வாசகர்கள் ஜாதக சம்மந்தமான கேள்விகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
கேள்விக்கான காணிக்கை தொகை ரூ.51/- ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு அல்லது GPAY-PHONEPE மூலமாக செலுத்தலாம்.
கேள்விக்கான பதில்கள் உங்கள் வாட்ஸ் அப் எண் அல்லது ஈமெயில் மூலம் கிடைக்கும்.
தொகையை செலுத்திய அன்பர்கள் அதற்கான ஆவணத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணில் தெரிய படுத்தவும்
வாட்ஸ்ஆப் எண் /Whatsapp Number : 09362555266
பணம் செலுத்தும் விவரம்
Google Pay -9789364952
Phone Pe -9789364952
UPI ID : singurajasiva@oksbi
வங்கி கணக்கு விவரம்
Account Number: 31592965214
Name : S.SIVA
BANK:STATE BANK OF INDIA
IFSC CODE : SBIN0007583
கேள்வி : விவாகரத்து கிடைக்குமா? மறுமணம் எப்போது நடக்கும்? ,Ramanathan,Tirunelveli
பதில் : மகர லக்கினம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 31.08.2023 வரை சனி தசை உள்ளது,தற்போது சனி தசையில் குரு புத்தி நடந்து வ்ருகிறது 7ம் அதிபதி சந்திரன் உடன் சூரியன் கேது சம்மந்த பட்டு இருப்பதுடன் ,8ல் சுக்ரன் செவ்வாய் இருப்பதும் ஒரு மோசமான கிரக அமைப்பு ,31.08.2023 க்கு பிறகு ஒரு நல்ல வழி பிறக்கும்,ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு புதன் கிழமையில் புதன் ஓரையில் சென்று வாருங்கள். மாற்றம் நிகழும்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும்..திருமணம் பின் வாழ்க்கை எப்படி இருக்கும்.கடக லக்னம்… 6ல் சந்திரன் செவ்வாய் கேது சேர்க்கை….ராகு 12ல் …..now ராகு திசை நடக்குது.விஜி ,பட்டுக்கோட்டை
பதில் : கடக லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது ராகு தசா ராகு புத்தி நடந்து வருகிறது. லக்கினாதிபதி சந்திரனுடன் செவ்வாய் கேது சம்மந்தபட்டு 6இல் இருப்பது ஒரு மோசமான அமைப்பு. தசாநாதன் 12-ல் வலுவாக இருப்பதால் 18.09.2025 க்குள் திருமணம் நிகழும்.வெளிநாட்டில் வசிக்கும் மாப்பிளை வ்ருவதற்கு வாய்ப்பு உண்டு அல்லது திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்லலாம்.பொதுவாக கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை மிக யோக பலன்களையே வழங்கும்.ஒருமுறை ஆலங்குடி சென்று குரு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.
கேள்வி : எப்போது சொந்த நாட்டிற்கு திரும்பி செல்லலாம்?,மோகன் ராஜ் ,தூத்துக்குடி
பதில் : 28.01.2024 க்கு பிறகு சொந்த நாட்டுக்கு விடுப்பில் சென்று வரலாம்.
கேள்வி : வெளிநாடு வந்து விட்டேன் 5 மாதமாக வேலை இல்லை குடும்பமும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டனர் இந்த நிலை எப்போது மாறும்,விஜயகுமார்,கோயம்புத்தூர்
பதில் : கன்னி லக்னம் மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது கோச்சார கிரக நிலைகள் சரியாக இருந்தாலும்,12 ராகு சனி இருப்பது வெளிநாட்டு வேலையில் ஒரு தொல்லை தரும் அமைப்பு.மேலும் உங்களுக்கு நடப்பு தசா கேது தசாவாக இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. வாழ்க்கையில் வெறுமை, சோகம், கவலை, ஏமாற்றம் இது போன்று பலவிதமான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிந்த வரையில் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்படுங்கள். சங்கடகர சதுர்த்தி தோறும் விநாயகரை வழிபட்டு வாருங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல மாற்றம் வரும்.
கேள்வி : கடந்த மூன்று மாத காலமாக காவல்துறையில் பணியிடை நீக்கத்தில் உள்ளேன் தற்பொழுது உள்ள இந்த பிரச்சனை எப்பொழுது எனக்கு முடிவுக்கு வரும்அவ்வாறு முடிவுக்கு வந்த பின்பு எத்திசையில் பணியிட மாற்றம் நிகழும்.Shanmugavel.r,Anuppapatty
பதில் : விருச்சிக லக்கனம் துலாம் ராசியில் பிறந்துள்ள நீங்கள் பிறக்கும் பொழுதே உங்கள் லக்னம் புதாத்திய யோகத்தில் அமைந்துள்ளது. மேலும் உங்கள் லக்னத்திற்கு 2-ல் சனிபகவானும் சுக்கிரனும் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். தற்போது நடப்பு தசாவான புதன் தசா உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளை தராது. ஏனென்றால் புதன் விருச்சிக லக்னத்திற்கு பாபர் என்ற முறையில் சில தொல்லைகளை தருவார். மேலும் இந்த காலகட்டத்தில் அளவுக்கதிகமான கோபங்கள் தலை தூக்கும். முடிந்த அளவு கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லா வகையிலும் பொறுமையுடன் செயல்பட்டால் உங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். தற்போது நடைபெற்று இருக்கின்ற குரு பெயர்ச்சியும், வருகின்ற ராகு கேது பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு மிகப்பெரிய யோகத்தை வழங்கும். உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வாரந்தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கும், செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கும் நெய் விளக்கு வைத்து வர சகல துறைகளிலும் தடைகள் விலகி மேலும் நன்மை நடக்கும்.
கேள்வி : திருமணம் எப்போது கை கூடும். மணிகண்டன் ,பெரம்பலூர்
பதில் : 03.11.2023 க்கு பிறகு திருமண முயற்சிகள் கைகொடுக்கும்.கடினமான தேடலுக்கு பின் தான் மண வாழ்க்கை அமையும்.மணப்பெண்ணை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
கேள்வி : 1தொழில் தொடங்கலாமா 2.வயது ஆகிவிட்டது திருமணம் எப்போது 3.பணம் பிரச்சனை இருக்கின்றது எப்போது சரி ஆகும்.4.நல்ல காலம் வருமா,கணேசன் ,புதுக்கோட்டை
பதில் :விருச்சிக லக்னம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மாரகாதிபதியான சுக்கிரனின் திசை முடிந்து தற்போது சூரிய திசை ஆரம்பித்துள்ளது. கடந்த காலங்களில் அதிகப்படியான மன உளைச்சல், வேதனை, ஏன் வாழ்கிறோம் என்கின்ற குழப்பம் என அதிகப்படியான இன்னல்களை சந்தித்து வந்திருப்பீர்கள். தற்போது கூட அந்த இன்னல்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது நடைபெறும் சூரிய தசா ராகு புத்தி 29.07.2023 வரை உள்ளது. நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக இந்த காலகட்டம் உள்ளது. புதிய தொழில் தொடங்குவது இப்போது வேண்டாம். மேலும் உங்களது கோச்சார கிரக நிலைகளும் சரி இல்லாமல் இருப்பதால் புதிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. 29. 7. 2023 க்கு பிறகு திருமணம் முயற்சிகள் கைகூடிவரும். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்து இருப்பதாலும் கேதுவின் சாரம் பெற்று சூரியன் தசையை நடத்துவதாலும் திருமண முயற்சிகள் சற்று தடைக்குப் பின் தான் நடைபெறும். ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வேளையில் கும்பகோணம் அருகில் இருக்கும் சூரியனார் கோவிலுக்கு சென்று நவகிரகங்களுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள் மாற்றம் கிட்டும்
கேள்வி : அரசு வேலை எப்போது கிடைக்கும் ,சிவநந்தினி ,கடலூர்
பதில் : மேஷ லக்னம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது மாரகாதிபதியான சுக்கிரனின் தசை நடைபெற்ற வருகிறது. சுக்கிரன் 12ல் உச்சம் பெற்ற தசையை நடத்துவதால் உங்களுக்கு பாதிப்புகள் சற்று குறைவாக தான் இருக்கும். ஏனென்றால் உங்கள் ஜாதகத்துக்கு சுக்கிரன் மறைவது நல்லது. மேலும் 26.5.2023 வரை சுக்கிர திசை இருப்பில் உள்ளது. அதுவரை மிக கவனமுடன் இருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள தேதிக்குப் பிறகு வருகின்ற சூரிய தசையில் அரசு சார்ந்த முயற்சிகள் கைகொடுக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்து வாருங்கள் நிச்சயம் நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
கேள்வி : என் ஜாதகம் இந்த பையன் ஜாதகம் பொருத்தம் இருக்கா வீட்டில் ஜாதகம் பார்த்து எங்களை சேர்க்க வாய்ப்பு உண்டா…..நாங்க திருமணம் பன்னலாமா….சேர்ந்தால் after mrg பிரிவினை வருமா
பதில் : உங்கள் இருவர் ஜாதகதத்திலும் நட்சத்திர பொருத்தம் நன்றாக உள்ளது.திருமணம் செய்யலாம்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? திருமண தடை பரிகாரம் ,ஜெயலட்சுமி,விருதுநகர்.
பதில் : மேஷ லக்கினம் ,தனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 28.02.2024க்கு பிறகு திருமண வாய்ப்புகள் கூடிவரும்.செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் மலைமேல் இருக்கும் முருகனை வழிபட்டுவாருங்கள்.நல்லது நடக்கும்.
கேள்வி : நல்லா வேலை எப்போ கிடைக்கும்? அரசு வேலை வாய்ப்புஉள்ளதா?,செல்லபாண்டியன்,விருதுநகர்.
பதில் : 13.01.2025 க்குள் ஒரு நல்ல வேலை அமையும்.அரசு வேலை மிக கடின முயற்சிக்கு பின் தான் கிடைக்கும்.தனியார் துறையில் மிக பெரிய பொறுப்புடன் கூடிய வேலை கிடைக்கும்.
கேள்வி : திருமணம் எப்போது நடக்கும் ? தர்மலிங்கம் ,திருப்பூர்
பதில் : கடக லக்கினம் ,மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது ராகு தசாவில் குரு புத்தி நடைபெற்று வருகிறது.29.09.2023 க்குள் ஒரு நல்ல வரன் வருவதற்காண வாய்ப்புகள் அதிகம்.மேலும் 7ம் அதிபதி சனி பகவான் அவரின் சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருப்பதால்.29.09.2023 க்கு பிறகு வரும் சனி புத்தியில் நிச்சயம் திருமணம் நடைபெறும்.ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானுக்கு அர்ச்சனை செய்துவிட்டு வாருங்கள்.நல்ல வரன் நீங்கள் நினைத்தபடி அமையும்.மேலும் நவாம்ச லக்கினத்தில் ராகு இருப்பதால் நிச்சயம் திருநாகேஸ்வரம் சென்று வரவேண்டும்.மிக பெரிய வாய்ப்பு வரும் காலகட்டம் பயன் படுத்தி கொள்ளவும்.
கேள்வி : காதல் திருமணம் அமையுமா? கலப்பு திருமணமா?,குருமூர்த்தி ,திருப்பூர்
பதில் : மேஷ லக்கினம் கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சூரிய தசாவில் செவ்வாய் புத்தி நடைபெற்று வருகிறது.லக்கினாதிபதி செவ்வாய் ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் அமர்ந்து புத்தியை நடத்துகிறார்.31.08.2024 க்கு பிறகு காதல் திருமணம் அமைய வாய்ப்புகள் அதிகம்.திருமணத்தை செயல் படுத்தும் போது மிகுந்த கவனம் தேவை.மிக அற்புதமான ஜாதக அமைப்பு உங்களுக்கு..தவறான செயல்பாடுகள் மூலமாக உங்கள் வாழக்கையை கெடுத்து கொள்ள வேண்டாம்.சிந்தித்து செயல்படுங்கள்.
கேள்வி : நான் ஒருவரை விரும்புகின்றேன் திருமணம் செய்து கொள்ள ஆசை படுகிறேன். திருமணம் செய்து கொள்ள ஏதாச்சும் வழி உள்ளதா ? அதற்க்கு பரிகாரம் எதாவது இருந்தால் சொல்லுங்கள்
பதில் : துலாம் லக்கினம் மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபரை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.அதற்க்கு ஜாதக ரீதியாக எவ்வித தடையும் கிடையாது.ஆனால் உங்கள் ஜாதகத்தில் 4ல் இருக்கும் சந்திரன் கேது இணைவு/7இல் இருக்கும் செவ்வாய் குரு சனி இணைவு காதலுக்கு இடையூறாக இருக்கலாம்.மனக்குழப்பம் ,சந்தேகம்,பயம் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து தொல்லை தரும்.காதல் விஷயத்தில் மிக கவனமுடன் செயல் பட்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதே எனது கருத்து.இதற்க்கு எவ்வித பரிகாரமும் இல்லை.
கேள்வி : நான் விவாகரத்து பெற்றவள். எனக்கு இரண்டாவது திருமணத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா, அந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்.
பதில் : கடவுளே துணை ! மகர லக்கினம் சிம்ம ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் கேது புத்தி நடைபெற்று வருகிறது.உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு நன்மை செய்யும் அத்துணை கிரகங்களும் கடுமையாக பாதிக்கபட்டு உள்ளது.நீங்கள் கும்பகோணம் அருகில் இருக்கும் அனைத்து நவக்கிர தலங்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வரவும்.பின்பு அந்த இறைவன் உங்களுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்தி தருவார்.
கேள்வி : வேலை எப்படி இருக்கும் ? நாகர்ஜுன் ,பரமகுடி
பதில் : கும்ப லக்கினம் விருச்சிக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசா குரு புத்தி நடை பெற்று வருகிறது (31.10.2025) வரை.உங்களுக்கு இந்த சுக்கிர தசா ராஜ யோக பலன்களை அளிக்கும் .அரசு வேலை தவிர்த்து,தனியார் துறை ,வெளிநாடு வேலை போன்றவைகளுக்கு முயற்சி செய்யுங்கள் 30.12.2032 வரை மிக யோக மான காலக்கட்டம் .இந்த நேரத்தை பயன்படுத்தி வாழக்கையில் முன்னேறிவிடுங்கள்.ஒரு முறை திருக்கஞ்சனூர் சென்று அங்குள்ள சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வரவும் .பிறகு என்ன யோகம்தான்.பரிகாரத்தை தவறாமல் செய்யவும்.வாழ்க வளமுடன் !
கேள்வி : எனக்கு கணவர் எப்படிப்பட்டவராக அமைவார் .திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,பெயர் வெளியிட விரும்பாத வாசகி ,மதுரை
பதில் : விருச்சிக லக்கினம் மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசாவில் புதன் புத்தி(25.05.2025)வரை நடைபெற்று வருகிறது.இந்த புதன் புத்தி முடிவதற்குள் திருமணத்தை நடத்தி முடிப்பது நன்று.மேலும் உங்கள் ஜாதகத்தில் 2ம் பாவத்தில் செவ்வாய் கேது சேர்க்கை இருப்பதாலும் 7ம் இடத்தில் சூரியன் ,சனி ,குரு ,புதன் ஆகிய கிரகங்கள் இருப்பதாலும் உங்கள் வருங்கால கணவரின் ஜாதகத்தை ஆராய்ந்து அதன் பின்னரே முடிவு எடுக்க வேண்டும்.25.07.2026 வரை சற்று கடினமான காலகட்டம்.எடுக்கும் முடிவுகளில் மிகுந்த எச்சரிக்கை தேவை.சற்று சறுக்கினாலும் பாதாளம்தான் …மிக கவனம்.வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவகிரகங்களை வழிபாட்டு வாருங்கள் நீங்கள் நினைத்தது நடக்கும்.
பதில் : கும்ப லக்கினம் ,மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது சுக்கிர தசா வில் ராகு புத்தி நடைபெற்று வ்ருகிறது.இந்த காலகட்டத்தில் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்யலாம்.மேலும் கோச்சார ரீதியில் உங்களுக்கு 71/2 சனி தொடங்கி உள்ளதால் அதுவும் விரய சனி என்பதால் அதிக பணம் செலுத்தி வெளி நாடு செல்ல வேண்டாம்.மேலும் ஆடம்பர தேவைக்கு பணம் வாங்குவதை முற்றிலும் தவிர்க்கவும்.மேலும் வரும் ராகு கேது பெயர்ச்சியில் உங்கள் ராசியிலேயே ராகு பகவான் ஜென்ம ராகுவாக சஞ்சரிக்க இருப்பதால் மிகுந்த கவனத்துடன் செயல் படுவது நல்லது.தற்போது கடன் தொல்லைகள் குறையாது.சிந்தித்து செயல்படுங்கள்.
கேள்வி : வருங்கால மனைவி பற்றி ?
பதில் :
வரும் மனைவி இளமையான தோற்றம் உடையவள்.சுறுசுறுப்பானவர்,சொந்தக்காரியாகவோ அல்லது சொந்த ஊர்காரியாகவோ அல்லது சொந்த பந்தங்கள் வசிக்கும் ஊர்க்காரியாகவோ இருப்பாள்.சரியான உடல் பொருத்தமுள்ள மனைவியாக இருப்பாள்.உஷ்ண தேகம் உடையவளாகவும் இருப்பாள் மனைவி பிறந்த ஊர் நீங்கள் பிறந்த ஊருக்கு கிழக்கு திசையில் இருக்கும். மனைவியின் வீடு கிழக்கு மேற்கு வீதியில் வடக்கு பக்கம் வாசல் உள்ள வீடாக இருக்கும். திருமணத்திற்கு பின் மனைவி எப்பொழுதும் தன் கணவர் வீட்டில் இருப்பதையே விரும்புவர். தன் பிறந்த வீட்டிற்கு செல்வதை விரும்ப மாட்டார்.மனைவி ஒருபோதும் உங்களை விட்டு பிரிய மாட்டாள். மனைவி இருக்கும் வீடு அதிக வெளிச்சம் உள்ள வீடாக இருக்கும்.
கேள்வி : நான் 12 படிப்பு முடித்துள்ளேன் எனக்கு படிப்பை தொடர வாய்ப்பு உள்ளதா இந்த வருடம் . அப்படி படித்தால் நான் என்ன படிக்கலாம் எனக்கு வருங்காலத்தில் பிசினஸா இல்லை வேலையா?V. Arunjunai,மதுரை
பதில்: கும்ப லக்கினம் தனுசு ராசியில் பிறந்துள்ளீர்கள்.மறைந்த புதன் நிறைந்த கல்வியை தரும் என்பது ஜோதிட விதி.மேலும் லக்கினாதிபதியுடன் சேர்ந்து மறைத்திருப்பதுதான் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.சூரியன் மற்றும் செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருப்பதால் அரசு வலு சேர்க்கும் கல்வியை பயிலலாம்.காவல் துறை ,பாதுகாப்பு துறை,அஞ்சல் துறை,மேலும் உங்கள் ஜாதகத்தில் சந்திரன் வர்கோத்தமம் அடைந்துள்ளதால் நிச்சயம் அரசு உயர் பதவி கிடைக்கும்.கடின முயற்சி தேவை .சொந்த தொழில் அவ்வளவு சிறப்பாக இருக்காது.
சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. கரிநாள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
ராகு காலம்
10.49AM -12.23PM
எம கண்டம்
03.32PM -05.06PM
திதி
சஷ்டி திதி இரவு 11.31 வரை பின்பு தேய்பிறை சப்தமி.
நட்சத்திரம்
உத்திரட்டாதி நட்சத்திரம் பகல் 02.30 வரை பின்பு ரேவதி.
சந்திராஷ்டமம்
கடகம்
யோகம்
நாள் முழுவதும் சித்தயோகம்.
இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan
ராசி
பலன்
மேஷம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.
ரிஷபம்
உங்களுக்கு தாராள தன வரவும், சுபிட்சமும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
மிதுனம்
உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த உதவி எளிதில் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.
கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
சிம்மம்
நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது, பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
கன்னி
மகிழ்ச்சி தரும் சுபசெய்திகள் உங்களை தேடி வரும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும்.
துலாம்
நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
உங்களுக்கு பணவரவு சுமாராக தான் இருக்கும். பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் அமைதி குறையும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வகையில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடலில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் அனுகூலப் பலன் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
மகரம்
குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வருமானம் பெருகும்.
கும்பம்
உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு நல்ல முன்னேற்றத்தை தரும்.
மீனம்
உங்களுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு புதிய வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
சனிக்கிழமையன்று திருநள்ளாறு சென்று சிவனையும், தாயாரையும், வணங்கி அர்ச்சனை செய்த பிறகு சனீஸ்வரரை தரிசிக்க வேண்டும். கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து, கருப்பு துணியை சனீஸ்வரருக்கு சாத்தி, எள் தீபம் ஏற்றி, எள் சாதம் நைவேத்தியமாக வைத்து பூஜை செய்ய வேண்டும்.
கோயிலில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்கள் கம்போதி ராகத்தில் இறைவனை பாடி வணங்க வேண்டும்.
சனீஸ்வர பகவானுக்கு பிடித்த பரிகாரமே அன்னதானமாகும்.
வடநாட்டில் நாசிக் மாவட்டத்தில் சிரபுக்கு அருகே சனீஸ்வரர் கோயில் உள்ளது. அவுரங்காபாத்திற்கும், அகமது நகருக்கும் இடையில் உள்ள கோடேகானிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அங்கணபுரம் சிறப்பான கோயில். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக உள்ளார். கோயிலுக்கு கூரை கிடையாது. கதவுகள் கிடையாது. வடநாட்டில் உள்ளவர்கள் இந்த ஊருக்கு வந்து சனீஸ்வரப்ரீதி செய்து கொள்ளலாம்.
சிரபு யாத்திரை செய்பவர்களும் இந்த கோயிலுக்கு சென்று வரலாம். அதேபோல தேனி மாவட்டத்தில் குச்சனூரில் தனி கோயிலாக சனீஸ்வர பகவான் இருக்கிறார். அங்கு சனீஸ்வர ப்ரீதி செய்து கொள்ளலாம்.
உங்கள் பிரச்சனைக்கு தினசரி நீங்கள் வணங்கி பாட வேண்டிய துதி!
முனிவர்கள் தேவர்கள், ஏனைய மூர்த்திகள் முதலானோர்கள்
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணம் கையில் தங்கவே இல்லையென்ற புலம்பல் இன்று அனைவரிடத்திலும் இருக்கிறது. இதற்குமுதல் காரணம் நம் கையில் இருக்கும் பணத்தை எதற்கு செலவழிக்கிறோம் என்றும் அதற்கு தேவை உள்ளதா என்பதையும் கருத்தில்கொள்ளாமல் செலவுசெய்வதுதான்.
இது ஒருபுறம் இருந்தாலும் தம் கையில் பணம் வருவதற்கு முன்பாகவே அது செலவழிப்புக்கான காரணங்களும் நமக்கு முன்பாக வந்துவிடும். இது போல நிகழாமல் இருக்க இந்த எளிய தாந்த்ரீக முறைகளைக் கடைப்பிடிக்கலாம் என்று ஆன்மிகம் சொல்கிறது. அது என்னவென்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
முதலில் இதை யார் செய்யவேண்டும் என்பதை பார்த்துக்கொள்ளலாம். ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால் அனைவருமே பணத்தை செலவழிக்க மாட்டார்கள் யாரோ ஒருவர் கையில்தான் பணம் தாங்காமல் செல்வழிந்து கொண்டே இருக்கும் அந்த நபரின் கையால் இந்தப் பரிகாரத்தை செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம்.
இந்தப் பரிகாரத்தை நல்ல நாள் அல்லது புதன் வியாழன் போன்ற நாட்களில் செய்யலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாளில் நல்ல நேரத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அந்த நேரத்தில் உங்களுக்கு தெரிந்து உண்மையிலே சாப்பாட்டிற்குகூட வழியில்லாமல் துன்பப்படுபவர்களுக்கு உங்கள் கையால் ஒரு சிறிய தொகையை தானமாக கொடுக்கவேண்டும். இந்தப் பரிகாரத்திற்கு பணத்தைதான் தானமாக கொடுக்கவேண்டும். ஏனென்றால் பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்காகதான் இதை செய்கிறோம். எனவே பணத்தை மட்டும்தான் கொடுக்கவேண்டும் வேறு எந்த பொருளையும் வாங்கிச் கொடுக்கக் கூடாது.
இதேபோல வாழ்கயிைல் நியாயமாக நடப்பவர்கள், பிறருக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள், இப்படிதான் வாழவேண்டும் என்று இருப்பவர்கள். இப்படி நல்லவர்கள் என்று உங்கள் மனதிற் தோன்றுகிறார்களோ அவர்கள் கையால் இதே போலதொரு நல்ல நாளில் ,நல்ல நேரத்தில் சிறு தொகையை பணத்தை நீங்கள் தானமாக பெற வேண்டும். இப்படி யாரும் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் சிவயோகிகள் ,சித்தர்கள் போன்றவர்கள் இடத்தில் இருந்து பெறலாம்.
நீங்கள் திடீரென சென்று ஒருவரிடம் பனம் கேட்டால் தரமாட்டார்கள் ஏனவே நீங்கள் யாரிடம் பணம் வாங்க போகிறீர்கள் என்பதை முடிவுசெய்த பிறகு அவர்களிடம் இந்தப் பரிகாரத்தை செய்வதற்கு இதுபோல நீங்கள் ஏதாவது ஒரு சிறு தொகையை எனக்கு தாருங்கள் என்று நீங்கள் முன்கூட்டியே நேட்டு வைத்துவிடுங்கள். பணம் என்றால் பெரியதாக இருக்கவேண்டும் அர்த்தம் இல்லை. ஒரு ரூபாயாக இருந்தால்கூட போதும்
இதை எத்தனை நாட்கள் செய்யவேண்டும் என்பது கணக்கு எல்லாம். கிடையாது நீங்கள் கொடுப்பதும் சரி- வாங்குவதும் உங்களுக்கு தோன்றும்பொழுது செய்யலாம். ஆனால் கொடுத்து வாங்கும் நாள் நல்ல நாளாக இருக்கவேண்டும். நேரம் நல்ல நேரமாக இருந்தால் மிகவும் முக்கியம்.
இந்தப் பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்யும்போது நம்மையும் அறியாமல் நம் கையில் இருந்து வீணாக செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பணம் வீண் செலவு ஆகவில்லை என்றாலே பணம் சேர்கிறது என்றுதான் அர்த்தம் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை நல் முறையில் செலவழித்து நல்லதொரு வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.
குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் வழியில் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கிய பாதிப்புகள் சற்று குறையும்.
ரிஷபம்
பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் உங்கள் திறமைகேற்ப உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
மிதுனம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
கடகம்
உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். உங்கள் ராசிக்கு பகல் 10.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் மதியத்திற்கு பிறகு அனுகூலம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் படிப்படியாக குறையும்.
சிம்மம்
உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1045 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது.
கன்னி
நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
துலாம்
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர், செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொன் பொருள் சேரும். ஆரோக்கியம் சீராகும்.
விருச்சிகம்
உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.
தனுசு
உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிட்டும்.
மகரம்
பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் செய்ய நேரிடும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மீனம்
உறவினர்களால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.
வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் அனுகூலப் பலனை தரும்.
நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 09.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் குறையும்.
கடகம்
உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு காலை 09.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
சிம்மம்
ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
கன்னி
உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.
துலாம்
நீங்கள் எந்த செயலை செய்தாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் அதில் வெற்றி அடையலாம். சொந்த தொழில் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை காணப்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
குடும்பத்தில் அமைதி குறையும். வண்டி வாகனங்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.
தனுசு
உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். திடீர் பண வரவு ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும்.
மகரம்
எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
மீனம்
தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும்.
பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.
வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
மிதுனம்
உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகங்களில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
கடகம்
உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் விலகி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பெண்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
சிம்மம்
உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். சிலருக்கு நவீனகரமான பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
கன்னி
குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
துலாம்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வராத கடன்கள் வசூலாகும்.
விருச்சிகம்
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். அசையா சொத்துக்கள் வகையில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
தனுசு
பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப் பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
தொழில் வியாபார ரீதியாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை. வீட்டு தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.
மீனம்
குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தாங்கள் தாய் நாடு மற்றும் தாய்மொழி மீது அதிக நாட்டம் இருக்கும். ஆடி மாதத்தில் பிறந்தவர்களை யாராவது கடிந்து கொண்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதே நேரம் அவர்களால் பிரச்சனை ஏற்பட்டால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
ஆடி மாதத்தில் பிறந்தவர்களிடம் பேசுவதற்கு முன் நன்கு யோசித்துப் பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தால் அதில் எளிதில் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவி ஒதுங்கி கொள்வார்கள். எந்த ஒரு விஷயத்திலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதவாறு இவர்கள் எதையும் திட்டமிட்டு அந்த செயலை செய்வார்கள்.
சொந்த பந்தங்கள் சிலருடன் இவருக்கு இவர்களுக்கு ஒத்துப் போகாது.அவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்கள் அக்கம்பக்கத்தார்கள் மூலம் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறைவு. இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் முந்தைய தலைவர்களின் புகழை பாடியே நிறைய பணம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் தீவிரமாக இறங்கினால் இவர்கள் எளிதில் அதில் வெற்றி பெறுவார்கள். அதே நேரம் சோம்பேறியாக இருந்தால் இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள். இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். கடிந்து பேசினாலும் தூற்றினாலும் வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன் நேரடியாக பதில் அளிக்க மாட்டார்கள். பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுபவர்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.
எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ள மாற்றம் கொண்டவர்கள் சில சமயங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்த பந்தங்கள் நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். அடிக்கடி தங்கள் குணத்தையும் முடிவுகளையும் மாற்றிக் கொள்வார்கள். சந்தேகம் இவர்களின் உடன் பிறந்த ஒன்றாகும். பிடிவாதம் கொண்டவர்கள் சுவையான சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தாங்கள் ஒரு விஷயத்தில் லாபம் அடைவதாக இருந்தால் அதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.
லக்னத்திற்கு கேந்திரத்தில் (1,4,7,10-ல்) குரு உச்சம், ஆட்சியாக அமைந்து இருப்பாரானால் அது ‘அம்ச யோகமாகும்’. இதனால் ஜாதகர் முகவசியமாகவும், புகழ்மிக்கவராகவும், ஆராய்ச்சி திறனும், மிகப்பெரிய பதவிகளையும் பணத்தை நன்கு சேமிக்க கூடியவராகவும் இருப்பார். எந்த வகையிலாவது ஒரு துறையில் ஏற்றம் பெறுவார்.
கோடீஸ்வர யோகம்
தனத்தில் அதிபதி குருபகவான் கேதுவுடன் கூடி லக்னத்திற்கு கேந்திர இடம்பெற்றால் இது ‘கோடீஸ்வர யோகமாகும்’. இதனால் அந்த ஜாதகர் சாதரண நிலையில் இருந்தால் பெரிய அளவில் தொழில் செய்து சம்பாதிப்பார். எந்த வகையிலாவது எதிர்பாராத நல்லதொரு வாழ்க்கை இந்த யோகத்தால் ஜாதகர் அடையமுடியும்.
அங்கிச் யோகம்
உங்க லக்னத்தில் இருந்து 1, 4, 7, 10-ல் குரு நட்பு, ஆட்சி, உச்சமாக அமையின் அது அங்கிச யோகமாகும். இதனால் உடலில் விந்துவை அதிகமாக உற்பத்தி செய்யும் தன்மை உடையவராக இருப்பர். தன் மூளையை நன்கு பயன்படுத்துவீர்கள். நல்ல புத்திர அம்சங்களை,சமூகத்தில் ஒரு மதிப்புள்ளவராக இருப்பார். கடல் அமைப்பை நன்கு பெற்று இருப்பவர். ஆனால் பெண் மோகம் அதிகம் இருக்கும்.
கஜகேசரி யோகம்
குருவுக்கு கேந்திரத்தில் 1,4,7,10-ல் சந்திரன் இடம் பெற்றால் இந்த யோகம். இதன் பலன் ஜாதகத்தில் எவ்வித தோஷம் இருப்பின் அவை நீங்கும். அரசனுக்கு சமமான வாழ்க்கை வாழ்பவர். ஏதேனும் ஒரு துறையில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமாக கூடியவர். எத்தனை கஷ்டம். நஷ்டம் ஏற்பட்டாலும் துவண்டுவிடமாட்டீர்கள். எப்பொழுதும் பண வருவாய் இருந்துகொண்டே இருக்கும்.
மருத யோகம்
குருவும் சுக்கிரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் நீசம் பகையில்லாமல் இடம்பெறின் இந்த யோகம் உண்டாகும். இதனால் நல்ல தந்திரசாலியாகவும், இத்துடன் ஏதேனும் ஒரு நுட்பத்தை அறிந்து ,எந்த வகையிலாவது பலர் பாராட்டும் அளவில் ஜாதகர் ஈடுபடக்கூடும்.
சிவராஜ யோகம்
குருவும்- சூரியனும் சிம்மம், தனுஷ், மீனம் இவற்றில் இடம்பெற்றிருந்தால் இந்த யோகம் உண்டாகும். இதனால் அரசு பீடத்தை எத்தவகையிலும் ஆளக்கூடியவராக இருப்பார் அரசு சகாயம் உடையவர். தன் பிறப்பு இடத்தின் மூலம் பெருமை அடைபவர். பேச்சால், செயலால், எதையும் சாதிப்பவர்.சிவ பக்தர். எதையும் நன்கு நிர்வகிக்கும் ஆற்றல் உடையவர்.
அசுபர யோகம்
குருவும். சந்திரனும் லக்னத்திலிருந்து லக்னாதிபதி சுபர்களுடன்கூடி இருந்தால் இந்த யோகம். இதன் பலன் அரசியலில் ஈடுபாடு, பல பொது சமூக சேவைகள் அல்லது டிரஸ்டு நிறுவனம் இதுபோன்றவற்றில் கௌரவ பதவி, பவர், பணியாட்களை பெற்று இருப்பவர் சரித்திர சான்றாககூட திகழ்பவர்.
குரு சந்திர யோகம்
குருவுக்கு திரிகோணத்தில் 1, 5, 9-ல் சந்திரன் நீசம் பகை இல்லாமல் இருப்பின் இந்த யோகம். இதனால் கடைசிவரை ஜீவனக் கஷ்டம் இராது. முகஸ்துதி உடையவர். முன்னேற்றம் உள்ளவர். துன் தேஜஸை நன்கு அமையப் பெற்றவர். ஏதேனும் ஒரு துறையில் பெயர் புகழுடன் விளங்ககூடும். உங்க சொல்லுக்கு மக்கள் மதிப்பு இருக்கும்.
குரு மங்கள யோகம்
குருவுக்கு திரிகோணத்தில் 1, 4, 7, 10-ல் செவ்வாய், பகை நீசம் இல்லாமல் இடம்பெற்று இருப்பது இந்த யோகமாகும். இதன் பலன் மணி, மனை, தோட்டம் இப்படி பூமி இனங்களினால் பயன் பெறுவீர்கள். ஸ்திர சொத்தின் மூலம் செல்வம் சேரும். எதையும் சாதிக்க கூடியவர். வாழ்வில் எந்தவகையிலும் போராடி எப்படியும் தான் நினைத்ததை அடைய நினைப்பவர்.
மரகத யோகம்
குருவும் புதனும் கேந்திர, திரிகோணத்தில் குறிப்பாக இயற்கை சுபக்கிரக ராசியில் இடம்பெற்று இருப்பது இந்த யோகம். இதனால் படிப்பு, பட்டம், தொழில், கதை, கவிதை, இதன் ஈடுபாடு எந்தவகையிலாவது சில துறைகளிலும் நன்கு பிரகாசிக்க கூடியவராக இருப்பீர்கள். லீகல் அட்வைசராக இருப்பவர்களுக்கு இந்த யோகம் கூடியமட்டும் அமைந்து இருக்கும்.
குறிப்பாக குருபகவானையும், தட்சிணா மூர்த்தியையும், வியாழக்கிழமையில் வழிபடுவதுடன் இவர்களுக்கு முல்லை, செம்மங்கி மலர்களை மாலையாக சூடி, மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டக்கடலை, நெய் பொங்கல் நெய்வேத்தியம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்து அபிஷேகமும் செய்து வழிபடவும்.
கரும்பு சாற்றினால் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம் செய்வதும். யானைக்கு ஏதேனும் தானம் செய்யலாம். குறிப்பாக சிதம்பரம், கடலூர், தஞ்சை நாச்சியார் கோவில் இங்கே சென்று தரிசிப்பது,அர்ச்சனை செய்வது, குரு ஸ்தலமான திரு ஆலங்குடி சென்று ஆபத்துசகாஸ்வரரை வழிபடவும். இத்தகைய பரிகாரங்களை சரியாக செய்துகொண்டால் பட்டமங்கலம் அசுப பல குருவின் அமைப்பில் இருந்து விடுபடலாம்.
உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
ரிஷபம்
உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடும். எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் ஊதியம் உயர்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும்.
கடகம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம்
குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக செல்லும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.
கன்னி
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேல் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மேலோங்கும்.
துலாம்
உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
விருச்சிகம்
உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிட்டும். வருமானம் பெருகும். கடன் பிரச்சினை தீரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
தனுசு
நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
மகரம்
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
மீனம்
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். கடன்கள் சற்று குறையும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும்.
தொழில் வியாபாரத்தில் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உத்தமம். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ரிஷபம்
நீங்கள் கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
மிதுனம்
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்
குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிதானமாக நடந்து கொள்வது நல்லது. உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
சிம்மம்
உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
கன்னி
நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.
துலாம்
பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் வழியில் சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லை சற்று குறையும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.
விருச்சிகம்
நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை கூடும். வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
மகரம்
பிள்ளைகளால் வீட்டில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் மறையும். கடன் பிரச்சினைகள் தீரும்.
கும்பம்
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
மீனம்
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன நிம்மதி குறையும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.