சித்திரை மாத கிரக சஞ்சார பலன்கள்
- இம்மாதம் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். கடும் வெயிலின் தாக்கம் காரணமாக உயிர் பலிகள் அதிகரிக்கும். அனல் காற்று வீசும்.
- தங்கம், வெள்ளி விலை உச்சத்தை நோக்கி செல்லும்.
- பங்கு சந்தையில் சிறிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரிக்கும்.
- எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்கல் துறையும், கம்ப்யூட்டர் துறையும் நன்கு வளர்ச்சி அடையும், ஜவுளி மற்றும் பட்டுத் துணிகள் வியாபாரமும் வளர்ச்சி அடையும்.
- சாமந்திப்பூ, தேங்காய், மல்லிகைப்பூ, வெங்காயம் காய்கறிகள் விலை ஏறும்.
- சுப காரியங்கள், தெய்வ காரியங்கள், யாக காரியங்கள் மிக அதிகமாக நடக்கும்.
- குழந்தைகள் பிறப்புக்கான கருத்தரிப்பு விகிதம் சற்று அதிகமாகும்.
- மே மாதம் முதல் இரண்டாவது வாரத்தில் ஆகாயவிமானம் பழுதாகி உடையும். அல்லது விமானம் காணாமல் போகும்.
- செயற்கை கோள் பழுதாகும். தொழில்துறை ஓரளவு வளர்ச்சி அடைந்து பழைய நிலைக்கு திரும்பும்.
சித்திரை 20ஆம் தேதி அட்சய திருதியை அன்று தான தர்மங்கள் செய்யவும், தங்கம் வாங்க உகந்த நாள்.
உகந்த நேரம் பகல் 10:30 முதல்11:00, 12:00முதல் 1:00 மாலை 4:30 முதல் 6:00 இரவு 7:00 முதல் 08:00
- Advertisement -