சிவன் மற்றும் கண்டி என்னும் தேவியையும் பைரவரையும் வணங்கவும். மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, கண்ணில் மை வைப்பது, அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது நல்லது.
கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.
மனசாட்சிக்கு கட்டுப்பட்டவராகவும். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்டவராகவும் விளங்கும் சிம்ம ராசி நேயர்களே, சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 5. 8-க்கு அதிபதியான குருபகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் வரும் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) சஞ்சாரம் செய்ய உள்ளதால் எந்த ஒரு செயலிலும் நீங்கள் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைய எதிர்நீச்சல் போடவேண்டியது இருக்கும்.
10-ல் சஞ்சரிக்க கூடிய குருபகவான் தனது சிறப்பு பார்வையாக 2, 4, 6 ஆகிய ஸ்தானங்களை பார்க்க உள்ளார். அசையும் அசையா சொத்துவகையில் சுபச்செலவுகள் ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தால்தான் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும்.
குரு பெயர்ச்சி கிரக நிலைகள்
தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை ஆட்கள் சில நெருக்கடிகளை தருவார்கள் என்பதால் ஒருசில விஷயங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் நிலைமையை சமாளித்து வாடிக்கையாளர்களிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் கூட்டாளிகள் உங்களுக்கு தேவையற்ற இன்னல்களை ஏற்படுத்துவார்கள். ஒருசிலருக்கு கூட்டாளிகள் அவர்களுடைய பங்கை கேட்டு தொந்தரவு செய்வார்கள்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையக்கூடிய நிலை வரும் நாட்களில் ஏற்படலாம். மற்றவர்கள் கூறக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி நீங்கள் ஏமாறாமல் இருப்பது நல்லது. அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நேரம் என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பணி நிமித்தமான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும்.
ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், நிழல் கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய கேது உங்கள் ராசிக்கு 2-லும், ராகு 8-லும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து. செல்லவேண்டிய நேரமாகும்.
உற்றார்- உறவினர்களை முடிந்த வரை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் பேச்சை குறைத்துக் கொள்வது உத்தமம். ஒரு சிலருக்கு உண்ணும் உணவே உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடிய நேரம் என்பதால் குறிப்பாக அலர்ஜி தொடர்பான உடல் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களை தவிர்த்து விட்டு உங்களுடைய அன்றாட பணியில் கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.
குருபகவான் பார்வை
குரு பார்வை : 2ம் இடம் (குடும்பம்,வாக்கு ),4ம் இடம் (தாய் ,வீடு,வாகனம் ),6ம் இடம் (நோய் ,கடன்,வேலை )
குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை
குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் தராசுத் தட்டில் இட்ட எடை கல்லைப் போல ஏற்ற – இறக்கமான பலன்களை அடைவீர்கள். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் கடந்த கால கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பண விஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் சுபகாரிய முயற்சிகள் தற்போது கைகூடி மன மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் – உறவினர்கள் ஓரளவுக்கு ஒத்துழைப்பாக இருப்பாசிர்கள். செய்யும் தொழில், வியாபாரத்தில் அவ்வளவு சிறப்பான பலனை எதிர்பார்க்கமுடியாது என்றாலும் தேக்கநிலை அடையாமல் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் பணிச்சுமை அதிகரிக்கும். எதிலும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே நற்பலன்களைப் பெற முடியும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. உடனிருப்பவர்களிடம் பேச்சைக் குறைத்து கொள்வது உத்தமம். மாணவர்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறமுடியும்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு 10-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள்நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வது, மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது. புஷ்பராக கல் அணிவது நல்லது.
உங்களுக்கு சனி 7-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை அணிதல், கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது. எள், கடுகு, தோல் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்,
குடை, அடுப்பு போன்றவற்றை ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
உங்கள் ராசிக்கு 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம். ராகுவுக்கு பரிகாரமாக ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.