Thursday, March 28, 2024
Homeஆன்மிக தகவல்பிரத்தியங்கிரா தேவி-வரலாறு-மூல மந்திரம்

பிரத்தியங்கிரா தேவி-வரலாறு-மூல மந்திரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பிரத்தியங்கிரா தேவி-வரலாறு

நாசிம்மரை அடக்க எழுந்த சாப மூர்த்திக்கு உதவ முன் வந்தவள் பத்ரகாளி என்னும் பிரத்தியங்கிரா தேவி. இவள் பயங்கரத் தோற்றம் கொண்டவள். இவளை சாபத் தீ என்றும் கூறுவார்கள்.

இவளுடைய பெருமையை விளக்கும் ருக் மந்திரங்கள் ஒன்பது வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருக் கின்றன.

அதரவது 48 ருக் மந்திரங்கள் இவர் புகழை வெளிப்படுத்துவதால் இவள் அதர்வண பத்ரகாளி என்றும் அழைக்கப்படுவாள். பொதுவாக இந்த மந்திரங்கள் எதிரிகளை வீழ்த்தவே பயன்படுபவையாக உள்ளன.

நம்மீது பிறரால் ஏவி விடப்படும் தீய சக்திகள் இவள் போரருளால் ஏவியவர்களைச் சென்று அழிக்கும் என்று ருக் மந்திரம் கூறுகின்றது.

சிம்ம ரூபம் கொண்டவள்.சிம்ம முகம் உடையவள். இறைவன் ஸ்ரீ பைரவரின் துணைவி. பெரிய சூலம், கபாலம், பாசம். டமருகம் இவை கொண்ட சுரகமலங்கள். கோடிக்கணக்கில் தெற்றுப் பற்கள் நிறைந்த பொந்து போன்ற முகம்.

பிரத்தியங்கிரா தேவி

சிவப்பேறிய முக்கண்கள் பிறைச்சந்திரன் ஒளி வீசும் தலை. இப்படிப்பட்ட பிரத்தியங்கிரா எட்டு சர்ப்பங்களை அணிந்திருப்பாள்.ஆயிரம் கரங்களிலும் ஆயிரம் ஆயுதங்கள். இவள் மூல மந்திரம் 20 அட்சரங்கள் கொண்டது. இத்தகைய சிறப்புடைய பிரத்தியங்கிரா தேவியின் அவதாரத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

”இரணிய கசிபு’ அரக்கர் குலத் தலைவன். இவன் தேவர்களை வெல்வதற்கு வரம் வேண்டி, கடுமையான தவம் செய்தான். அவனுடைய கடும் தவத்தினை மெச்சி சிவபெருமான் அவன்முன் தோன்றினார். ‘என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு இரணிய கசிபு தனக்கு மரணமே வரக்கூடாது என்ற வரத்தைக் கோரினார். ஆனால், சிவபெருமான் அந்த வரத்தைத் தராது உன் விருப்பப்படியே இறக்கும் வரத்தைத் தருகிறேன். நீ எப்படி இறக்க விரும்புகிறாய் என்று கேட்டார்.

இரணிய கசிபும், ‘ஐம்பூதங்கள், ஆயுதக் கருவிகள், வானவர், மனிதர், பறவை, விலங்கு யாராலும் எனக்கு மரணம் நேரக்கூடாது. இரவு நேரத்திலும் மரணம் வரக்கூடாது. பகலிலும் மரணம் வரக்கூடாது’ என்ற வரத்தினைக் கேட்டான். சிவபெருமானும் அவன் கோரியபடியே வரத்தினை அளித்தார்.

இறவா வரம் பெற்றமையால் தன்னை இறைவனாகவே கருதி அனைவரையும் அடக்கியாள முற்பட்டான். மானுடர்கள், தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் அவன் அதிகாரத்திற்கு அஞ்சினர்.

இந்த ஆணவத்தால் தானே இறைவனாகக் கருதித் தன்னை வணங்க ஆணையிட்டான். இறைவன் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது என்றும், அதற்குப் பதில் தன்னுடைய பெயரான ‘இரண்யாய நம’என்பதையே சொல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டான்.

இறைவனிடம் வரம் வாங்கி மேனிலை அடைந்தவன் அந்த இறைவனின் பெயரைக்கூட சொல்லக்கூடாது என்று ஆணையிடுகிறானே என்று வருந்தினர். இறுதியில் தங்கள் துயரத்திற்கு முடிவு கட்டுபவர் திருமாலே என்று முடிவு செய்து அவரிடம் தங்கள் குறையினைத் தெரி வித்தனர்.

திருமாலும், அவர்களை நோக்கி வருத்தம் வேண்டாம். இரண்யனுக்குப் பிறக்கும் அவன் மகன் என் தீவிர பக்தனாவான். அவன் மூலமே அவனுக்கு மரணம் சம்பவிக்கும். தகுந்த நேரத்தில் நான் அவனை சம்ஹாரம் செய்வேன் என்றார். அவர்களும் ஆறுதலடைந்து திரும்பிச் சென்றார்கள்.

இரணிய கசிபுவுக்கு பிரகலாதன் என்ற ஒரு மகன் பிறந்தான். குழந்தைப் பருவம் முதலே அவன் திருமாலின் தீவிர பக்தனாக விளங்கினான்.உரிய வயதில் கல்வி கற்க குருகுலம் அனுப்பினார்கள்.

கல்வி துவங்குவதற்கு முன் கடவுள் வணக்கம் சொல்லச் சொன்னார்கள். அந்த நாட்டில் இரண்யன் அல்லவா கடவுள். ஆகவே, ‘ஓம் இரண்யாய நம’ என்று கூறச் சொன்னார்கள்.

பிரத்தியங்கிரா தேவி

ஆனால், குரு தவறாகக் கூறுகின்றார் என்று சொல்லி -உண்மையான கடவுளான நாராயணனின் பெயரை ‘ஓம் நமோ நாராயணாய நம’ என்று சொன்னான் பிரகலாதன். குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லைஎன்று மறுபடியும் ‘ஓம் இரண்யாய நம’ என்று சொன்னார் குரு. மறுபடியும் பிரகலாதன் ‘ஓம் நமோ நாராயணாய நம’ என்று சொன்னான். மறுபடியும் திருத்திச் சொன்னார். ஆனாலும். பிரகலாதன் முன்பு சொன்ன மாதிரியே ‘ஓம் நமோநாராயணாய நம’ என்று உறுதிபடக் கூறினான். பிரகலாதன் சொல்வது உண்மையான கருத்தாக இருந்தாலும் நமக்கேன் அரசாங்கத்து வீண் பொல்லாப்பு என்று எண்ணி அரண்மனைக்குச் செய்தி சொல்லி பிரகலாதனைத் திருப்பி அனுப்பினார்.

குருகுலத்தில் இருந்து வந்த செய்து கேட்டு இரணியன் கொதித்துப் போனான். தன்னை மூவுலக வாசிகளும் தலைவனாக ஏற்றுக் கொண்ட நிலையில் தன் மைந்தனே தன்னுடைய கருத்துக்கு மாறுபடுவதா என்று பொங்கினான்.

பிரகலாதனை நயமாக அழைத்து தானே இறைவன் என்பதை ஒப்புக் கொள்ளும்படிச் சொன்னான். ஆனாலும் பிரகலாதன் சர்வ வல்லமை படைத்த கடவுள் எங்கே, இந்த நாட்டுக்கு மட்டுமே அதிபதி யான நீங்கள் எங்கே, என்று மறுமொழி கூறினான்.

இரணியனுக்குக் கோபம் உச்சமடைந்தது. என்னிலும் வலிமையான இறைவன் எங்கிருக்கிறான் என்றான். பிரகலாதனும் ‘எங்கும் இருக்கிறார், தூணிலும்இருப்பார், துரும்பிலும் இருப்பார். அவர் இல்லாத பொருளே இல்லை” என்றான்.

“அப்படியானால் நீ சர்வ வல்லமை பொருந்தியவராக நினைக்கும் உன் நாராயணன் இந்தத் தூணில் இருக்கிறானா?” என்று இரணியன் கோபமாகக் கேட்டான்.

நிச்சயமாக என்றான் பிரகலாதன்.

அப்படியானால் அவனை என் கதையாலே அடித்து அவன் கதையை முடிக்கிறேன் பார் என்றவாறே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டி தூணை ஓங்கி அடித்தான். தூண் இரண்டாகப் பிளந்து விழுந்தது. பார்த்தாயா உன் நாராயணனை! தூள் தூளாகி

விட்டான் என்று கூறி ஆணவமாகச் சிரித்தான் இரணியன். மறுகணம் அந்தப் பிளந்து விழுந்த தூணில் இருந்து திருமால் நாசிங்க வடிவமாக இரணியனின் முன்தோன்றினார்.

என்ன,ஏது என்று நிதானிப்பதற்குள் இரணியன் மீது பாய்ந்து தாக்கத் தொடங்கியது.விலங்காகவும் இல்லாமல், மனிதனாகவும் இல்லாமல். தேவனாகவும் இல்லாமல் கூட்டுக் கலவையாகத் தோன்றிய அந்த நரசிங்கம். இரவும் பகலுமற்ற மாலை வேளையில், பூமியில் கொல்லாமல் தன்னுடைய மடியில் இரணியகசிபுவைச் சாய்த்து அவன் உடலைத் தன் கை நகங்களால் பிளந்து ரத்தத்தைக் குடித்துக் கொன்றது.

தேவர்களும் மக்களும் முனிவர்களும் பெரு மகிழ்ச்சி கொண்டார்கள். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை,

அதிபயங்கரமான நீண்ட கோரைப் பற்களுடன். தொங்குகின்ற நீண்ட நாக்குடன் கோபத்தினால் சிவந்த கண்களுடனும் கூர்மையான நீண்ட நகங்களுடன் தோன்றிய நாசிம்மம் இரணியனைக் கொன்று முடிந்த பின்னும் கோபம் குறையாதவராகவே காணப்பட்டது.

இரணியனைக் கொன்று அவனுடைய ரத்தத்தை உட்கொண்டதால் அவனுடைய ஆணவம் இவரிடம் வந்து சேர்ந்தது. அதுமட்டுமல்ல, இரணியனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷமும் நரசிம்பத்திற்கு வந்து சேர்ந்து விட்டபடியால் கோபம் தணிவதற்குப் பதில் மேலும் கோபம் மேலிட கர்ஜனை செய்து கொண்டே அண்ட சராசரங்களையும் நடுநடுங்க வைத்தார்.

நரசிம்மத்தின் கோபத்தைத் தணிவிக்க பிரகலாதனும் தேவர்களும் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஆனால், அவரின் கோபம் தணிந்த பாடில்லை.

இறுதியாகத் தேவர்கள் எல்லோரும் சிவபெருமானைச் சரண் அடைந்தார்கள். தேவர்களின் முறையீட்டைக் கேட்ட சிவபெருமான் தன் பூதகணங்களின் தலைவனாம் தன் வடிவேயான அகோர மூர்த்தியை அனுப்பி வைக்கிறார்.

ஆனால், நாசிம்மத்தின் ஆவேச சக்தியை அவராலும் தணிக்க முடியாமல் போக வீரபத்திர வடிவத்திலிருந்து ருத்ர மூர்த்தியாம் சிவபெருமான் சரப்பட்சியும், மனித உடலும், மிருகமும் கலந்து ஒரு மகா பயங்கர வடிவெடுக்கின்றார். சரப்பட்சி என்பது சிங்கங்களை கொன்று உண்ணும் பெரிய பறவையாகும். அவர் தான் ஸ்ரீ சரபேஸ்வரர்.

இவர் சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படுகிறார். எட்டு கால்களும் இரண்டு முகங்களும் நான்கு கைகளும் கூர்மையான நகங்களும் நான்கு கைகளும்கூர்மையான நகங்கருமத்திலும் இறக்கைகளும் சிம்மத்தின் வால்போல் நீண்ட வாலும், கருடனைப் போன்ற மூக்கும், காளியைப் போன்ற தெத்துப் பல்லும் கொண்டு தோன்றும் சரபேஸ்வரருக்கு இரு இறக்கைகளிலும் பத்ரகாளியும் துர்க்கையும் முறையே பிரத்தியங்கிரா, ஜவினி என யந்திர வடிவில் சகதியாக விளங்குகிறார்கள்.

நீண்ட நாட்கள் நீடித்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்தியங்கிரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார். நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் பிரத்தியங்கிரா தேவி, அத்துடன் நரசிம்மர் சாந்தமானார். ஆனாலும், முழுவதும் நீங்கவில்லை. சரபத்தினை நரசிம்மம் தாக்கத் தொடங்கியது. சரபத்தினை தாக்குதல் நரசிம்மத்தினைச் சாந்தப்படுத்தவில்லை.

முடிவில் நரசிம்மத்தின் பாதங்களை இருபுறமும் பிடித்து இரண்டாகக் கிழித்துவிட முயலுகையில் தன்னுணர்வு பெற்ற மகாவிஷ்ணு 18 சுலோகங்களால் சரபேசுவரரைத் துதிக்கிறார். அதுவே சரபரின் அஷ்டோத்ர சத நாமாவலியாகத் திகழ்கிறது.

நரசிம்மரைச் சாந்தப்படுத்திய சரபேஸ்வரரே சத்ருசைகர். இவரைத் துதிப்போருக்கு எதிரான சக்தியெல்லாம் உடன் ஒழிவது மட்டுமின்றி சரணடைந்தோரின் பிறவிப் பிணியெல்லாம் கூட தீர்ந்துவிடும். சரபேஸ்வரருடன் இருக்கும் பிரத்தியங்கிரா தேவியை வழிபடுவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்த்து கொள்ள முடியும்.

பிரத்தியங்கிரா தேவி பிரத்தியங்கிரஸ், பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா, ருத்திர பிரத்தியங்கிரா, உக்கிர பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா,பிராம்மி பிரத்தியங்கிரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கிரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.

கலியுக கடவுளான இவளை உபவாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவர்களாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கவுரி, லட்சுமி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாலும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும்.

அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும். அமாவாசை, பவுர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிடித்தமான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும். உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் பிடித்தமானது.

பிரத்தியங்கிரா தேவி

பிரத்தியங்கிரா தேவி-மூலமந்திரம்

ஓம்- க்ஷம்
பக்ஷஜ்வாலா ஜிஹ்வே
கராள தம்ஸ்டரே
பிரத் யங்கிரே
க்ஷம்-ஹரீம் ஹும்பட
– சுவாஹ என்பதாகும்.

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் தியானம், பூஜை, உபாசனை விதிமுறை ஆகியவற்றை சித்திபெற்ற நற்குருவிடம் தெளிவாகப் பாடம் கேட்டுக் கொண்டு, குருவின் முன் அவர் தம் சந்நிதானத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பின் விதிமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு தனியாக பூஜைகளை ஆரம்பிக்க வேண்டும்.

பிரத்தியங்கிரா தேவிமூலமந்திரம் சொல்லும் விதம்

பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரி மகா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.

ஓம் என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும் பக்ஷஸ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் கராளதம்ஸ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் பிரத்யங்கரே என்று நான்காவது இடைவெளியும், க்ஷக்ஷம் கிரீம் ஹிம் பட்ஸ்வராகா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று வினாடிகள் என்று கொள்ளலாம்.

கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூலமந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கினால், இதில் சம்ஹாரத் தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்றுகூறலாம்.

பிரத்தியங்கிரா தேவி-திருநாமங்கள்

இதன் காரணமாக பிரத்தியங்கிரா தேவி பல பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.

ஓங்கார ரூபிணியாக இருந்து விசுவ ரூபத்தில் திகழ்ந்து புத்தி முக்தியை அளிப்பதால் புத்தி முக்தி பலப்ராதாயை என்று அழைக்கப்படுகிறாள்.

சகல ஐஸ்வர்யங்களையும் உடையவர் என்பதால் சகல ஐஸ்வர்ய தாரின்யை என்று அழைக்கப்படுகிறாள்.

பக்தர்களுக்கு நவகிரகத்தின் சாரத்தில் இருந்து காப்பதால் நவகிரக ரூபிண்யை என்று அழைக்கப்படுகிறாள்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular