கார்த்திகை மாத பலன்கள்-2022
கார்த்திகை 19ம் தேதி பரணி தீபம். அன்று முன்னோர்களுக்காகவும். 20ம் தேதி திருக்கார்த்திகை தீபம் அன்று சிவபெருமானுக்கும்,லட்சுமி நரசிம்மருக்காகவும், 21ம் தேதி சர்வாலய தீபத்திற்க்காக குலதெய்வம் மற்றும் வசிப்பிடங்களில் உள்ள தெய்வங்களுக்காகவும், 22ம் தேதி ஸ்ரீ பாஞ்சராத்ர தீபம் அன்று விஷ்ணுவிற்காகவும் சாஸ்திரங்களில் சொல்லியபடி பத்துவிதமான தீபங்களை ஏற்றலாம்.
➡உலகின் பல தேசங்களில் அரசியல் சூழ்நிலை காரணமாக பங்கு வர்த்தகத்தில் தடுமாற்றங்கள் உண்டாகும்.
➡இந்தியாவில் விவசாய பொருள்கள் விலை குறையும்.
➡பொதுமக்களிடம் தாராள பணப்புழக்கம் ஏற்படும்.
➡பண புழக்கம் அதிகரிக்க மத்திய அரசு நல்ல வழி சீர்திருத்தங்களை செய்யும்.
➡ தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். பல கோயில்களுக்கு கும்பாபிஷேகத்திற்கான திட்டங்கள் தீட்டி நாட்களை குறிப்பார்கள்.
➡மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். மக்களுக்கு தொற்று நோயில் இருந்து விடுதலை கிடைக்கும்.
➡ரியல் எஸ்டேட் துறை மந்தம் அடையும்.பல கட்டுமான பணிகளுக்கு தடை உண்டாகும்.
இம்மாதம் 18ஆம் தேதி கைசிக ஏகாதசி வைகுண்ட ஏகாதேசி விட புனிதமானது. அன்று கைசிக புராணம் படித்தலும் கேட்டாலும் பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் விலகும்.