கேது கிரகம் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்
ராகு(Rahu) கிரகத்தைப் போலவே கேது(Kethu) கிரகமும் கொடூரமான பலன்களைத் தரும்.
கேது(Kethu) கிரகம் ஓர் ராசி மண்டலத்தை தாண்டுவதற்கு 18 மாதங்கள் ஆகும்.
12 ராசிகளையும் சுற்றிவர ராகு- கேதுவிற்கு(Rahu-Kethu) 18 வருடங்களாகும்.
இந்த கிரகங்கள் தாங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த இடத்துக்கு சொந்தமான கிரகத்தின் தன்மையை இவை பிரதிபலிக்கும். அதனால் இவ்விரண்டிற்கும் சாயா கிரகங்கள் என்று பெயர்.
இனி கேது(Kethu) கிரகம் பன்னிரு வீடுகளில் எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
லக்னத்தில் கேது
-
- ஒருவர் ஜாதகத்தில் லக்கினம் எனும் முதல் பாதத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்,
- பார்வைக்கு கட்டுடலுடன் அழகாக காட்சி அளிப்பார்,
- ஆனால் இவர் உண்மையில் வலுவற்றவர்,பலவீனமானவர் ,பக்திமான் என்றும் சித்துவேலை கற்றவர் என்றும் அதீத சக்தி தம்மிடம் உள்ளது என்றும் தற்பெருமை பேசிக் கொள்வார்,
- பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தொல்லை தரலாம்,
- தீயோர் தொடர்பால் பழக்கங்கள் ஏற்பட்டு ,சுற்றத்தார் இடமும் சுற்றி இருப்பவர் இடமும் கெட்ட பெயர் எடுக்க நேரலாம்,
- மாந்திரீகம், மரணம், தாந்திரீகம், வசியம், ஏவல் ,பில்லி ,சூனியம் ஆகியவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவராய் இருப்பார்.
2-ல்கேது
- கேது(Kethu) கிரகம் 2-ல்அமையப்பெற்றவர் ,
- கவிதை, கதை, நாடகம், ஞானநூல், ஆகியவற்றில் மிகுதியான ஈடுபாடு ஏற்படும்,
- கற்ற கல்வியை விட மிகுந்த அறிவாற்றல் இருக்கும்,
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இராது,
- பொருளாதாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு மன அமைதி கெடும்
3-ல்கேது
- கேது(Kethu) கிரகம்3-ல் அமையப் பெற்றவர்
- சகோதர ,சகோதரிகளுடன், உறவினர்களுடன் பகை ஏற்படும்,
- அசட்டுத்தனமான தைரியத்தால் தொல்லைகள் ஏற்படும்,
- மனைவி மக்களிடம் ஏற்படும் மன வருத்தத்தினால் மன நிம்மதி கெடும்,
4-ல்கேது
- நான்காம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்
- வாழ்க்கை போராட்டம் வாழ்க்கையாக இருக்கும்,
- மனைவி மக்களை பிரிந்து ஊர் ஊராக அலைய நேரிடும்,
- 4-ம் பாவத்தை சுபகிரகம் ஏதாவது பார்த்தால் தீய பலன்கள் சற்று குறையலாம்,
- நான்காம் பாவத்தில் பாவ கிரகங்கள் அமைந்தால் துன்பப்படுவர்,இதற்கு தோஷ பரிகார பூஜை செய்து நலம் பெறலாம்,
5-ல்கேது
- கேது(Kethu) 5-ல் இருக்கப்பெற்றவர்
- தொலைதூர நாடுகளுக்கு பயணம் சென்று துன்பம் அடைவார்,
- முதலில் பெண் குழந்தை பிறக்கும்,
- பிற்காலத்தில் சொத்து, சுகம், செல்வம் ஆகியன ஏற்படும்,
- சொந்த ஊரில் நிந்தனைக்கு ஆளாவார்,
- கிராம தேவதையை பூஜை செய்பவராய் இருப்பார்,
- பூர்வ புண்ணிய ஸ்தானம் என கூறப்படும் இந்த ஐந்தாவது ஸ்தானத்தில் பாவ கிரகங்கள் இருப்பது நல்லதன்று ,
- இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் கிரக பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்
6-ல்கேது
- ஆறாம் பாதத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்
- உடல் உறுப்புகளில் குறைபாடு உள்ளவர்,
- உறவினரோடும் மனைவியோடும்நண்பர்களோடும் அவசியமில்லாமல் சண்டையிட்டு விரோதிகளை உருவாக்கிக் கொள்வார்,
- அந்த விரோதிகளால் பல துன்பங்களும் அவர்கள் ஆயுதத்தால் தாக்குதல் ஏற்படாமல் தவிர்க்க முயலவேண்டும்,
- வறுமையினால் கடன் ஏற்பட்டு தொல்லை ஏற்படாது விழிப்பாய் இருக்க வேண்டும்,
- ஆறாம் பாவத்தில் சுப கிரகங்கள் இருந்தால் நற்பலன்கள் எட்டுவதில்லை பாப கிரகமான கேது இருந்தால் தொல்லைகள் தாமே!
- இந்தத் தொல்லைகளை தவிர்க்க தினந்தோறும் கேது பகவானை முறைப்படி வழிபட்டு கிரக தோஷ பரிகார பூஜை செய்யவேண்டும்,
7-ல்கேது
- ஏழாம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் அமையப் பெற்றவர்
- திருமண வாழ்வில் மகிழ்ச்சி இராது,
- மனைவி -கணவனை விரும்ப மாட்டாள் அதனால் சண்டை சச்சரவு ஏற்படும்,
- இதனால் இவர் மனைவியை பிரிந்து மற்றொரு பெண்ணை மணப்பார்,
- அவளிடமும் இவர் சண்டையிட்டு அதனால் அவள் உறவினர் விரோதம் ஏற்படும்.இப்படி போராட்ட வாழ்க்கைய நடத்துபவர்.
- இன்பத்தை தேடி அடைவதாக எண்ணிக்கொண்டு சிபிலிஸ் ,கொனரியா, முதலிய நோய்களும் சிறுநீரகக் கோளாறுகளும் ஆளாகாமல் விழிப்பாக இருக்கவேண்டும்,
- இவர் தம் வாழ்க்கையில் நலம்பெற தம் மனைவியுடன் ராகு -கேது கிரக தோஷ பரிகார பூஜை செய்து தினம்தோறும் நவகிரக வழிபாடு செய்ய வேண்டும்,
- அதனால் நலம் பெறலாம், வாழ்வில் வளம் பெறலாம், மனதில் நிம்மதி பெறலாம்,.
8-ல்கேது
- எட்டாம் இடத்தில் கேது(Kethu) கிரகம் அமையப் பெற்றவர்
- துன்பம், எந்த தொழில் செய்தாலும் இழப்பு, நம்பிக்கை துரோகம், வறுமை, நோய், எல்லோருடனும் விரோதம், சிடுசிடுப்பு ஆகியவற்றுக்கிடையே வாழ நேரும்,
- இவரே விரோதிகளை உருவாக்கிக் கொள்வார்,
- இவர் மரணத்திற்கு காரணம் இவரே
- நாள் தோறும் நவகிரக வழிபாட்டை செய்தால் நலம் பெறலாம்,
9-ல்கேது
- ஒன்பதாம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்
- ஏழையாக மட்டுமின்றி கோழையாகவும் இருப்பார்,
- மனைவியின் கை பொம்மை, உறவினரோடு பகை கொள்ளுவார் இவரால் தந்தைக்கு மிக்க துன்பம் எனினும் தெய்வ பக்தி உள்ளவர்,
10-ல்கேது
- பத்தில் கேது கிரகம்(Kethu) இருக்கப்பெற்றவர்
- சற்று கொடூரமான தேவதைகளை வணங்குபவர்,
- காம இச்சைகளை தீர்த்துக்கொள்ள மிகுந்த அளவு செலவு செய்வார்,
- எப்போதும் வெளியூர் பயணங்களில் சுற்றிக் கொண்டிருப்பார்,
- தொலைதூர நாடுகளுக்குச் சென்று பணம் ஈட்டுவார் ,
- பிற பெண்களால் இவர் தம் மனைவியை பிரிய வேண்டிய நிலை ஏற்படும் அப்படி பிரியும் மனைவியால் அவமானமும் வம்பு வழக்குகளும் ஏற்பட வாய்ப்புண்டு,
11-ல்கேது
- பதினோராம் பாவத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்
- போர் சாதனங்களை சேகரிப்பான் அல்லது ராணுவ தளங்களில் ஏலம் விடப்படும் பொருட்களை வாங்குபவரா இருப்பார்,
- தெய்வ பக்தியும், கடமை தவறாத உணர்ச்சியும், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்,
- நல்ல நண்பர்கள் மூலம் இவருக்கு செல்வம் சேரும் ,
- பெண்களுக்காக தாராளமாக செலவு செய்வார் அதனால் முதுமை காலத்தில் கெட்ட பெயர்களையும் நோய்களையும் பெற நேரும்,
12-ல்கேது
- 12ஆம் இடத்தில் கேது(Kethu) கிரகம் இருக்கப்பெற்றவர்
- வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார்,
- இவர் வளர வளர வசதிகள் குறைய ஆரம்பிக்கும்,
- இவரது நடுத்தர வயதில் எந்த சொத்தும் இராது,
- மனைவி சொத்துக்களுடன் வருவாள் வந்தபின் மனைவியின் சொத்துக்களும் நகைகளும் விரையமாகும்,
- நண்பர்கள் உதவி செய்து நஷ்டம் அடைவார்கள்,
- குடும்பத்தில் நிம்மதி இராது