தனுசு
( மூலம் , பூராடம் , உத்திராடம் 1 – ஆம் பாதம் )
சுயநலம் இன்றி பிரதிபலன் எதிர்பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே!!!
உங்கள் ராசிக்கு 6 , 12 – ல் சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் தற்போது ஏற்படும் ராகு- கேது பெயர்ச்சி மூலம் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி வரும் 12-4-2022 முதல் 30-10-2023 வரை உங்கள் ராசிக்கு ராகு5-லும் , கேது 11 – லும் சஞ்சரிக்க உள்ளனர்.
நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் சற்று சிந்தித்து செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்றுகவனம் எடுத்து கொண்டால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படமுடியும்.உணவு விஷயத்தில் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்து ரீதியாக பங்காளிகளிடம் தேவையற்ற கருத்து வேறுப்பாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது சிந்தித்து பேசுவது நல்லது. எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் இருந்தாலும் எதையும் சமாளித்து அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.சிறு பாதிப்பு என்றாலும் உடனே அதற்கு சிகிச்சை எடுப்பது நல்லது.நீண்டநாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். ஜனவரி 2023 முதல் உங்கள் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.சிலருக்கு வயிறு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது.
குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும்.சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படும்.புத்திர வழியில் சிறிது மன கவலை ஏற்படலாம் என்பதால் அவர்களை பக்குவமாககையாளுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் ரீதியாக உறவினர்களிடம் கருத்து வேறுப்பாடுகளுக்கு வாய்ப்பு இருப்பதால் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. பண வரவுகள் சற்று சாதகமாக இருக்கும்.2023 ஜனவரிக்கு பிறகு உங்களுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் விலகி சகல விதத்திலும் மேன்மைகளை அடைவீர்கள்.
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும் , மகிழ்ச்சியும் ஏற்படும்.எதிர்பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும் , பதவி உயர்வுகளும் சற்று தாமதமாக கிடைக்கும்.அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பது மன நிம்மதியை தந்தாலும் சக நண்பர்களிடம் சற்று கவனத் துடன் பேசுவது நல்லது. புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டால் 2023 ஜனவரிக்கு பிறகு மிக பெரிய வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் இருக்கும்.வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகளால் அனுகூலம் உண்டாகும்.தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.உங்கள் செயல்களுக்கு அனுகூலங்கள் உண்டாகும்.கூட்டாளிகளை மட்டும் அனுசரித்து செல்வது நல்லது. தற்போது சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் 2023 ஜனவரி முதல் தொழிலில் சிறப்பான நிலையை அடைவீர்கள்.
பரிகாரம்:
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்கள் , மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது , கண்ணில் மை வைப்பது , அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது கருப்பு ஆடைகள் , கைகுட்டை போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.
- ஒருமுறை காளஹஸ்தி சென்று சுவாமி , அம்பாளை வணங்கிட்டு , கொடிமரத்தடியில் நமஸ்காரம் செய்துவிட்டு வாருங்கள்.
- பால்கலந்த இனிப்புகளை வாங்கி பிறருக்கு தானமா கொடுங்கள்.
- மாதம் ஒரு திங்கட்கிழமை பக்கத்து சிவாலயம் சென்று கோளறு பதிகம் சொல்லி வணங்குங்க.
- ஏழை மாற்றுத் திறனாளிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.