- Advertisement -
ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-மேஷம்
(அசுவினி, பரணி,கிருத்திகை 1ம் பாதம்)
- 2022 – ஆம் ஆண்டு தன காரகன் குரு பகவான் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11 – ல் சஞ்சரிப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களை ஆண்டின் தொடக்கத்தில் பெறுவீர்கள் .
- உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும் .
- திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும்.
- நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும்.
- பூர்வீக சொத்துகளால் அனுகூலங்கள் உண்டாகும்.
- எதிர்பாராத தனவரவுகளால் குடும்பத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
- ஆண்டின் தொடக்கத்தில் 2 , 8 – ல் சஞ்சரிக்கும் ராகு , கேது 12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்ப கிரக மாற்றத்தின் மூலம் ராகு ஜென்ம ராசியிலும் , கேது 7 – ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது , குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது .
- தொடக்கத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12 – ல் சஞ்சரிக்க இருப்பதால் குரு மாற்றத்திற்குப் பிறகு பணவரவுகளில் சற்றே நெருக்கடிகள் உண்டாகும் .
- கொடுக்கல்- வாங்கல் போன்ற வற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது .
- புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களைக் குறைத்துக் கொள்ளமுடியும் .
- தொழில் , வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் வரவேண்டியவாய்ப்புகள் தடையின்றி வரும் .
- கூட்டாளிகளையும் தொழிலாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது . உத்தியோகஸ்தர்கள் பணியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சில நேரங்களில் பொறுப்டே வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் , உயரதிகாரிகளின் ஆதரவுகள் மன நிம்மதியை அளிக் எந்தவொரு விஷயத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதே உத்தமம் .
- உங்க ராசிக்கு இவ்வாண்டில் சனி 10 – ல் சஞ்சரிப்பதால் தொழில்- உத்தியோக ரீதியாக கவனமா செயல்பட்டால் மட்டுமே அடையவேண்டிய இலக்கை அடைய முடியும் . திருக்கணிதப்படி ச பகவான் அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தா மான 11 – ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் , இக்காலங்களில் எதிர்பார அனுகூலங்கள் ஏற்படும்.
- Advertisement -