ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2023:மகரம்
சனி பகவான் அருள் பெற்ற மகர ராசி! அன்பர்களே!பிறக்கும் புத்தாண்டு ஜென்மச் சனி விலகிய பிறகு உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். அது மட்டுமல்லாமல் அதன்பிறகு இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி மற்றும் ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கின்றது. அதன் விளைவாக படிப்படியாக நல்ல முன்னேற்றங்கள் வரலாம். வருடத் தொடக்கத்தில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் முதல் மூன்று மாதங்களுக்கு முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. விரயங்கள் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். விழிப்புணர்ச்சி யோடு செயல்பட்டாலும் இடையிடையே தடைகளும், தாமதங்களும் வந்து மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். சுயஜாதக அடிப்படையில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபட்டால் திருப்தியான வாழ்க்கை அமையும்.
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வீற்றிருக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். சகாய ஸ்தானத்தில் குருவும், விரய ஸ்தானத்தில் சூரியனோடு புதனும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். 4-ல் ராகுவும், 10-ல் கேதுவும் இருக்கிறார்கள்.சுகாதிபதி செவ்வாய் வக்ரம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.
புத்தாண்டு தொடங்கும் பொழுது குரு பார்வை 7,9, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையை தளரவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். தனவரவில் தடைகள் ஏற் பட்டாலும் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். இனத்தார் பகையும், எதிரிகளின் தொல்லையும் ஓரளவுஇருக்கத்தான் செய்யும். பதவி, உத்தியோகம் போன்றவற்றில் பிரச் சினைகள் ஏற்படாது. இடமாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் போன்றவை நிகழக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு ஒரு சிலருக்கு நீண்ட தூரத்திற்கான இடமாறுதல் வந்து சேரும்.
கவனமாக இருக்க வேண்டிய இருக்க வேண்டிய காலகட்டம்
இப்புத்தாண்டில் 4-முறை செவ்வாய் சனியின் பார்வை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். எனவே இக்காலத்தில் சொந்தங்களாலும், சொத்துக்களாலும் பிரச்சினை அதிகரிக்கும். சிந்தித்த காரியங்கள் வெற்றிபெறுவது கடினம்தான். கடுமையாக உழைத்தாலும் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனிபகவானை வழிபட்டு வருவது நல்லது. யோகபலம் பெற்ற நாளில் திருநள்ளாறு மற்றும் திருக்கொள்ளிக் காட்டில் வீற்றி து அருள்வழங்கும் சனிபகவானை முறையாக பட்டு வந்தால் முன்னேற்றம் அதிகரிக்கும்.